முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (4)


Image result for மனுஷ்யபுத்திரன்

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்

என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது. பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது. (தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள்; ஆனால் வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள்.) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“கடவுளற்றவனின் பக்திக் கதைகள்: மனுஷ்யபுத்திரன் கவியுலகு”). இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார்.  
அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
இங்கு அவர் எதுகையை கொண்டு வர நினைத்திருந்தால் வெவ்வேறுஎன எழுதியிருக்கலாம். இசை ஒழுங்கு மீது மனுஷ்யபுத்திரனுக்கு ஒவ்வாமை இல்லை. ஆனால் அவர் ஏன் செய்யவில்லை? இங்கு எதுகை அமையாமல் இடறுகிறது. அது சற்றே நிரடுகிறது. பிறகு ஏன் மனுஷ்யபுத்திரன் இச்சொல்லை தேர்கிறார்?
 வெவ்வேறுஎனும் சொல் சன்னமானது; வேகமாய் ஒழுங்கிச் செல்வது; மேலும் எதுகையானால் அச்சொல்லில் நாம் நின்று யோசிக்க மாட்டோம். இந்த இடத்தில் பிரிவின் கனம் கூடி வர வேண்டுமெனில் ஒரு கனத்த சொல் வேண்டும். ஆகையால்வேறுவேறுபொருத்தம். அச்சொல் சோற்றிடையே நாம் கடித்த சிறு கல்லைப் போல் உறுத்துகிறது.
அதே போல இக்கவிதையில்வாழ்விடங்களுக்கு, “துயரங்களெங்கும், “நீங்குதலின், “இல்லாமலாகும்போன்று 15 கனத்த ஓசை கொண்ட நீண்ட சொற்கள் வருகின்றன. தமிழுக்கே உரித்தான பெயர்ச்சொல் + வினையுரிச்சொல் ஜோடிச்சொற்களை நிறைய பயன்படுத்துகிறார் (.தா, “துயரங்களெங்கும், “நமக்கிடையே”). இதைப் போன்றே பன்மைச் சொற்களும் (”நிலங்களின், ”வாழ்விடங்களுக்கு”) வருகின்றன. ”அந்தி இருள்என எழுத முடிகிற இடத்தில்அந்தியின் இருள்என்கிறார். இவை எல்லாம் சேர்ந்து இக்கவிதையை நீங்கள் உரக்க படிக்கிறீர்கள் என்றால் வேகமாய், ஜிலுஜிலுவென வாசித்துப் போக முடியாது. உங்கள் வாசிப்பின் கால அளவு நீள்கிறது. நீண்டு செல்லும் உணர்ச்சி என்றுமே துயரம் தானே! இப்படி இக்கவிதையை சொற்தேர்வின் வழியே மட்டுமே, கனத்த தொனியை ஏற்படுத்தி, நம் மனதுக்குள் கசப்பேற செய்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இனி கவிதையின் இறுதி வரி.
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது
இது பிரிகிற அந்த காதல் ஜோடியின் கையைப் பற்றியபடி ஒரு குழந்தை நடந்து வருகிற தோற்றப்பிழையை உருவாக்குகிறது. அதுவும் குழந்தையாகிய சிறு துயரம் மிக அமைதியாய் நடந்து வருகிறது. உடைந்த குடும்பங்களில் தான் அப்படி நிகழும். இங்கே குடும்பமே இல்லை; ஆனாலும் கற்பனையில் ஒரு குடும்பம் இருக்கிறது. அது அவர்கள்தூக்கிய வளர்த்த துயரமாகஇருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான உருவகத்தில் என் கவனத்தை நெருடிய விசயம்ஒரு வார்த்தை பேசாமல் / மௌனமாக”.
ஒரு வார்த்தை பேசாமல் என்றாலே மௌனம் தானே? ஏன் மீள சொல்ல வேண்டும்? அதே போலநம்முடன்என்பதில்உடன்இருக்கிறதே; அதை திரும்பகூடவேஎன ஏன் அதே வாக்கியத்தில் சொல்ல வேண்டும்?
ஒரு காரணம் உள்ளது.
இவ்வாக்கியத்தை ஒருவேளைநம்முடன் /
மௌனமாக நடந்து வருகிறதுஎன திருத்தினால் (சலூனில் முடிவெட்டி வந்த குழந்தை போல) வாக்கியம் ஜீவனற்று போகிறது; ஏனெனில்
 ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

என்பதில் மீள ஒலிக்கும் அச்சொற்கள் நேர்பொருளுக்கு தேவையில்லை தான். ஆனாலும் கவிதையின் தனிமை தொனியை அடர்த்தியாக்க, நகைமுரணை தீவிரமாக்க, உங்கள் விழியோரம் துளிர்க்கும் அந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை கனத்துப் போக செய்ய அச்சொற்கள் மிகையாய் தோன்றி மீள ஒலிப்பது அவசியமாகிறது.
ஆகையால் நண்பர்களே இதற்கு மேல் நான் சொற்களை இறைக்கப் போவதில்லை.  

நன்றி: தீராநதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...