Skip to main content

Posts

Showing posts from November, 2017

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி

அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).

சிகரெட் புடிங்க மாமா!

அஜித் மற்றும் ரம்பா நடித்த ” ராசி ” டிவியில் ஓடிக் கொண்டிருந்தது . தாய் மாமன் – அவரை உயிருக்குயிராய் நேசிக்கும் மாமா மகள் – குடும்பத் தகராறு , ஈகோ என பாரதிராஜா பாணியிலான படம் . ஒரு காட்சியில் அஜித்தை அவரது ரம்பாவின் அப்பா அவமதித்து விட , அஜித் துண்டை உதறி வீட்டை விட்டு வெளியேற அவருக்குப் பின்னால் ஓடிப் போய் அமைதிப்படுத்த முயல்கிறார் ரம்பா . ஆற்றுப்படுத்தும் நோக்கில் ரம்பா அவருக்கு சிகரெட்டுகள் நீட்டுகிறார் . சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என அஜித் மறுக்கிறார் . உடனே ரம்பா “ இல்லை மாமா ஆம்பளைன்னா ஒரு நாளைக்கு நான்கு சிக்ரெட்டாவது புகைக்கணும் ” என்று கெஞ்சுகிறார் . அஜித்தும் நெகிழ்ந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஊத முயன்று இருமி சிரமப்படுகிறார் . அடுத்து ஒரு அழகான பிம்பம் வருகிறது . அஜித் தன் வாயில் இருந்து புகையை ரம்பாவின் முகத்தில் ஊதுகிறார் . ரம்பா சிலித்து கிளர்ந்து நெளிகிறார் . தமிழின் ஆக செக்ஸியான காட்சிகளில் ஒன்று இது எனத் தோன்றுகிறது .

டிசைன் அப்பிடி!

எனக்கு புத்தக வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு ; ஆனால் அதைப் பற்றி எந்த ஞானமும் இல்லை . எந்த புதுப் புத்தகத்தைக் கண்டாலும் அதை வாசிப்பது இரண்டாம் பட்சம் தான் . அதன் காகிதம் , அட்டை வடிவமைப்பு , எழுத்துரு , பின்னட்டை வாசகம் ஆகிய அம்சங்களைத் தான் முதலில் உற்று கவனித்து ரசிப்பேன் . புத்தகத்தின் உள்ளடக்கமான எழுத்துக்கும் இந்த பதிப்புக் கலை அம்சங்களுக்கும் சம்மந்தமில்லை . எழுத்து மீது அணிவிக்கப்பட்ட ஆடைகளே இவை . அலங்காரம் என சொல்லவில்லை . எழுத்துக்கு புதுப் புது அடுக்குகளை ரசனையின் அடிப்படையில் இவை உருவாக்குகின்றன . பதிப்பாளன் எந்தளவுக்கு சிறந்த ரசிகன் என்பதை அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பின் அழகியல் மற்றும் நேர்த்தியை வைத்து சொல்லி விடலாம் .

மிஷ்கினை துப்பறிவோம் (2)

“ துப்பறிவாளனில் ” தன்னிடம் வேலை கேட்டு தொந்தரவு செய்யும் மல்லிகாவை கணியன் பூங்குன்றன் ஏற்கும் காட்சி சற்று விசித்திரமாக இருக்கும் . அவள் கையில் துடைப்பட்டக் கட்டையை கொடுத்து வீட்டுக்குள் பிடித்துத் தள்ளுவான் . தரையில் விழுந்து கிடக்கும் அவள் முகம் மலர்ந்து சிரிப்பாள் . ஏன் இந்த வன்மம் ? அவள் ஏன் இதற்கு அகம் மலர்கிறாள் ? இதை பெண்ணிய கண்ணாடி வழி மொட்டையாய் பார்த்தால் உங்களுக்கு மிஷ்கினை நோக்கி “ ஏன் ஆணாதிக்கவாதியே ” என சாமியாடத் தோன்றும் . ஆனால் இக்காட்சியில் ஒவ்வொன்றும் ஒரு உருவகம் .