முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதையில் மிகைச்சொற்களின் தேவை (4)


Image result for மனுஷ்யபுத்திரன்

நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்

என்பதில் உள்ள மீள்கூறல் மனுஷ்யபுத்திரனின் வாசகர்களுக்கு வெகுவாய் பரிச்சயமானது. பாப்லோ நெருடாவை நினைவுபடுத்துவது. (தமிழில் பெரும்பாலான நவீன கவிஞர்கள் இந்த மீள்கூறல் உத்தியை தவிர்க்கிறார்கள்; ஆனால் வைரமுத்து, அப்துல் ரகுமான், தமிழன்பன் போன்ற வானம்பாடிகள் இதை தாராளமாய் எடுத்தாண்டிருக்கிறார்கள்.) ஒரு பெரும் மக்கள் திரளை நோக்கி ஒருவன் உரையாற்றும் தொனியை இது மனுஷ்யபுத்திரன் கவிதைகளுக்கு தருகிறது என்கிறார் ஜெயமோகன் (“கடவுளற்றவனின் பக்திக் கதைகள்: மனுஷ்யபுத்திரன் கவியுலகு”). இங்கே வெகு அந்தரங்கமான ஒரு துயர கவிதையில் தனிமையை இன்னும் உக்கிரமாக்கவும் மனுஷ்யபுத்திரன் இந்த உத்தியை பிரயோகிக்கிறார்.  
அடுத்து அவரது சொற்தேர்வை பார்ப்போம்.

ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
இங்கு அவர் எதுகையை கொண்டு வர நினைத்திருந்தால் வெவ்வேறுஎன எழுதியிருக்கலாம். இசை ஒழுங்கு மீது மனுஷ்யபுத்திரனுக்கு ஒவ்வாமை இல்லை. ஆனால் அவர் ஏன் செய்யவில்லை? இங்கு எதுகை அமையாமல் இடறுகிறது. அது சற்றே நிரடுகிறது. பிறகு ஏன் மனுஷ்யபுத்திரன் இச்சொல்லை தேர்கிறார்?
 வெவ்வேறுஎனும் சொல் சன்னமானது; வேகமாய் ஒழுங்கிச் செல்வது; மேலும் எதுகையானால் அச்சொல்லில் நாம் நின்று யோசிக்க மாட்டோம். இந்த இடத்தில் பிரிவின் கனம் கூடி வர வேண்டுமெனில் ஒரு கனத்த சொல் வேண்டும். ஆகையால்வேறுவேறுபொருத்தம். அச்சொல் சோற்றிடையே நாம் கடித்த சிறு கல்லைப் போல் உறுத்துகிறது.
அதே போல இக்கவிதையில்வாழ்விடங்களுக்கு, “துயரங்களெங்கும், “நீங்குதலின், “இல்லாமலாகும்போன்று 15 கனத்த ஓசை கொண்ட நீண்ட சொற்கள் வருகின்றன. தமிழுக்கே உரித்தான பெயர்ச்சொல் + வினையுரிச்சொல் ஜோடிச்சொற்களை நிறைய பயன்படுத்துகிறார் (.தா, “துயரங்களெங்கும், “நமக்கிடையே”). இதைப் போன்றே பன்மைச் சொற்களும் (”நிலங்களின், ”வாழ்விடங்களுக்கு”) வருகின்றன. ”அந்தி இருள்என எழுத முடிகிற இடத்தில்அந்தியின் இருள்என்கிறார். இவை எல்லாம் சேர்ந்து இக்கவிதையை நீங்கள் உரக்க படிக்கிறீர்கள் என்றால் வேகமாய், ஜிலுஜிலுவென வாசித்துப் போக முடியாது. உங்கள் வாசிப்பின் கால அளவு நீள்கிறது. நீண்டு செல்லும் உணர்ச்சி என்றுமே துயரம் தானே! இப்படி இக்கவிதையை சொற்தேர்வின் வழியே மட்டுமே, கனத்த தொனியை ஏற்படுத்தி, நம் மனதுக்குள் கசப்பேற செய்கிறார் மனுஷ்யபுத்திரன்.
இனி கவிதையின் இறுதி வரி.
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது
இது பிரிகிற அந்த காதல் ஜோடியின் கையைப் பற்றியபடி ஒரு குழந்தை நடந்து வருகிற தோற்றப்பிழையை உருவாக்குகிறது. அதுவும் குழந்தையாகிய சிறு துயரம் மிக அமைதியாய் நடந்து வருகிறது. உடைந்த குடும்பங்களில் தான் அப்படி நிகழும். இங்கே குடும்பமே இல்லை; ஆனாலும் கற்பனையில் ஒரு குடும்பம் இருக்கிறது. அது அவர்கள்தூக்கிய வளர்த்த துயரமாகஇருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான உருவகத்தில் என் கவனத்தை நெருடிய விசயம்ஒரு வார்த்தை பேசாமல் / மௌனமாக”.
ஒரு வார்த்தை பேசாமல் என்றாலே மௌனம் தானே? ஏன் மீள சொல்ல வேண்டும்? அதே போலநம்முடன்என்பதில்உடன்இருக்கிறதே; அதை திரும்பகூடவேஎன ஏன் அதே வாக்கியத்தில் சொல்ல வேண்டும்?
ஒரு காரணம் உள்ளது.
இவ்வாக்கியத்தை ஒருவேளைநம்முடன் /
மௌனமாக நடந்து வருகிறதுஎன திருத்தினால் (சலூனில் முடிவெட்டி வந்த குழந்தை போல) வாக்கியம் ஜீவனற்று போகிறது; ஏனெனில்
 ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது

என்பதில் மீள ஒலிக்கும் அச்சொற்கள் நேர்பொருளுக்கு தேவையில்லை தான். ஆனாலும் கவிதையின் தனிமை தொனியை அடர்த்தியாக்க, நகைமுரணை தீவிரமாக்க, உங்கள் விழியோரம் துளிர்க்கும் அந்த ஒற்றைக் கண்ணீர்த் துளியை கனத்துப் போக செய்ய அச்சொற்கள் மிகையாய் தோன்றி மீள ஒலிப்பது அவசியமாகிறது.
ஆகையால் நண்பர்களே இதற்கு மேல் நான் சொற்களை இறைக்கப் போவதில்லை.  

நன்றி: தீராநதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...