Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரை பற்றி ஜெ.பி ராஜேந்திரன்


ஜெ.பி ராஜேந்திரன் லண்டனில் வசிக்கும் உளவியலாளர். நுண்மையான வாசகர். தனித்துவமான பார்வை கொண்டவர். அவர் எனது ”பிரக்ஞை என்றால் என்ன?” கட்டுரைக்கு ஒரு சிறப்பான எதிர்வினையை முகநூலில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதையும் அதன் மொழியாக்கத்தையும் கீழே தந்துள்ளேன்:
I quite like this article Abilash Chandran.. fairly thorough and comprehensive 360 degree look at Prajna - the transcendental wisdom and its ramifications in linguistics. There is an extrapolation of Space and time continuum and it's association to essence of meaning in language you have touched upon. I kept thinking about this for a while to realise it is the same concept of Kant's 'Thing in itself'. Not sure if you kept this in back of your mind while dealing with this. Anyway helped me to refresh my thinking on the same. Thought I would highlight the same to you. Also NLP or neurolinguistics has many a practical applications to debride the attached emotions to understandings based on these principles too. Just quote about the thing in itself for sake of completion.

What is the thing in itself?
thing-in-itself definition. A notion in the philosophy of Immanuel Kant. A thing-in-itself is an object as it would appear to us if we did not have to approach it under the conditions of space and time.

மொழியாக்கம்:
அபிலாஷ், உங்களது இக்கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. முற்றுமுழுதாய், விரிவாய் 360 டிகிரி கோணத்தில் பிரக்ஞையை, மொழியியலில் அதன் சிக்கலான விளைவுகளை அலசும் கட்டுரை. காலம் மற்றும் வெளியின் கணுத்துவம் (தீவிர நிலைகள் மட்டும் வெளித்தெரியும் நீட்சி) பற்றிய அடிப்படையான ஊகம் கொண்டு எதிர்காலத்தில் சில போக்குகள் எப்படி தொடரப் போகின்றன, இதற்கு மொழியின் அர்த்தத்தின் சாரத்துடனான உறவு என்ன என தொட்டிருக்கிறீர்கள்.நான் இதைப் பற்றி சற்று நேரம் சிந்தித்தபடி இருந்த போது சட்டெனத் தோன்றியது: நீங்கள் பேசுவதையே காண்ட் thing-in-itself என சிந்தித்திருக்கிறார். நீங்களும் எழுதும் போது இதை மனதில் கொண்டிருந்தீர்களா என்பது தெரியவில்லை. எனக்கு இவ்விசயத்தில் என் சிந்தனைகளை புதுப்பிக்க இக்கட்டுரை உதவியது. இதை உங்களிடம் குறிப்பிட்டு சொல்லத் தோன்றியது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் உணர்வுகளில் இருந்து புரிதலை தனித்துக் காட்ட நரம்பணு-மொழியியல் நடைமுறை சார்ந்த பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதை முழுமை பெறச் செய்ய thing-in-itself பற்றின அகராதி விளக்கத்தை கீழே தந்துள்ளேன்:

Thing-in-itself - இம்மானுவல் காண்டின் தத்துவத்தில் உள்ள ஒரு கருத்தமைவு, கால-வெளி சார்ந்து ஒரு பொருளை நாம் அணுகாத போது அது நமக்கு எப்படித் தோன்றுமே அதுவே Thing-in-itself என்பது. 

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...