முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டு போராட்டம் 2.0 – அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையிலான உளவியல்

இந்தியாவில் சாமான்யர்கள் களத்தில் இறங்கி போராட தயங்குவதற்கு முதல் காரணம் போலீஸ் தாக்குதல், வழக்கு, அன்றாட வாழ்வில் ஏற்படும் இழப்புகள், பாதுகாப்பின்மை, இவை சேர்ந்து ஏற்படும் ஒட்டுமொத்தமான பயம். மெரீனா போராட்டத்தின் முதல் வாரத்தில் இவை எதுவும் இல்லை. ஆரம்பத்திலேயே இதை மாணவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால் லட்சக்கணக்கில் குவிந்தார்கள். அவர்கள் என்னதான் மோடியையும் ஒ.பி.எஸ்ஸையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினாலும் போலீஸார் இணக்கம் காட்டும் வரை அது அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் ஆகாது. அதிகார வர்க்கத்தின் இசைவுடன் நிகழ்ந்த போராட்டம் தான். ஏனென்றால் போலிஸார் அரசு எந்திரத்தின் முகம். ஆனால் இரண்டாவது வாரம் தான் இப்போராட்டம் முதன்முறையாக “போராட்டம்” ஆகிறது. அதிகார வர்க்கம் போராட்டத்தை நிறுத்த சொல்கிறது. வெளியே மண்ணில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா “போதும் வீட்டுக்குள்ள போ” என கண்டிப்பது போல இது. குழந்தை ஏற்க மறுத்தால் அப்பா பிரம்பெடுப்பார். அப்பாவின் உண்மையான முகம் இப்போது தான் குழந்தைக்கு தெரிய வரும். “நீ விளையாடும் போது என்ன தான் சுதந்திரமாய் இருந்தாலும் அந்த சுதந்திரம் நான் அளித்தது தான், என்னால் எப்போது வேண்டுமெனிலும் அதை பறிக்க முடியும்” என அப்பா குறிப்புணர்த்துவார். போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் நடப்பது இது தான்.

கடந்த வாரம் போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சியாக சித்தரித்து மகத்துவப்படுத்திய சில சேனல்கள் இப்போது அதை கைவிடும் படி அறிவுறுத்தி வருகின்றன. அப்படியென்றால் கடந்த வாரம் அவர்கள் எழுச்சிக்கு தந்த முக்கியத்துவம் அரசின் விருப்பப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகிறது. போராட்டத்தின் தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இப்போது அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள். அவர்களின் கடந்த வாரம் ஆவேசம் போலியானது என்பது புலனாகி விட்டது. மெல்ல மெல்ல சில நாட்களில் இப்போராட்டம் முழுக்க துடைத்து அகற்றப்படும். ஏனென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் ஆழ்மனதில் அதிகார வர்க்கம் மீது ஒரு அச்சம் உள்ளது. அந்த அச்சம் குடும்பத்து மூத்தோர், மேலதிகாரிகள், அரசு எந்திரம் அனைவர் மீதும் உள்ளது தான். காவல்துறை இந்த அச்சத்தின் தூல வடிவம். காவல்துறையை அஞ்சும் வரை நாம் குடும்பத்துக்கு, வேலையிடத்தில் அதிகாரிகளுக்கு, சமூகத்தின் பல்வேறு அதிகார அமைப்புகளுக்கு பணிவோம்.
 அதிகார வர்க்கத்துக்கு இந்திய மனம் மீதுள்ள பருந்துப்பிடி வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் முறியடிக்கப்பட்டது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் போது மக்கள் சுயேச்சையாய் தலையில் தடியடி வாங்கி காயத்துடன் கூட்டம் கூட்டமாய் சரிந்தார்கள். அந்த ஆத்மசக்தியை காந்தியால் அளிக்க முடிந்தது. ஆனால் அது வரலாற்றி இனி மீள நிகழுமா என தெரியவில்லை.
தமிழர்கள் என்னதான் வீரமானவர்கள் என்றாலும் அதிகாரத்தின் முன் பணியக் கூடியவர்களும் தான். உலகம் முழுக்க அவர்கள் சிறந்த உழைப்பாளிகளாய் கருதி வரவேற்கப்படுவது இதனால் தான். நீங்கள் ஒரு மலையாளியை சுலபத்தில் வேலை வாங்க முடியாது. ஆனால் தமிழன் அதிகாரத்துடன் சுலபத்துடன் முரண்பட மாட்டான். உலகம் முழுக்க தமிழர்கள் பரவி வெற்றி அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இந்த அதிகார இசைவும் தான்.
கடந்த வாரம் நடந்த போராட்டம் கூட இந்த அதிகார இசைவின் நீட்சி தான். நம்மால் அரசின் இசைவுடன் பெருங்கூட்டமாய் இணைந்து போராட முடிந்தது. அரசு இசையாவிட்டால் நாம் சிதறி விடுவோம். இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு விதிவிலக்கு. அன்று போராட்டக்காரர்கள் கடும் வன்முறையை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்த தலைமுறைக்கு அந்த மனோபலம் உண்டா? எனக்குத் தெரியவில்லை.
போராட்டம் என்பது அதிகாரத்தை எதிர்ப்பது மட்டுமே. போன வாரம் நாம் உண்மையில் அதிகாரத்தை எதிர்க்கவில்லை. அதிகாரத்தின் தோளில் கையிட்டு சிரித்தபடி போராடினோம். தன் பெரும்பான்மை பலத்தை காட்ட, மக்கள் தலைவன் எனும் பெயர் வாங்க இவ்வளவு பெரிய கூட்டம் திரள வேண்டிய தேவை ஒ.பி.எஸ்ஸுக்கு இருந்தது. அதனால் அவர் அதை அனுமதித்தார். (ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகில் மக்கள் விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்கள், மிகுந்த தெளிவுடன் இருப்பார்கள் என்பதை ஒ.பி.எஸ் கணிக்கவில்லை. அவர் அதனால் ஆட்டத்தின் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றார்)
 ஆனால் அதே அதிகாரம் இப்போது நம்மை நோக்கி லத்தி தூக்குகிறது. நாம் மிரட்டும் அப்பாவைக் கண்டு அழுதபடி வீட்டுக்குள் ஓடப் போகிறோமா?
 கடந்த வாரம் நாம் மெரீனாவுக்கு கூட்டமாகவும், குடும்பத்துடனும், கைக்குழந்தையுடனும் சென்று நம் எதிர்ப்பை பதிவு செய்தோம். என் மனைவியும் குழந்தையுடன் அங்கு சென்றாள். எனக்கு பயம் இருக்கவில்லை. ஆனால் இப்போது சென்றால் காவல்துறை தடியடி நடத்தும். நாம் போவோமா? என் குழந்தை மீது தடியடி படுவதை நான் நிச்சயம் விரும்ப மாட்டேன். மாணவர்கள் பலர் போலீஸ் தடியடியால் காயம்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாய் ஒரு வாட்ஸ் ஆப் வீடியோ பார்த்தேன். இந்த இளைஞர்களின் பெற்றோர் இனி அவர்கள் மெரினாவில் குழுமுவதை விரும்புவார்களா? அவர்களுக்கு அச்சம் இருக்காதா? இது வன்முறை மீதான அச்சம் மட்டுமல்ல. போன வாரம் காவல்துறை உங்கள் நண்பன். ஆனால் இனிமேல் போராடினால் வழக்குகள் போடுவார்கள். அதை சந்திக்க நம் இளைஞர்கள் விரும்புவார்களா?
இந்த வாரம் இப்போராட்டம் எடுக்கப் போகிற வடிவம் சமகால தலைமுறையினரின் உளவியலை நமக்கு துல்லியமாக காட்டி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...