முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி

அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).

ஆஸிஸின் நீண்ட கதைக் கவிதைகள் எனக்கு அதிகம் பிடித்திருந்தன. ”நீலக்குறிஞ்ஞி” என்றொரு கவிதை காதலின் வீரியத்தை, ஆழத்தை அறிய அதை இழக்க வேண்டும். பின் நீண்ட காலம் அதைப் பிரிந்து பாலைவனங்களில் அலைய வேண்டும். நீலக்குறிஞ்சி பூப்பதற்கான கால அளவு காத்திருக்க வேண்டும் என்கிறார். இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயமோகனின் “காடு” நாவலில் குறிஞ்சிப் பூவை தேடி மலையேறிச் செல்லும் காதலர்களின் சித்தரிப்பு வரும். அதில் காதலின் மகத்துவம், அதன் சாதாரணத் தன்மை இரண்டையும் சுட்டியிருப்பார். இக்கவிதை குறிஞ்சி எனும் உருவகத்தை நேர்மாறாய் கையாள்கிறது. காதலையும் குறிஞ்சியின் மலர்ச்சியையும் ஆன்மீக தளத்துக்கு நகர்த்துகிறது.
“சக்க” (பலாப்பழம்) என்று இன்னொரு கவிதையும் என்னைக் கவர்ந்தது. கவிதைசொல்லி ஒரு பள்ளி மாணவனாய் இருந்து தன் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கப் போராடும் காலகட்டத்தில் கவிதை துவங்குகிறது. எப்படி முயன்றாலும் எப்போதும் அவன் ஒரு படி பின்னாலே இருக்கிறான். அவனைத் தாண்டி பிறர் ஏறிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆசிரியரும் அவனைப் பாராட்டி ஏற்பதில்லை. சிறுவயதில் அவன் நோட்டு புத்தகத்தை ஆசிரியர் திருத்தி முட்டை மதிப்பெண் அளிக்கிறார். இது அவனுக்கு தன் பக்கத்து வீட்டு மரங்களில் தொங்கும் பலாப்பழத்தை நினைவூட்டுகிறது. அதை திருடி வேகவைத்து தின்றே அவன் பசி அடங்குகிறது. சில நாட்கள் பசித்த வயிற்றுடன் வகுப்பில் இருக்கும் அவனால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலே அவன் முட்டை (சக்க) வாங்குகிறான். என்றாவது ஒருநாள் ஆசிரியரின் தோப்பிலுள்ள சுவையான நல்ல சக்கையை தான் சுவைக்க வேண்டும் என ஏங்குகிறான் (இங்கு பலாப்பழம் சமமாய் நடத்தப்படுவதன் குறியீடு). அவன் வளர்ந்து பல்கலைக்கழகம் செல்கிறான். அப்போது ஆசிரியர் தன் மகளுக்கு இடம் வாங்க அங்கு வருகிறார். அப்போது அவர் முதன்முதலாய் தன் தோப்பில் விளைந்த பலாத் துண்டு ஒன்றை அவனுக்கு அளிக்கிறார். ஆசிரியர் கையால் பிரியத்தை சுவைக்க வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என அவனது ஏக்கம் எதேச்சையாய் நிறைவேறுகிறது.
இக்கவிதையில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். பலாப்பழத்தை ஒரு சமூக மேல்நிலையாக்க குறியீடாய் பயன்படுத்தி உள்ள விதம். வாழ்க்கையில் நம்மில் மேலாய் உள்ள மனிதர்கள் சட்டென ஒருநாள் நமக்கு இணையாக ஆகும் விசித்திரம், அதன் அபத்தம்.
இத்தொகுப்பின் குறைகள் இவை எனத் தோன்றுகின்றன:
1)   நிறைய குட்டிக் கவிதைகள் வருகின்றன. அவை கவிதையாகவில்லை.
2)   அரசியல் கவிதைகள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் போல் உள்ளன.

3)   இஸ்லாமிய பின்புலம், அதன் கலாச்சார நுணுக்கங்கள் இல்லை. கவிதைகள் ரொம்ப “மதசார்பற்றவையாய்” உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...