முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புடிங்க மாமா!

Image result for rasi ajith smokes

அஜித் மற்றும் ரம்பா நடித்த ராசிடிவியில் ஓடிக் கொண்டிருந்தது. தாய் மாமன்அவரை உயிருக்குயிராய் நேசிக்கும் மாமா மகள்குடும்பத் தகராறு, ஈகோ என பாரதிராஜா பாணியிலான படம். ஒரு காட்சியில் அஜித்தை அவரது ரம்பாவின் அப்பா அவமதித்து விட, அஜித் துண்டை உதறி வீட்டை விட்டு வெளியேற அவருக்குப் பின்னால் ஓடிப் போய் அமைதிப்படுத்த முயல்கிறார் ரம்பா. ஆற்றுப்படுத்தும் நோக்கில் ரம்பா அவருக்கு சிகரெட்டுகள் நீட்டுகிறார். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என அஜித் மறுக்கிறார். உடனே ரம்பாஇல்லை மாமா ஆம்பளைன்னா ஒரு நாளைக்கு நான்கு சிக்ரெட்டாவது புகைக்கணும்என்று கெஞ்சுகிறார். அஜித்தும் நெகிழ்ந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஊத முயன்று இருமி சிரமப்படுகிறார். அடுத்து ஒரு அழகான பிம்பம் வருகிறது. அஜித் தன் வாயில் இருந்து புகையை ரம்பாவின் முகத்தில் ஊதுகிறார். ரம்பா சிலித்து கிளர்ந்து நெளிகிறார். தமிழின் ஆக செக்ஸியான காட்சிகளில் ஒன்று இது எனத் தோன்றுகிறது.


Image result for rasi ajith movie

இதற்கு முன் இத்தகைய ஒரு ஆண்மையை வெளிப்படுத்திய நாயகன் எம்.ஜி.ஆர் ஒருவர் தான். அது போகட்டும்ரம்பா ஏன் ஆம்பளைன்னா சிகரெட் புகைக்கணும் என்கிறார்?
சிகரெட்டுக்கும் ஆண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அறிவியல் ரீதியாய். ஆனால் சிகரெட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிகரெட்டை ஆண்மையின் குறியீடாகத் தான் விளம்பரங்கள் வழி கட்டமைத்தார்கள். அதுவும் சமூகத்தில் ஊருக்கு அடங்காத காளையாக திரியும் முரட்டு ஆண் தான் சிகரெட் புகைப்பான் எனும் சித்திரத்தை வெற்றிகரமாய் நிறுவினார்கள். சிகரெட் ஒரு எதிர்க்கலாச்சார சின்னமாகியது. அவ்வாறு தான் அது மைய நீரோட்ட கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்தது.
இப்படத்தில் அஜித் ஒரு அழகான ஆனால் களங்கமற்ற ஆண். அவரை சிகரெட் மூலம் ஆண்மை மிக்கவராக்க முயல்கிறார். பொதுவாக பெண்களுக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்பார்கள், இப்படத்தில் ரம்பா தன்னை சிகரெட் வாசனை கிளர்ச்சி அடைய வைக்கிறது என சொல்கிறார்

ரம்பா இப்படி சிந்திப்பதற்கு மற்றொரு காரணம் உள்ளதுஅஜித்துடன் சதா முறைக்கும் ரம்பாவின் அப்பா ஒரு காட்சியில் சுருட்டுப் பிடிக்கிறார். சுருட்டு ஒரு மிகு ஆண்மைக் குறியீடு. தனக்கு வாய்க்கும் காதலன் தன் அப்பாவைப் போன்றே ஆண்மையாய், ஆனால் சற்றே மிதமாய் இருக்க வேண்டும் என ரம்பா விரும்புகிறார். அதனாலே சுருட்டு கொடுக்காமல் சிகரெட் கொடுக்கிறார்.
இந்த பெண்மை சித்தரிப்பு எவ்வளவு பாசாங்கற்றதாய், ரத்தமும் நிணமுமாய் உள்ளது பாருங்கள். இப்போதெல்லாம் இப்படியான பெண் பாத்திரங்கள் நம் சினிமாவில் வருவதில்லை. இப்போது அரசியல் சரித்தன்மையை இயக்குநர்கள் மிக முக்கியமாய் நினைக்கிறார்கள். ஆக, நம் படங்களைப் பார்க்கும் பெண்கள், தலித்துகள், ஊனமுற்றவர்கள், இஸ்லாமியர், ஆண்கள், அப்பா, தாத்தா, முதியோர், அம்மா, அத்தை, பாட்டி என யாருமே 'அசௌகரியமாய்' உணராதபடி, காயப்படாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். விளைவாக இப்போது வரும் மனிதர்கள் சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் மிடுக்காய் வரும் சிப்பாய்கள் போல் இருக்கிறார்கள். இன்றைய படங்களில் நாயகன் பதற்றமாய் இருந்தால் மட்டும் சிகரெட் பிடிக்கிறான். காதலி ஏமாற்றினால் மட்டும் தண்ணி அடிக்கிறான். சிகரெட்டையும் மதுவையும் ஒருவித உதிரி தேவைகளாய் இன்றைய படங்கள் சித்தரிக்கின்றன

ஆனால் “ராசிமாதிரியான அந்த கால படங்களில் ஒரு கலப்படமில்லாத தமிழ் மனம் தெரிகிறது. இம்மாதிரி படங்களை இப்போது மிஸ் பண்ணுகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...