முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (4): தனியர்களின் அவசியம்



இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது?
1)   ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள் நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?

முகநூல் தோன்றிய புதிதில் தினமும் ஒரு வம்பு, அடிதடி என படைப்பாளிகள் பிஸியாக இருந்தார்கள். ஆனால் காலம் போக போக முகநூலின் நோக்கம் அதுவல்ல என அவர்கள் புரிந்து கொண்டார்கள். எல்லாரும் ஸ்நேகமாய் அரவணைத்துப் போக வேண்டும் என்பதே ஸுக்கர்பெர்க்கின் கொள்கை. சமூகமாக்கலின் உச்சாணிக் கொம்பில் நாம் இப்போது வாலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறோம். சமீபத்தில் எனது நண்பர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து சொன்னார், “மச்சான் நான் சொன்னால் நீ நம்ப மாட்டே. அங்கே எல்லாரும் அவ்வளவு நட்பா இருக்காங்க.”
நான் கேட்டேன், “எப்படிடா எல்லாருமே நல்லவங்களா இருக்க முடியும்?”
“அப்படி இல்ல. நம்மை பிடிக்காதவங்க தான் அங்க பலரும். ஆனால் காட்டிக்க மாட்டாங்க. நம்மை பிடிக்காதவங்க தான் பார்த்ததும் கட்டித் தழுவி பாராட்டுவாங்க, நலம் விசாரிப்பாங்க.”
“ஏன் அப்படி போலியா இருக்காங்க?”
“அதான் வசதி. பரஸ்பரம் எல்லாரும் உதவியா இருக்கலாம். ஈகோ உரசல் இன்றி சேர்ந்து வேலை செய்யலாம்.”
ஜெயமோகன் தன் அமைப்பின் உறுதிமொழியாய் முன்வைப்பது இந்த கார்ப்பரேட் தத்துவத்திற்கு எவ்வளவு இணக்கமாய் உள்ளது பாருங்கள். நானும் நீங்களும் இன்று இந்த நிலைப்பாட்டுக்குத் தான் நகர்ந்திருக்கிறோம்: நானும் இப்போதெல்லாம் யாருடனும் அதிகம் முரண்படுவதில்லை; எல்லாரையும் கனிவாய் அன்பாய் நடத்துகிறேன். கூட்டங்களில் பிடிக்காதவர்களைக் கண்டால் உடனடியாய் அரவணைத்து நலம் விசாரிக்கிறேன். பேஸ்புக்கில் அவர்களுக்கு லைக் போடுகிறேன். விரும்பியோ விரும்பாமலோ நாம் அனைவரும் இன்று ஒரு கார்ப்பரேட் சித்தாந்தத்துக்கு நகர்ந்து விட்டோம்!
ஆனால் இந்த சூழலிலும் நாம் தனியர்களாய் தொடர்கிறோம் என்பதே முக்கியம். அதுவே நம்மை இலக்கிய வாசகர்களாய், எழுத்தாளர்களாய் வைத்திருக்கிறது. இல்லையென்றால் தமிழகமே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...