முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (4): தனியர்களின் அவசியம்



இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது?
1)   ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள் நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?

முகநூல் தோன்றிய புதிதில் தினமும் ஒரு வம்பு, அடிதடி என படைப்பாளிகள் பிஸியாக இருந்தார்கள். ஆனால் காலம் போக போக முகநூலின் நோக்கம் அதுவல்ல என அவர்கள் புரிந்து கொண்டார்கள். எல்லாரும் ஸ்நேகமாய் அரவணைத்துப் போக வேண்டும் என்பதே ஸுக்கர்பெர்க்கின் கொள்கை. சமூகமாக்கலின் உச்சாணிக் கொம்பில் நாம் இப்போது வாலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறோம். சமீபத்தில் எனது நண்பர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து சொன்னார், “மச்சான் நான் சொன்னால் நீ நம்ப மாட்டே. அங்கே எல்லாரும் அவ்வளவு நட்பா இருக்காங்க.”
நான் கேட்டேன், “எப்படிடா எல்லாருமே நல்லவங்களா இருக்க முடியும்?”
“அப்படி இல்ல. நம்மை பிடிக்காதவங்க தான் அங்க பலரும். ஆனால் காட்டிக்க மாட்டாங்க. நம்மை பிடிக்காதவங்க தான் பார்த்ததும் கட்டித் தழுவி பாராட்டுவாங்க, நலம் விசாரிப்பாங்க.”
“ஏன் அப்படி போலியா இருக்காங்க?”
“அதான் வசதி. பரஸ்பரம் எல்லாரும் உதவியா இருக்கலாம். ஈகோ உரசல் இன்றி சேர்ந்து வேலை செய்யலாம்.”
ஜெயமோகன் தன் அமைப்பின் உறுதிமொழியாய் முன்வைப்பது இந்த கார்ப்பரேட் தத்துவத்திற்கு எவ்வளவு இணக்கமாய் உள்ளது பாருங்கள். நானும் நீங்களும் இன்று இந்த நிலைப்பாட்டுக்குத் தான் நகர்ந்திருக்கிறோம்: நானும் இப்போதெல்லாம் யாருடனும் அதிகம் முரண்படுவதில்லை; எல்லாரையும் கனிவாய் அன்பாய் நடத்துகிறேன். கூட்டங்களில் பிடிக்காதவர்களைக் கண்டால் உடனடியாய் அரவணைத்து நலம் விசாரிக்கிறேன். பேஸ்புக்கில் அவர்களுக்கு லைக் போடுகிறேன். விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் இன்று ஒரு கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு நகர்ந்து விட்டோம்!
ஆனால் இந்த சூழலிலும் நாம் தனியர்களாய் தொடர்கிறோம் என்பதே முக்கியம். அதுவே நம்மை இலக்கிய வாசகர்களாய், எழுத்தாளர்களாய் வைத்திருக்கிறது. இல்லையென்றால் தமிழகமே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...