Skip to main content

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (6)


 Image result for haiku basho
ரசம் களன்ற
கண்ணாடி
தெளிவாக
குயில் ஓசை மட்டும்
·       பாஷோவின் தவளைக் கவிதையை நினைவுபடுத்தும் ஹம்ஸித்தின் ஹைக்கூ இது.

ரசம் நீங்கின, பிம்பங்களை தெளிவுற காட்டாத நிலைக்கண்ணாடியில் ஓசையின் பிம்பம் மட்டும் தெரிகிறது. குயிலின் ஓசையை கேட்டு மயங்கி மரக்கிளைகளின் இருண்மைக்குள் எவ்வளவு முறை அக்குரலின் சொந்தக்காரியை, அந்த மாய வித்தைக்காரியை தேடியிருக்கிறோம்? அடர்ந்த இருளின் மாந்திரிக தொண்டையில் இருந்து அக்குரல் கசிந்து வருகிறது என நான் குழந்தையாய் இருக்கையில் நம்பி இருக்கிறேன். ஆக, ரசம் அழிந்த கண்ணாடியின் தெளிவற்ற உருவங்களில் இருந்து சட்டென குயிலின் பாடல் ஒலிப்பது ஒரு சிலிர்ப்பூட்டும் அனுபவமாய் இருக்கிறது. அது அப்படித்தான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஜம்ஸித்தின் சிறந்த ஹைக்கூ (நான் வாசித்தவரையில்) இது தான்.
 கோடை அந்தி
மறைகிறது
 ஒரு குழந்தை
·       அந்தி என்பது ஒரு நாளின் முடிவுக்கு முன்பான தருணம், திரை விழும் முன்பான மேடைக்காட்சி, கதவு மூடப்படும் முன்பான தலையசைப்பு, கைகுலுக்கல், வழியனுப்பும் உபசரிப்பு, மறக்கப்படுவதற்கு முன்பான புன்னகை. குழந்தை சென்று மறைவது இங்கு ஒரு முடிவுறாத செயலாக இங்கு உள்ளது. தொடுவானம் நோக்கி நடந்து செல்லும் ஒரு குழந்தை. ஒரு ஆள்ஒரு வளர்ந்த ஆள்நடந்து செல்கிறார் என்றால் அது ஒரு வழக்கமான காட்சி. குழந்தை என்பது இங்கு அதிர்ச்சியாகவும், பதற வைப்பதாகவும் உள்ளது. ஆனால் இது வெறும் அதிர்ச்சி அல்லஅந்த அந்தியே ஒரு குழந்தை தானே. அதுவே தன் மரணத்தை நோக்கித்தான் காலடி எடுத்து வைக்கிறது. விடியல் ஒரு குழந்தைமை என்றால், பகல் வளர்ந்த பருவம் என்றால், அந்தி முதுமையின் குழந்தைப் பருவம்மீண்டும் குழந்தையாகி தாய் வாசலுக்குகருவறை நோக்கி - செல்லும் பருவம். ஆனால் இப்படியான விளக்கமே ஹைக்கூவுக்கு எதிரானது. நான் இந்த விளக்கத்தை உதறி விட்டு, இதிலுள்ள முரணைஜீரணிக்க முடியாத அந்த முரணைமட்டும் தொடர்ந்து கண்ணுக்குள் சிறைவைக்க விரும்புவேன்.
சிக்கலானவை:

பாதையின் பக்கம்
வளைந்த மூங்கில்
அமைதியாக ஒரு
துளை
·       அமைதியாகஎன்பதில் ஆசிரியரின் கூற்று வெளியாகி விடுகிறது. “பாதையின் பக்கம் / வளைந்த மூங்கிலில் ஒரு
துளை / அமைதிஎன சற்றே திருத்தினால் இது ஒரு நல்ல ஹைக்கூவாகி விடுகிறது.

மத்தியான வெயில்
உரித்த மாட்டுத் தோல்
 புற்களுக்கு நிழல்
குடை
·       காயும் மாட்டுத் தோல் புற்களுக்கு நிழற்குடை எனும் போது அது உருவகமாகிறது (”நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனாஎன்பதில் போல்). ஹைக்கூவில் உருவகம், உவமை ஆகியவை காவலர் கையில் லத்தி போல. இது இந்த ஹைக்கூவின் பிழை.
பழைய விளக்கு
திரியில் ஒளியேற்றும்
மின் மினி
·       இதிலும் சிக்கல் மின்மினி ஒரு சுடரின் உருவகமாக வருவது தான்.

தேர்ந்தெடுக்கிறேன்
கைபிடி உடைந்த
குவளை
பிறை நிலா
·       இங்கும் அதே பிரச்சனை தான். மறைமுகமாய், பிறை நிலவும் கைப்பிடி உடைந்த குவளையும் ஒப்பிடப்படுகிறது.

சுழல் நாற்காலி
திரும்பும்
திசையெல்லாம்
நான் நான் நான் நான்
·       நகுலன் பாணியிலான இக்கவிதையின்திரும்பும் திசையெல்லாம் நான்எனும் சித்திரம் சுவாரஸ்யமானது: ஒருவர் சுழலும் போது பார்க்கும் பொருட்கள் மயங்கி கிட்டத்தட்ட காணாமல் ஆகின்றன; அப்போது நம் பார்வை (ஆபத்தில் இருக்கும்) நம் சுயத்தை நோக்கி திரும்புகிறது; எங்கெங்கும் நாமே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தசிந்தனையை தூண்டும் தன்மைநவீன கவிதையின் சிறப்பாக இருக்கலாம். இதை இன்னும் நீட்டித்தால் ஒரு அற்புதமான நகுலத்தனமான கவிதையாகலாம்; ஆனால் ஹைக்கூ ஆகாது.

நமது வானம்பாடிகள் எழுதியவை ஏன் ஹைக்கூ அல்ல என இப்போது புரிந்திருக்கும். அவற்றில் ஜென் மனநிலை இல்லை. ஜப்பானிய பௌத்த மரபில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை அவை. நமது நவீன கவிதையிலும் முழுக்க அம்மனநிலை நோக்கின எத்தனிப்பு இல்லை என்பதால் தீவிர இலக்கியத்திலும் ஹைக்கூ அதிகம் படைக்கப்படவில்லை.

ஜம்ஸித் போன்ற கவிஞர்கள் தொடர்ந்து அசலான ஹைக்கூ எழுதி வருகிறார்கள் என்பது உற்சாகமூட்டுவது. ஹைக்கூ என்றும் தமிழில் ஒரு ஒற்றையடிப் பாதையாகவே இருக்கும். அது தீவிர இலக்கியத்தின் மையப் பரப்புக்குள் இடம்பெறாது விளிம்பில் தான் இருக்கப் போகிறது. ஆனால் நம் படைப்பாளிகள் ஹைக்கூவை அணுகி அறிந்து அதிலிருந்து இதுவரை உரம் பெற்றிருக்கிறார்கள்; தொடர்ந்தும் பயனடைவார்கள். அதற்கு சரியான ஹைக்கூவை அடையாளம் காணத் தெரிந்திருப்பது அவசியம்!



 நன்றி: தீராநதி, ஜூன் 2018


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...