முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி

அஸீஸ் இப்ராஹிம் ஒரு சமகால மலையாள கவிஞர். எனது சக ஆசிரியரின் நண்பர். அவர் மூலமாய் ” நீலத் தீவண்டிகளுடே கறுத்த பாட்டுகாரி” தொகுப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. ஆனால் கேட்டால் புரியும். சில மலையாளி நண்பர்கள் வாசித்துக் காட்ட ரசித்துக் கேட்டேன். வழக்கமான மலையாள கவிதைகளின் இசை ஒழுக்கு, தேன் சொட்டும் அனுபவம். அது, போக இக்கவிதைகளின் தொனி, அது வெளிக்காட்டும் இழப்புணர்வு, எனக்கு பிடித்திருந்தது. ஆஸிஸின் தொனி அச்சுதன் தீக்குன்னியை நினைவுபடுத்துகின்றன (என்.டி ராஜ்குமார் தமிழில் மொழியாக்கியிருக்கிறார்.).

ஆஸிஸின் நீண்ட கதைக் கவிதைகள் எனக்கு அதிகம் பிடித்திருந்தன. ”நீலக்குறிஞ்ஞி” என்றொரு கவிதை காதலின் வீரியத்தை, ஆழத்தை அறிய அதை இழக்க வேண்டும். பின் நீண்ட காலம் அதைப் பிரிந்து பாலைவனங்களில் அலைய வேண்டும். நீலக்குறிஞ்சி பூப்பதற்கான கால அளவு காத்திருக்க வேண்டும் என்கிறார். இக்கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெயமோகனின் “காடு” நாவலில் குறிஞ்சிப் பூவை தேடி மலையேறிச் செல்லும் காதலர்களின் சித்தரிப்பு வரும். அதில் காதலின் மகத்துவம், அதன் சாதாரணத் தன்மை இரண்டையும் சுட்டியிருப்பார். இக்கவிதை குறிஞ்சி எனும் உருவகத்தை நேர்மாறாய் கையாள்கிறது. காதலையும் குறிஞ்சியின் மலர்ச்சியையும் ஆன்மீக தளத்துக்கு நகர்த்துகிறது.
“சக்க” (பலாப்பழம்) என்று இன்னொரு கவிதையும் என்னைக் கவர்ந்தது. கவிதைசொல்லி ஒரு பள்ளி மாணவனாய் இருந்து தன் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்கப் போராடும் காலகட்டத்தில் கவிதை துவங்குகிறது. எப்படி முயன்றாலும் எப்போதும் அவன் ஒரு படி பின்னாலே இருக்கிறான். அவனைத் தாண்டி பிறர் ஏறிச் சென்றபடி இருக்கிறார்கள். ஆசிரியரும் அவனைப் பாராட்டி ஏற்பதில்லை. சிறுவயதில் அவன் நோட்டு புத்தகத்தை ஆசிரியர் திருத்தி முட்டை மதிப்பெண் அளிக்கிறார். இது அவனுக்கு தன் பக்கத்து வீட்டு மரங்களில் தொங்கும் பலாப்பழத்தை நினைவூட்டுகிறது. அதை திருடி வேகவைத்து தின்றே அவன் பசி அடங்குகிறது. சில நாட்கள் பசித்த வயிற்றுடன் வகுப்பில் இருக்கும் அவனால் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலே அவன் முட்டை (சக்க) வாங்குகிறான். என்றாவது ஒருநாள் ஆசிரியரின் தோப்பிலுள்ள சுவையான நல்ல சக்கையை தான் சுவைக்க வேண்டும் என ஏங்குகிறான் (இங்கு பலாப்பழம் சமமாய் நடத்தப்படுவதன் குறியீடு). அவன் வளர்ந்து பல்கலைக்கழகம் செல்கிறான். அப்போது ஆசிரியர் தன் மகளுக்கு இடம் வாங்க அங்கு வருகிறார். அப்போது அவர் முதன்முதலாய் தன் தோப்பில் விளைந்த பலாத் துண்டு ஒன்றை அவனுக்கு அளிக்கிறார். ஆசிரியர் கையால் பிரியத்தை சுவைக்க வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என அவனது ஏக்கம் எதேச்சையாய் நிறைவேறுகிறது.
இக்கவிதையில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். பலாப்பழத்தை ஒரு சமூக மேல்நிலையாக்க குறியீடாய் பயன்படுத்தி உள்ள விதம். வாழ்க்கையில் நம்மில் மேலாய் உள்ள மனிதர்கள் சட்டென ஒருநாள் நமக்கு இணையாக ஆகும் விசித்திரம், அதன் அபத்தம்.
இத்தொகுப்பின் குறைகள் இவை எனத் தோன்றுகின்றன:
1)   நிறைய குட்டிக் கவிதைகள் வருகின்றன. அவை கவிதையாகவில்லை.
2)   அரசியல் கவிதைகள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் போல் உள்ளன.

3)   இஸ்லாமிய பின்புலம், அதன் கலாச்சார நுணுக்கங்கள் இல்லை. கவிதைகள் ரொம்ப “மதசார்பற்றவையாய்” உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...