முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸுக்கு வெளியே உள்ள தனிமை


Image result for bigg boss tamil

பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.

வெளியுலகில் உங்களோட பேச பழக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உற்ற உறவினர்கள் உண்டு. இங்கோ ஒன்றிரண்டு பேரைத் தவிர நீங்கள் இதயம் கனிந்து பேச ஆளில்லை. உங்களுக்கு கட்டளையிடும் பிக்பாஸின் குரல் யாரென அறிய மாட்டீர்கள். உங்கள் மைக் என்பது உங்கள் குரல்களை வெளியுலகுக்கு 24*7 கொண்டு போகும் ஒரு கருவி. உலகமே உங்களைப் பார்த்து மதிப்பிட இந்த உலகிலேயே மிக மிக தனிமையானவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு சௌகர்யமாய் தன்னம்பிக்கையாய் திருப்தியாய் உணர்கிறீர்கள்? ஏன் வெளியுலகுக்கு மீள இந்தளவு தயங்குகிறீர்கள், கலங்குகிறீர்கள்? அது பற்றி ஏன் பதற்றமுறுகிறீர்கள்?
ஒன்று, பிக்பாஸ் வீட்டினுள் ஐந்து பேர் மத்தியில் வாழ்ந்தாலும் உங்களை ஐந்து கோடிக்கு மேல் மக்கள் பார்க்கக் கூடும் எனும் அங்கீகாரம், அது தரும் மக்கள் திரளின் மையமாய் உணரும் திருப்தியே தனி.
 ஒருவிதத்தில் அது ஒரு போலியான சமூகமாக்கல் மகிழ்ச்சி – இந்த பார்வையாளர்கள் யார், அவர்கள் உண்மையிலேயே உங்களை பொருட்படுத்துகிறார்களா, உங்களின் பால் அக்கறை கொண்டுள்ளார்களா, அது உண்மையான நிஜமான உறவா என்றெல்லாம் கேட்டால் “இல்லை” என்றே பதில் வரும். “பிக்பாஸ்” முடிந்த பின் ஒரு நெடுந்தொடர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும். பிக்பாஸ் பார்வையாளர்கள் நிச்சயம் மக்கள் மனதில் சற்று காலம் இருப்பார்கள்; ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் மக்கள் ஐஷ்வர்யா, ஜனனி, ரித்விகா பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
அடுத்து, வெளிவாழ்வில் நாம் முயற்சி எடுக்காவிடில் யார் கண்ணிலும் பட மாட்டோம்; யார் கவனத்தையும் கவர மாட்டோம். நாம் ஒதுங்கி விட்டால் மக்கள் நம்மை மறந்தே விடுவார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலோ நாம் என்ன செய்தாலும் இல்லாவிடிலும் நாம் மக்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருப்போம். இது பங்கேற்பாளர்களுக்கு தம்மைப் பற்றி ஒரு மிகையுணர்வை அளிக்கும். அவர்களின் அற்ப சச்சரவுகள், சொந்த கவலைகள், குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடும் அரைகுறை நடனங்கள், அவர்களின் உளறல்கள் என எல்லாவற்றுக்கும் அவ்வளவு மதிப்பு, முக்கியத்துவம், சமூக இடம் கிடைக்கிறது. ஐஷ்வர்யா தலையை சொறிந்தாலே அதை கோடிக்கணக்கானோர் உற்று கவனிக்கிறார்கள்; இதையே அவர் தன் வீட்டில் தனியாய் உட்கார்ந்து கண்ணாடி முன்னிருந்து செய்தால் என்ன மதிப்பு?
ஆக இந்த மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் இருந்து சட்டென ஒருநாள் துண்டிக்கப்பட்டு எளிய இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் திரும்ப அனுப்பப்படும் போது உண்மையிலேயே அவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருக்கும்; தாம் ஒரே நாளில் மதிப்பற்று போனதாய் மனம் உடைந்து போவார்கள். இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்ப தற்காலிகமாய் வரும் போது அவர்களின் முகம் ஏக்கத்தில் வாடிப் போய் தெரிகிறது.
ரித்விகா தன் மைக்கை குழந்தையாய் கருதுவதாய் சொன்னதை நான் நம்மில் பலரும் நம் செல்போனை ஒரு உற்ற நண்பனாய், காதலியாய், உடலின் உறுப்பார் கருதுவது போன்ற மனநிலை என்றே பார்க்கிறேன். செல்போன் நாம் ஒரே சமயம் தனியாகவும் பல்லாயிரம் பேருடனும் இருப்பதாய் ஒரு பாவனையான பாதுகாப்புணர்வை அளிக்கிறது – நீ தனியாய் இல்லை என அது நம்மிடம் மீள் மீள சொல்கிறது. பிக்பாஸ் வீட்டில் அந்த மைக்கே அவர்களின் செல்போன் – அதுவே அவர்களின் குரல், அவர்களின் அடையாளம், அவர்களின் மையம். அதில்லாமல் அந்த வீட்டுக்குள் அவர்கள் ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுவார்கள்.
இப்படி இல்லாத ஒரு உலகத்துக்காய் வாழ்வது, கண்காணாத இதயங்களின் அன்புக்காய் விழியை திறந்து வைத்து தேடுவது ஒரு அவலம். அது நம் காலத்தின் அவலம். இது நம் அனைவரின் அவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...