முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உன் உடலெனும் வரைபட நூலில் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

உன் உடலெனும் வரைபட நூலில் அடையாளமிடுகிறேன்
நெருப்பாலான பெருக்கல் குறிகளால்.
என் உதடுகள் அதன் குறுக்கே செல்லும்: பதுங்க முயலும் ஒரு சிலந்தியாய்.
உன்னில், உனக்குப் பின்னால், தயக்கமாய், தாகத்தில் தவித்து,

மாலையின் கரைப் பகுதியில் உனக்கு சொல்ல வேண்டிய கதைகள்,
என் சோகமான மிருதுவான பொம்மையே, உன் வலியை இதமாக்கும் கதைகள்.
ஒரு அன்னம், ஒரு மரம், தொலைவில் மகிழ்ச்சியாய் ஏதோ ஒன்று.
திராட்சைகள் கனிந்த பருவம், கனிவான விளைச்சல் மிக்க பருவம்.


உன்னை காதலித்தேன் ஒரு துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவும் பின்னர் மௌனமும் ஊடாடிக் கலைக்கும் என் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் இடையில் தேக்கி வைக்கப்பட்டு.
அரவமற்று, மனம் தடுமாறி, இரு சலனமற்ற வேனிஸ் நகர படகுகளின் நடுவே.

உதடுகளுக்கும் குரலுக்கும் இடையில் எதுவோ மாய்ந்து போகிறது.
பறவையின் இறகுகள் கொண்ட எதோ ஒன்று, தவிப்பினாலும் தன்மறதியினாலும் ஆன ஏதோ ஒன்று.
வலைக்குள் நீர் நிற்காதது போல.
என் விளையாட்டு பொம்மையே, ஒரு சில துளிகளே மிச்சமாய் நடுங்கி நிற்கின்றன.
இருந்தும், இந்த தலைமறைவான சொற்களில் ஏதோ ஒன்று பாடுகிறது.
ஏதோ ஒன்று பாடுகிறது, பசியால் தவிக்கும் எனது வாய்க்குள் எதோ ஒன்று நுழைந்து ஏறுகிறது.
ஓ ஆனந்தத்தின் அத்தனைச் சொற்களாலும் உன்னை ஆராதிக்க முடிந்தால்.
மனம் பிறந்தவனிடம் கையில் அகப்பட்ட தேவாலய மணிக்கூண்டு போல்,
பாடவும், எரியவும், தப்பித்து ஓடவும் முடிந்தால்.
என் துயரமான மென்மையே, சட்டென என்ன ஆட்கொள்கிறது உன்னை?
மிக அற்புதமான, ஆக குளிரான ஒரு மலைச்சிகரத்தை நான் அடையும் போது
என் இதயம் ஒரு இரவு மலரைப் போல மூடிக் கொள்ளுமடி!


(தமிழில் ஆர். அபிலாஷ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.