முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் புத்தாண்டு தீர்மானங்கள்


Image result for 2019 new year resolution

புத்தாண்டு தீர்மானங்களை நிறைவேற்றித் தான் ஆக வேண்டியதில்லை. ஆனால் அவை நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருவன. ஆகையால் இவ்வாண்டு கீழ்வரும் தீர்மானங்களை எடுக்கிறேன்.
1)   இவ்வருடம் அதிகமும் நான் கடுகுகள் வெடித்துத் துள்ளும் எண்ணெய்ச் சட்டியை போல இருந்தேன். நாற்பக்கமும் வாளைச் சுழற்றி ஒரே ரத்த சகதி தான் (முகநூலில் அல்ல நடப்புலகில்). வரும் வருடம் ஒரு நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளினி போல இனிமையாய் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் போகிறேன். கோபம் வந்தால் கத்திக்குப் பதில் ஒரு ரோஜா.

2)   அம்மா என் குரலுக்காக எவ்வளவு ஏங்குகிறாள் என புரிந்து கொண்டேன். அவளிடம் தினமும் பேச வேண்டும்.
3)    உறவில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் அதை பச்சை விளக்கென்றே கருதி அணுக்கமும் நம்பிக்கையையும் காட்டப் போகிறேன். தயக்கம் கூடவே கூடாது. நானாக முன்வந்து அணுகினால் விலகினவர்கள் நெருங்கி விடுவார்கள்.
4)   ஜீனோ (என்னுடைய டேக்‌ஷ்ஹண்ட் நாய்) பங்களூருக்கு வருகிறான். இனி வரும் வருடங்களில் அவனை நன்றாய் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். அவன் என் செல்லமானதில் இருந்தே நான் அன்பைக் காட்டுவதில் காட்டிய ஆர்வத்தை அவனை வெளியே அழைத்து செல்வதில் காட்டியதில்லை. அதை 2019இல் திருத்த வேண்டும்.
5)   எதையாவது ஒரு புதுத் திறனை கற்றுக் கொள்ள வேண்டும் நான் எதைப் புதிதாய் கற்க நேரும் போதும் அது சட்டென ஒரு ஜன்னலைத் திறந்து ஒரு பூங்காவனக் காட்சியை, உதயத்தை, உற்சாகமான உலகை எனக்கு காட்டுவதுண்டு; என் எழுத்துக்கு ஒரு எதிர்பாராமையை அளித்ததுண்டு. என் முன்னுள்ள தேர்வுகள் இவை:
அ) குங்பூ
ஆ) குத்துச்சண்டை
இ) தியானம்
ஈ) யோகா
6)  யாரோடும் ஒட்டாமல் சின்ன வட்டத்துக்குள் இருப்பது என் பலவீனம். இவ்வருடம் சமூகமாக்கலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
7) என்னால் எல்லா பல விசயங்களில் சரிவிகிதமாய் அக்கறை / கவனம் செலுத்த முடியாது. எதை எடுத்துக் கொண்டாலும் எறும்பு சர்க்கரை டப்பாவுக்குள் கவிழ்ந்து விழுவது போல கவிழ்ந்து விடுவேன். 2018இல் அவ்வாறு தான் மிகுதியாய் என் வகுப்புகளுக்குள் ஆர்வம் செலுத்தி என்னை இழந்து விட்டேன். அது என் எழுத்து மீதான கவனத்தை சிதைப்பதை உணர்ந்தேன். ஆகையால் 2019இல் வகுப்புகளே எட்டப் போ! பாடமெடுப்பேன் – ஆனால் அதில் முழுமனமும் சென்று விடாதபடி பட்டும்படாமல் இருக்க முயல்வேன். பிரதானமான நேரத்தை (மாணவர்களுக்காக அன்றி) எழுத்துக்காக ஒதுக்க வேண்டும்.
8) எழுதுவதில் என்னை பறிகொடுப்பதால் வருமானத்தை அதிகம் கவனிப்பதில்லை. பெங்களூர் வாழ்க்கை கூடுதல் செலவுகளை கோருகிறது. 2018இல் என்னால் உபரி வருமான வழிகளை அடைய முடியவில்லை. அதற்கான சிரத்தையை நான் எடுக்கவில்லை. 2019இல் அதை செய்வேன். அடுத்த டிசம்பரில் என்னிடம் போதுமான தொகை சேமிப்பில் இருக்க வேண்டும். முக்கியமான இலக்கு இது.
9) இடைவிட்ட விரதத்தை (intermittent fasting) இரண்டு மாதங்களாய் பின்பற்றி வருகிறேன். 24 மணிநேரங்கள் தினமும் உண்ணாமல் இருக்க வேண்டும்; இரவுணவு மட்டுமே அருந்தலாம் என்பதே இடைப்பட்ட விரதம். 2019இல் ஞாயிறு மட்டுமே மூன்று வேளை உணவு. மூன்றாவது மாதத்தில் இருந்து ஞாயிறும் 24 மணிநேர விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல ஐந்து நாள் தொடர் விரதம் இருக்க வேண்டும் என்பது இலக்கு. அடுத்த ஆகஸ்டில் இருந்து தொடர் ஆறுநாள் விரதம் இருக்க வேண்டும் (6 நாட்கள் இரவுணவும் கூடாது) என்பது அடுத்த கட்ட இலக்கு.
10) எழுதுவதே என் பண்பாட்டுக்கான, மொழிக்கான பங்களிப்பு, என் சமூகத்துக்கான பணி, ஆகையால் சமூகத்துக்காக கூடுதலாய் நான் என்ன பண்ண வேண்டும் என யோசித்திருந்தேன். ஆனால் இவ்வருடம் ஒரு தன்னார்வ அமைப்புடன் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளை சந்தித்தது ஒரு நல்லனுபவமாக இருந்தது. 2019இல் இத்தகைய பணிகளைத் தொடர வேண்டும். எழுதினால் மட்டும் போதாது. எழுத்தாளன் தன் எழுத்து மட்டுமே அல்ல!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...