முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸுக்கு வெளியே உள்ள தனிமை


Image result for bigg boss tamil

பிக்பாஸிடம் வாக்குமூல அறையில் பேசிய ரித்விகா, இறுதி நாளுக்குப் பின், பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறின பின் தன் (கழுத்தில் மாட்டின) மைக்கை மிகவும் மிஸ் பண்ணப் போவதாய் சொன்னார். “இந்த மைக் என்னோட குழந்தை; இதை பெட்ஷீட் போர்த்தி தூங்கவெல்லாம் வச்சிருக்கேன்” என்றார். திரும்பத் திரும்ப மைக்கையும் பிக்பாஸ் வீட்டையும் பற்றி மிகுந்த ஏக்கத்துடன் பேசிக் கொண்டு போனார். அதன் பிறகு ஐஸ்வர்யா, ஜனனி என ஒவ்வொருவர் உரையாடும் போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேனால் தாம் எவ்வளவு தனிமையாய் உணர்வோம் என விசனப்பட்டார்கள். ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மஹத், ஷாரிக், நித்யா போன்றோரும் திரும்ப வந்து சில மணிநேரம் பிக்பாஸ் வீட்டில் கழிக்கையில் (ஒன்று), வெளியே எந்தளவு தனிமையாய் இருந்து பிக்பாஸை மிஸ் பண்ணினோம் என சொல்கிறார்; (இரண்டு) “நாங்க பிக்பாஸ் வீட்டிலேயே இருக்கிறோம்; பிக்பாஸ் எங்களை வெளியேற்றாதீங்க” என கெஞ்சுகிறார்கள். எனக்கு இந்த பார்வையே ரொம்ப விசித்திரமாய் பட்டது.

வெளியுலகில் உங்களோட பேச பழக உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உற்ற உறவினர்கள் உண்டு. இங்கோ ஒன்றிரண்டு பேரைத் தவிர நீங்கள் இதயம் கனிந்து பேச ஆளில்லை. உங்களுக்கு கட்டளையிடும் பிக்பாஸின் குரல் யாரென அறிய மாட்டீர்கள். உங்கள் மைக் என்பது உங்கள் குரல்களை வெளியுலகுக்கு 24*7 கொண்டு போகும் ஒரு கருவி. உலகமே உங்களைப் பார்த்து மதிப்பிட இந்த உலகிலேயே மிக மிக தனிமையானவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு சௌகர்யமாய் தன்னம்பிக்கையாய் திருப்தியாய் உணர்கிறீர்கள்? ஏன் வெளியுலகுக்கு மீள இந்தளவு தயங்குகிறீர்கள், கலங்குகிறீர்கள்? அது பற்றி ஏன் பதற்றமுறுகிறீர்கள்?
ஒன்று, பிக்பாஸ் வீட்டினுள் ஐந்து பேர் மத்தியில் வாழ்ந்தாலும் உங்களை ஐந்து கோடிக்கு மேல் மக்கள் பார்க்கக் கூடும் எனும் அங்கீகாரம், அது தரும் மக்கள் திரளின் மையமாய் உணரும் திருப்தியே தனி.
 ஒருவிதத்தில் அது ஒரு போலியான சமூகமாக்கல் மகிழ்ச்சி – இந்த பார்வையாளர்கள் யார், அவர்கள் உண்மையிலேயே உங்களை பொருட்படுத்துகிறார்களா, உங்களின் பால் அக்கறை கொண்டுள்ளார்களா, அது உண்மையான நிஜமான உறவா என்றெல்லாம் கேட்டால் “இல்லை” என்றே பதில் வரும். “பிக்பாஸ்” முடிந்த பின் ஒரு நெடுந்தொடர் அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும். பிக்பாஸ் பார்வையாளர்கள் நிச்சயம் மக்கள் மனதில் சற்று காலம் இருப்பார்கள்; ஆனால் ஒரு வாரத்திற்குப் பின் மக்கள் ஐஷ்வர்யா, ஜனனி, ரித்விகா பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
அடுத்து, வெளிவாழ்வில் நாம் முயற்சி எடுக்காவிடில் யார் கண்ணிலும் பட மாட்டோம்; யார் கவனத்தையும் கவர மாட்டோம். நாம் ஒதுங்கி விட்டால் மக்கள் நம்மை மறந்தே விடுவார்கள். ஆனால் பிக்பாஸ் வீட்டிலோ நாம் என்ன செய்தாலும் இல்லாவிடிலும் நாம் மக்கள் கவனத்தில் இருந்து கொண்டே இருப்போம். இது பங்கேற்பாளர்களுக்கு தம்மைப் பற்றி ஒரு மிகையுணர்வை அளிக்கும். அவர்களின் அற்ப சச்சரவுகள், சொந்த கவலைகள், குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடும் அரைகுறை நடனங்கள், அவர்களின் உளறல்கள் என எல்லாவற்றுக்கும் அவ்வளவு மதிப்பு, முக்கியத்துவம், சமூக இடம் கிடைக்கிறது. ஐஷ்வர்யா தலையை சொறிந்தாலே அதை கோடிக்கணக்கானோர் உற்று கவனிக்கிறார்கள்; இதையே அவர் தன் வீட்டில் தனியாய் உட்கார்ந்து கண்ணாடி முன்னிருந்து செய்தால் என்ன மதிப்பு?
ஆக இந்த மிகைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் இருந்து சட்டென ஒருநாள் துண்டிக்கப்பட்டு எளிய இயல்பு வாழ்க்கைக்கு இவர்கள் திரும்ப அனுப்பப்படும் போது உண்மையிலேயே அவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியாய் இருக்கும்; தாம் ஒரே நாளில் மதிப்பற்று போனதாய் மனம் உடைந்து போவார்கள். இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திரும்ப தற்காலிகமாய் வரும் போது அவர்களின் முகம் ஏக்கத்தில் வாடிப் போய் தெரிகிறது.
ரித்விகா தன் மைக்கை குழந்தையாய் கருதுவதாய் சொன்னதை நான் நம்மில் பலரும் நம் செல்போனை ஒரு உற்ற நண்பனாய், காதலியாய், உடலின் உறுப்பார் கருதுவது போன்ற மனநிலை என்றே பார்க்கிறேன். செல்போன் நாம் ஒரே சமயம் தனியாகவும் பல்லாயிரம் பேருடனும் இருப்பதாய் ஒரு பாவனையான பாதுகாப்புணர்வை அளிக்கிறது – நீ தனியாய் இல்லை என அது நம்மிடம் மீள் மீள சொல்கிறது. பிக்பாஸ் வீட்டில் அந்த மைக்கே அவர்களின் செல்போன் – அதுவே அவர்களின் குரல், அவர்களின் அடையாளம், அவர்களின் மையம். அதில்லாமல் அந்த வீட்டுக்குள் அவர்கள் ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுவார்கள்.
இப்படி இல்லாத ஒரு உலகத்துக்காய் வாழ்வது, கண்காணாத இதயங்களின் அன்புக்காய் விழியை திறந்து வைத்து தேடுவது ஒரு அவலம். அது நம் காலத்தின் அவலம். இது நம் அனைவரின் அவலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...