Skip to main content

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்: ஒ.பி.எஸ்ஸின் முதல் வெற்றி

Image result for ஒ.பி.எஸ் மோடி
என்னதான் மக்கள் ஒ.பி.எஸ்ஸை டம்மி என கலாய்த்தாலும் எனக்கு அவர் மீது மதிப்புண்டு. பிரச்சனைகளை முன்கூறாக கணித்து புன்னகைத்தபடியே காய்நகர்த்தி அமைதியாக ஜெயித்து விடுவார். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் அவரது ராஜதந்திரத்துக்கான சிறந்த உதாரணம்.

 இப்போராட்டத்தில் இணைந்த லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் உண்மையானவை. பாராட்டுக்குரியவை. ஆனால் இன்னொரு பக்கம், இதே மக்கள் ஆளும் அரசின் நாடகம் ஒன்றின் ஒப்பந்தம் செய்யப்படாத நடிகர்களும் தாம். அவர்களுக்கே தெரியாமல் விரைவில் ஒ.பி.எஸ் மொத்த போராட்டத்தையும் ஹைஜேக் செய்யப் போகிறார். ஒ.பி.எஸ் இயக்குநர் என்றார் மோடி தயாரிப்பாளர். வாடிவாசலை ஒ.பி.எஸ் திறந்து வைப்பதுடன் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தில் அவர் மீதான மக்கள் அபிமானம் இரட்டிப்பாகும். குறைந்தது, ஒரு மக்கள் ஆதரவு நிகழ்வுக்கு முகம் கொடுத்த பெருமை கிடைக்கும்.
 முதல்வர் ஆன பிறகு இப்படியான ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவே இல்லை. இதன் மூலம் உறுதியற்ற, கட்சிக்குள் அதிகாரமற்ற, செயலூக்கமற்ற முதல்வர் எனும் அவப்பெயரை அவர் சுலபத்தில் துடைத்து எறியப் போகிறார். மக்கள் ஆதரவு எனும் ஆயுதம் கொண்டு சசிகலாவுடனான யுத்தத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள போகிறார்.

தமிழகம் முழுக்க நடந்த இப்போராட்டங்களுக்கு காவலர்கள் அளித்த ஒத்துழைப்பு, அனைத்து டி.வி சேனல்களுக்கு அளித்த முக்கியத்துவம் போராட்டங்கள் நிச்சயம் ஒ.பி.எஸ் / பன்னீர் செல்வத்தின் ஆசியுடன் (ஆனால் பங்கேற்றவர்களுக்கு இது தெரியாமலே) நடந்தது என்பதை காட்டுகிறது. புத்தாண்டு இரவு மக்கள் கடற்கரையில் குழுமக் கூடாது என்பதற்காய் எல்லா சாலை வழிகளையும் அடைத்த காவல்துறை இம்முறை அப்படியான எந்த தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. போக்குவரத்துக்கும் எந்த தடையும் இல்லை. பொதுவாக இது போன்ற மாணவர் எழுச்சியை பல வழிகளில் அடக்க முயலும் அரசு இம்முறை புன்னகையுடன் “போங்க போங்க” என்றது. இப்போராட்டங்களை நீங்கள் ஈழப்போரின் போதான தமிழ்தேசிய உணர்வாளர்களின் போராட்டங்களுடன் ஒப்பிடுங்கள். அன்றும் மிகப்பெரிய உணர்வலை எழுந்தது. ஆனால் கூட்டங்கள் நடப்பதில் காவலர்கள் கடும் கெடுபிடிகள் போட்டனர். அன்று அரசு எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அப்போராட்டம் வளர முடியாத வண்ணம் செய்தது. இம்முறை முழுக்க நிலைமை நேர்மாறாக உள்ளது.
 நிர்பயா கொலையின் போது தில்லி ஜந்தர் மந்தரில் நடந்த பெரும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு எதிராக இருந்தன. ஆனால் இப்போராட்டங்களில் அத்தகைய அரசு விரோதம் இல்லை. சிலர் அரசும் காவல்துறையும் மக்கள் உணர்வுகளை மதித்து அனுமதி அளிக்கிறது என்றும் சொல்லலாம். மற்றும் சிலர் மக்களை தம் திரைக்கதைக்கு ஏற்ப இயங்க அரசு அனுமதிக்கிறது என்றும் பார்க்கலாம்.


இப்போராட்டங்கள் மக்களின் ஒன்றிணைந்து செயல்படும் எழுச்சி உணர்வுக்கு ஒரு ஊக்கமாக, நாளைய போராட்டங்களுக்கு மாதிரியாக இருக்கும் என்பதில் நிச்சயம் மறுப்பில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் நடந்த எழுச்சிகளில் உடனடி வெற்றி பெறும் ஒரே போராட்டம் என்ற முறையில் ஒரு நிறைவளிக்கும் அரசியல் நிகழ்வு இது. ஒ.பி.எஸ்ஸும் கோலடித்தால் என்ன இறுதி நொடிக்கு சற்று முன்னால் வரை மக்களும் ஆடினார்களே. நமக்கு அது போதும்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...