முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (4): தனியர்களின் அவசியம்



இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது?
1)   ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள் நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?

முகநூல் தோன்றிய புதிதில் தினமும் ஒரு வம்பு, அடிதடி என படைப்பாளிகள் பிஸியாக இருந்தார்கள். ஆனால் காலம் போக போக முகநூலின் நோக்கம் அதுவல்ல என அவர்கள் புரிந்து கொண்டார்கள். எல்லாரும் ஸ்நேகமாய் அரவணைத்துப் போக வேண்டும் என்பதே ஸுக்கர்பெர்க்கின் கொள்கை. சமூகமாக்கலின் உச்சாணிக் கொம்பில் நாம் இப்போது வாலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறோம். சமீபத்தில் எனது நண்பர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து சொன்னார், “மச்சான் நான் சொன்னால் நீ நம்ப மாட்டே. அங்கே எல்லாரும் அவ்வளவு நட்பா இருக்காங்க.”
நான் கேட்டேன், “எப்படிடா எல்லாருமே நல்லவங்களா இருக்க முடியும்?”
“அப்படி இல்ல. நம்மை பிடிக்காதவங்க தான் அங்க பலரும். ஆனால் காட்டிக்க மாட்டாங்க. நம்மை பிடிக்காதவங்க தான் பார்த்ததும் கட்டித் தழுவி பாராட்டுவாங்க, நலம் விசாரிப்பாங்க.”
“ஏன் அப்படி போலியா இருக்காங்க?”
“அதான் வசதி. பரஸ்பரம் எல்லாரும் உதவியா இருக்கலாம். ஈகோ உரசல் இன்றி சேர்ந்து வேலை செய்யலாம்.”
ஜெயமோகன் தன் அமைப்பின் உறுதிமொழியாய் முன்வைப்பது இந்த கார்ப்பரேட் தத்துவத்திற்கு எவ்வளவு இணக்கமாய் உள்ளது பாருங்கள். நானும் நீங்களும் இன்று இந்த நிலைப்பாட்டுக்குத் தான் நகர்ந்திருக்கிறோம்: நானும் இப்போதெல்லாம் யாருடனும் அதிகம் முரண்படுவதில்லை; எல்லாரையும் கனிவாய் அன்பாய் நடத்துகிறேன். கூட்டங்களில் பிடிக்காதவர்களைக் கண்டால் உடனடியாய் அரவணைத்து நலம் விசாரிக்கிறேன். பேஸ்புக்கில் அவர்களுக்கு லைக் போடுகிறேன். விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் இன்று ஒரு கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு நகர்ந்து விட்டோம்!
ஆனால் இந்த சூழலிலும் நாம் தனியர்களாய் தொடர்கிறோம் என்பதே முக்கியம். அதுவே நம்மை இலக்கிய வாசகர்களாய், எழுத்தாளர்களாய் வைத்திருக்கிறது. இல்லையென்றால் தமிழகமே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.