Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரை பற்றி ஜெ.பி ராஜேந்திரன்


ஜெ.பி ராஜேந்திரன் லண்டனில் வசிக்கும் உளவியலாளர். நுண்மையான வாசகர். தனித்துவமான பார்வை கொண்டவர். அவர் எனது ”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரைக்கு ஒரு சிறப்பான எதிர்வினையை முகநூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதையும் அதன் மொழியாக்கத்தையும் கீழே தந்துள்ளேன்:
I quite like this article Abilash Chandran.. fairly thorough and comprehensive 360 degree look at Prajna - the transcendental wisdom and its ramifications in linguistics. There is an extrapolation of Space and time continuum and it's association to essence of meaning in language you have touched upon. I kept thinking about this for a while to realise it is the same concept of Kant's 'Thing in itself'. Not sure if you kept this in back of your mind while dealing with this. Anyway helped me to refresh my thinking on the same. Thought I would highlight the same to you. Also NLP or neurolinguistics has many a practical applications to debride the attached emotions to understandings based on these principles too. Just quote about the thing in itself for sake of completion.

What is the thing in itself?
thing-in-itself definition. A notion in the philosophy of Immanuel Kant. A thing-in-itself is an object as it would appear to us if we did not have to approach it under the conditions of space and time.

மொழியாக்கம்:
அபிலாஷ், உங்களது இக்கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. முற்றுமுழுதாய், விரிவாய் 360 டிகிரி கோணத்தில் பிரக்ஞையை, மொழியியலில் அதன் சிக்கலான விளைவுகளை அலசும் கட்டுரை. காலம் மற்றும் வெளியின் கணுத்துவம் (தீவிர நிலைகள் மட்டும் வெளித்தெரியும் நீட்சி) பற்றிய அடிப்படையான ஊகம் கொண்டு எதிர்காலத்தில் சில போக்குகள் எப்படி தொடரப் போகின்றன, இதற்கு மொழியின் அர்த்தத்தின் சாரத்துடனான உறவு என்ன என தொட்டிருக்கிறீர்கள்.நான் இதைப் பற்றி சற்று நேரம் சிந்தித்தபடி இருந்த போது சட்டெனத் தோன்றியது: நீங்கள் பேசுவதையே காண்ட் thing-in-itself என சிந்தித்திருக்கிறார். நீங்களும் எழுதும் போது இதை மனதில் கொண்டிருந்தீர்களா என்பது தெரியவில்லை. எனக்கு இவ்விசயத்தில் என் சிந்தனைகளை புதுப்பிக்க இக்கட்டுரை உதவியது. இதை உங்களிடம் குறிப்பிட்டு சொல்லத் தோன்றியது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் உணர்வுகளில் இருந்து புரிதலை தனித்துக் காட்ட நரம்பணு-மொழியியல் நடைமுறை சார்ந்த பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதை முழுமை பெறச் செய்ய thing-in-itself பற்றின அகராதி விளக்கத்தை கீழே தந்துள்ளேன்:

Thing-in-itself - இம்மானுவல் காண்டின் தத்துவத்தில் உள்ள ஒரு கருத்தமைவு, கால-வெளி சார்ந்து ஒரு பொருளை நாம் அணுகாத போது அது நமக்கு எப்படித் தோன்றுமே அதுவே Thing-in-itself என்பது. 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...