Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இருவர் - ஒளிப்பதிவு காட்டும் உளப்பாங்கு (4)



அடுத்து இதே ஒளிப்பதிவு உத்தி எப்படி காதல் காட்சிகளின் போது ஆண் பெண் இடையிலான அதிகார ஏற்ற இறக்கங்களை சித்தரிக்க பயன்படுகிறது என காண்போம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒன்று ஆனந்தனின் முதல் மனைவி புஷ்பா. அடுத்து, புஷ்பா இறந்த பின் ஆனந்தனின் வாழ்க்கையில் இளம் நடிகையாக நுழையும் கல்பனா. கல்பனா பாடல் காட்சிகளில் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்டு தாழ் கோணத்தில் மிகுந்த அதிகார பாவனையுடன் காட்டப்படுகிறார். அவளது படமொன்றின் பிரிவியூவின் போது தான் ஆனந்தன் அவளை காண்கிறான். அப்போது அவள் மேலே திரையில் நடனமாட அவன் கீழே இருந்து காண்கிறான். ஆனந்தன் தாழ் கோணத்தில் காட்டப்பட்டாலும் அவருக்கு மேலே கல்பனா தெரிகிறாள் எனும் உணர்வு உள்ளது (இது அவனை பலவீனப்படுத்துகிறது). மேலும் ஆனந்தன் அவளைக் கண்டு, உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் அதிர்ச்சியில், தடுமாறிப் போகிறான்.







அடுத்து வரும் காட்சிகள் ஆனந்தன் அவளுடன் பழகி அவளை தன்வயப்படுத்திய பின் வருபவை. இப்போது கல்பனா அவனை எப்படி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என பலவிதங்களில் முயற்சி எடுத்து வருகிறாள். ஒரு மலையுச்சியின் வியூ பகுதி. கல்பனா முதலில் கீழே அமர்ந்திருக்கிறாள். அவள் தனக்கு எதிரே நாற்காலியில் இருந்து மேக் அப் போடும் ஆனந்தனை நோக்கி பேசுகிறாள்.

 அவனது முதல் மனைவி புஷ்பாவுக்கும் தனக்குமுள்ள தோற்ற ஒற்றுமை பற்றி விசாரிக்கிறாள். ஆனந்தன் மெல்ல தடுமாறுகிறான். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆனந்தன் மேலேயும் அவள் கீழேயும் இருக்கிறாள்.





புஷ்பாவுக்கு தலைகீழாக ஒரு உருவம் இருந்தால் அது நீ தான்என ஆனந்தன் அவளுக்கும் தன் முதல் மனைவிக்குமான வேறுபாடுகளை பட்டியலிடுகிறான். புஷ்பாவை போலன்றி கல்பனா அகங்காரம் மிக்கவள், பெரியவர்களை மதிக்கத் தெரியாதவள், அனைவரையும் கட்டுப்படுத்த தவிப்பவள்அவன் இவ்வாறு பேச பேச கல்பனா கீழிறங்குகிறாள். கீழே வரும் காட்சிகளில் ஆனந்தன் திரும்பவும் தாழ் கோணத்தில் வருகிறான். ஆனால் முதல் காட்சியில் போல் அல்லாது அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். கல்பனா தன் தோற்ற ஒற்றுமையை, ஆனந்தனுக்கு தன் மீதுள்ள ஈர்ப்பை சுட்டிக் காட்டி பேசி உரையாடலின் போது தன் அதிகாரத்தை மீட்கிறாள். இப்போது இருவரும் சமமாகிறார்கள். அடுத்து மீண்டும் தன் மீது அவனுக்கு உள்ள காதல் நிலையற்றது, உறுதியற்றது எனத் தோன்ற அவள் மீண்டும் கீழே போகிறாள்.







 அவன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து அவளை நோக்குகிறான். ஆனாலும் அவளது கேள்விகள் அவனை அசைக்கின்றன. இதை உணர்ந்த அவள்இனி அவனுக்கு கீழே அமர வேண்டியதில்லை எனும் நம்பிக்கையுடன் - கம்பித் தடுப்பின் மீது அமர்ந்தும் சாய்ந்தபடியும் ஆனந்தனை கீழாக நோக்குகிறாள்.

 என்னைப் பார்த்தால் புஷ்பா போல உள்ளதா? என்னையும் காதலிக்க போறீங்களா?” என வினவுகிறாள். ஆனந்தன் பதறுகிறான். அவன் முழுக்க தன் கட்டுப்பாட்டில் உள்ளதை அவள் இப்போது உணர்கிறாள். ஆனால் இந்த அதிகார சமநிலை மீண்டும் மாறுகிறது.

இக்காட்சித் தொகுப்பு முழுக்க இருவரின் உறவில் உள்ள ஊசலாட்டத்தை மணிரத்னம் காட்சிமொழி மூலம் குறிப்புணர்த்தி இருப்பார்.
இதைப் போன்றே தமிழ்ச்செல்வனின் இரண்டாவது மனைவியான செந்தாமரைக்கும் இடையிலான காதல் காட்சியிலும் அதிகார ஊசலாட்டம் சித்தரிக்கப்பட்டிருக்கும். கீழே வரும் காட்சியில் செந்தாமரை தனக்கு போதுமான இடம் இல்லை என தமிழ்ச்செல்வனிடம் புகார் கூறுகிறாள் (அவனுக்கு ஏற்கனவே குடும்பம் உள்ளது). நான் உனக்கு யார், எனக்கு இங்கு என்ன இடம் என வினவுவாள். ஆக தமிழ்செல்வன் இப்போது தாழ்ந்து போக வேண்டும். அந்நிலையில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான கவித்துவமான வசனம் பேசி அவளை கண்ணீர் விட வைக்கிறான் தமிழ்ச்செல்வன். அடுத்து இருவரும் சமமாகிறார்கள். தாழ் கோணத்தில் இருந்து நேர் கோணத்தில் மிட் ஷாட்டுக்கு காட்சி மாறுகிறது.




Comments

Super... Oru film parkirathula ivlo irukka

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...