நேற்று என் வீட்டருகே ஒரு திடலில்
ஒரு அரசியல் தட்டியை கண்டு திகைத்து நின்று விட்டேன். ஒரு பக்கம் அம்பேத்கர், இன்னொரு
பக்கம் மோடி. விடுதலை சிறுத்தைகள் பா.ஜ.கவுடன் கூட்டம் நடத்துகிறார்களோ என குழம்பிப்
போனேன். கவனித்தேன். அது பா.ஜ.க நடத்தும் தலித்துகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் உள்ளூர் தலித் தலைவர்களுக்கோ உதவி பெறுபவர்களுக்கோ அம்பேத்கரையும்
மோடியையும் இணைத்துப் பார்ப்பதில் சங்கடமில்லை. இது இப்படியே போனால் அடுத்த ஐந்தாண்டுகளில்
பா.ஜ.க விடுதலை சிறுத்தைகளை முழுங்கி விடும் எனத் தோன்றுகிறது. தமிழகத்தில் தலித்துகளையே
இந்துத்துவர் தம் பிரதான இலக்காக கருதுகிறார்கள். தலித்துகளில் அம்பேத்கரை கற்றுணராதவர்கள்
எளிதில் இந்துத்துவ பிரச்சாரத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். அதன் மூலம் சாதியமைப்பில்
தாம் மேல்நிலையாக்கம் பெறுவதாய், ஏற்றுக் கொள்ளப்படுவதாய் அவர்களுக்கு மனப்பிராந்தி
ஏற்படலாம். பா.ஜ.க அம்பேத்கரை ஒரு இந்துத்துவா பிம்பமாய் மறுகட்டமைக்கும் காலம் தொலைவில்
இல்லை.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments