Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜல்லிக்கட்டு போராட்டம் 2.0 – அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உளவியல்

இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில் இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால் போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக “போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும் அந்த சுதந்திரம் நான் அளித்தது தான், என்னால் எப்போது வேண்டுமெனிலும் அதை பறிக்க முடியும்” என அப்பா குறிப்புணர்த்துவார். போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நடப்பது இது தான்.

கடந்த வாரம் போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சியாக சித்தரித்து மகத்துவப்படுத்திய சில சேனல்கள் இப்போது அதை கைவிடும் படி அறிவுறுத்தி வருகின்றன. அப்படியென்றால் கடந்த வாரம் அவர்கள் எழுச்சிக்கு தந்த முக்கியத்துவம் அரசின் விருப்பப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. போராட்டத்தின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இப்போது அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள். அவர்களின் கடந்த வாரம் ஆவேசம் போலியானது என்பது புலனாகி விட்டது. மெல்ல மெல்ல சில நாட்களில் இப்போராட்டம் முழுக்க துடைத்து அகற்றப்படும். ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் ஆழ்மனதில் அதிகார வர்க்கம் மீது ஒரு அச்சம் உள்ளது. அந்த அச்சம் குடும்பத்து மூத்தோர், மேலதிகாரிகள், அரசு எந்திரம் அனைவர் மீதும் உள்ளது தான். காவல்துறை இந்த அச்சத்தின் தூல வடிவம். காவல்துறையை அஞ்சும் வரை நாம் குடும்பத்துக்கு, வேலையிடத்தில் அதிகாரிகளுக்கு, சமூகத்தின் பல்வேறு அதிகார அமைப்புகளுக்கு பணிவோம்.
 அதிகார வர்க்கத்துக்கு இந்திய மனம் மீதுள்ள பருந்துப்பிடி வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் முறியடிக்கப்பட்டது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் போது மக்கள் சுயேச்சையாய் தலையில் தடியடி வாங்கி காயத்துடன் கூட்டம் கூட்டமாய் சரிந்தார்கள். அந்த ஆத்மசக்தியை காந்தியால் அளிக்க முடிந்தது. ஆனால் அது வரலாற்றி இனி மீள நிகழுமா என தெரியவில்லை.
தமிழர்கள் என்னதான் வீரமானவர்கள் என்றாலும் அதிகாரத்தின் முன் பணியக் கூடியவர்களும் தான். உலகம் முழுக்க அவர்கள் சிறந்த உழைப்பாளிகளாய் கருதி வரவேற்கப்படுவது இதனால் தான். நீங்கள் ஒரு மலையாளியை சுலபத்தில் வேலை வாங்க முடியாது. ஆனால் தமிழன் அதிகாரத்துடன் சுலபத்துடன் முரண்பட மாட்டான். உலகம் முழுக்க தமிழர்கள் பரவி வெற்றி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இந்த அதிகார இசைவும் தான்.
கடந்த வாரம் நடந்த போராட்டம் கூட இந்த அதிகார இசைவின் நீட்சி தான். நம்மால் அரசின் இசைவுடன் பெருங்கூட்டமாய் இணைந்து போராட முடிந்தது. அரசு இசையாவிட்டால் நாம் சிதறி விடுவோம். இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு விதிவிலக்கு. அன்று போராட்டக்காரர்கள் கடும் வன்முறையை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்த தலைமுறைக்கு அந்த மனோபலம் உண்டா? எனக்குத் தெரியவில்லை.
போராட்டம் என்பது அதிகாரத்தை எதிர்ப்பது மட்டுமே. போன வாரம் நாம் உண்மையில் அதிகாரத்தை எதிர்க்கவில்லை. அதிகாரத்தின் தோளில் கையிட்டு சிரித்தபடி போராடினோம். தன் பெரும்பான்மை பலத்தை காட்ட, மக்கள் தலைவன் எனும் பெயர் வாங்க இவ்வளவு பெரிய கூட்டம் திரள வேண்டிய தேவை ஒ.பி.எஸ்ஸுக்கு இருந்தது. அதனால் அவர் அதை அனுமதித்தார். (ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகில் மக்கள் விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்கள், மிகுந்த தெளிவுடன் இருப்பார்கள் என்பதை ஒ.பி.எஸ் கணிக்கவில்லை. அவர் அதனால் ஆட்டத்தின் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றார்)
 ஆனால் அதே அதிகாரம் இப்போது நம்மை நோக்கி லத்தி தூக்குகிறது. நாம் மிரட்டும் அப்பாவைக் கண்டு அழுதபடி வீட்டுக்குள் ஓடப் போகிறோமா?
 கடந்த வாரம் நாம் மெரீனாவுக்கு கூட்டமாகவும், குடும்பத்துடனும், கைக்குழந்தையுடனும் சென்று நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். என் மனைவியும் குழந்தையுடன் அங்கு சென்றாள். எனக்கு பயம் இருக்கவில்லை. ஆனால் இப்போது சென்றால் காவல்துறை தடியடி நடத்தும். நாம் போவோமா? என் குழந்தை மீது தடியடி படுவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன். மாணவர்கள் பலர் போலீஸ் தடியடியால் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாய் ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ பார்த்தேன். இந்த இளைஞர்களின் பெற்றோர் இனி அவர்கள் மெரினாவில் குழுமுவதை விரும்புவார்களா? அவர்களுக்கு அச்சம் இருக்காதா? இது வன்முறை மீதான அச்சம் மட்டுமல்ல. போன வாரம் காவல்துறை உங்கள் நண்பன். ஆனால் இனிமேல் போராடினால் வழக்குகள் போடுவார்கள். அதை சந்திக்க நம் இளைஞர்கள் விரும்புவார்களா?
இந்த வாரம் இப்போராட்டம் எடுக்கப் போகிற வடிவம் சமகால தலைமுறையினரின் உளவியலை நமக்கு துல்லியமாக காட்டி விடும்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...