முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய மோதல்களின் பின்னுள்ள ஒற்றுமை


Image result for காலச்சுவடு கண்ணன்
நான் மாணவர்களுடன் இணைந்து சமீபத்தில் கொண்டு வந்த ஆங்கில மொழியாக்க தொகுப்பில் தமிழில் இருந்த இடம்பெற்றிருந்த மூன்று சிறுகதையாளர்களில் சு.ராவும் ஒருவர். விற்பனைக்கு இல்லை, உள்சுற்றுக்கு மட்டுமே இல்லை என்பதால் நாங்கள் அனுமதி பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. முடிந்த அளவுக்கு படைப்பாளிகளை அணுகி தகவல் சொன்னோம். தமிழில் பு.பியின், ஜி.நாகராஜனின் பதிப்புரிமை யாரிடம் எனத் தெரியவில்லை. ஆனால் சு.ராவின் பதிப்புரிமை காலச்சுவடிடம் – கண்ணனிடம் – என அறிவேன். அவரை என் பதின்வயதில் இருந்தே அறிவேன். ஆனால் நான் எழுத்தாளனாய் அறிமுகமாகி வளர்ந்து வந்தது காலச்சுவடின் போட்டிப் பதிப்பகமான உயிர்மையில். இலக்கிய குழுக்களில் காலச்சுவடும் உயிர்மையும் இன்றும் பேசிக் கொள்ளாத முரண் குழுக்களே. ஆகையால் கண்ணனை எப்படி அணுகி இதைப் பற்றி சொல்வது, அவர் அனுமதி மறுப்பாரா என்றெல்லாம் குழப்பங்கள், தயக்கம், ஒரு விள்ளல் பயம்.

 மெஸஞ்சரில் அவரிடம் எண் வாங்கி வைத்துக் கொண்டேன். அவர் நேர்மறையாய் பேசினால் அவரை வெளியீட்டின் போது சில சொற்கள் (வீடியோ சாட்டில்) பேச வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் முறையாக முன்னமே தெரிவிக்கவில்லை என அவர் யோசித்தால் என்ன செய்வது? இப்படியே மனத்துக்குள் வலை பின்னிப் பின்னி தள்ளிப் போட்டு புத்தக வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறுவழியின்றி அவரை அழைத்தேன். கிடைக்கவில்லை. அவர் விமானத்தில் இருந்ததாய் பின்னர் குறுஞ்செய்திஅனுப்பினார். நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு, ஒரு நாள் தள்ளிப் போட்டு, அழைத்தேன். அவர் கனிவாக பேசினார். புத்தக வெளியீடு வேளையில் தனக்கு ஒரு கூட்டம் உள்ளதால் அப்போது பேச இயலாது என்றார். எனக்கு அவர் இதை எடுத்துக் கொண்ட விதம் சற்று ஆச்சரியமாகவும் நிறைய மகிழ்ச்சியாகவும் இருந்தது. புத்தக வெளியீடு சிறப்பாக நடந்தது. ஒரு பிரதியை கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பெற்ற பிறகு கண்ணன் இன்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்:
 I received the signed copy of Dispossed. Wonderful attempt. Will take a careful look at it after the book fair. Thank you.
காலச்சுவடு மொழிபெயர்ப்பை முறையான வகையில், பதிப்புரிமை பெற்று, சில நேரம் நல்கைகள் பெற்று, செய்து உலக இலக்கிய படைப்புகளை தொடர்ந்து தமிழில் கொண்டு வரும் ஒரு பதிப்பகம். நாங்கள் செய்வது தமிழில் எண்பதுகள் வரை  நடைபெற்ற மொழியாக்க இயக்கத்தின் தொடர்ச்சி. (தனிப்பட்ட வகையில், விதிமுறைகள், முறைமைகள் பற்றி அக்கறைப்படாமல் இலக்கிய பயன்பாட்டுக்காக மட்டுமே செய்து வந்த மொழியாக்கம்). இன்று மொழியாக்கம் கார்ப்பரேட்மயமாகிய பின் தனிப்பட்ட முறையில் யாரும் பிடித்த படைப்பை மொழியாக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இப்படி சிறிய வட்டங்களில் முறைமையின்றி நிகழும் மொழிபெயர்ப்பு பணிகளும் – முறையான மொழியாக்க பதிப்புக்கு இணையாக - அத்தியாவசியமானவை. இதை கண்ணன் அறிந்துள்ளார் என்பது எனக்கு உவகையளித்தது.
 எனக்கு இதைப் பற்றி யோசிக்கையில் ஜெயமோகன் குழுச்சண்டை பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. குழு சார்ந்த மோதல்களே தமிழில் சிறந்த இலக்கிய இயக்கங்கள் தோன்ற, படைப்புகள் எழுதப்பட ஊக்கியாக அமைந்தன என்றார் ஜெ.மோ. குழு என்பது தனிப்பட்ட பிரிவு அல்ல, அது மாறுபட்ட பார்வையின், நிலைப்பாட்டின் அணிவகுப்பு. லட்சியமும், நிலைப்பாடும் இரு சாராரை பிரிக்கும் போதும் இலக்கியத்தின், பண்பாட்டின் பாலுள்ள பிடிப்பு இந்த குழுவினருக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொள்ள வைக்கிறது. அவர்கள் பிரிந்திருக்கும் போதும் ஒரே லட்சியத்துக்காகத் தான் பணி செய்கிறார்கள். முரண் என்பது முகக்களிம்பு போன்ற ஒன்று மட்டுமே. ஆகையால், பெண்ணிய கவிதைகளை கடுமையாய் சாடும் ஜெ.மோ லீனாவை விஷ்ணுபுரம் விழாவில் பேச வைப்பார். லீனாவும் செல்வார். எனக்கு முந்தைய தலைமுறையினரிடம் இப்படி முரணை தனிப்பட்ட விரோதமாய் எடுத்துக் கொள்ளாத மாண்பை காண்கிறேன். இது மெச்சத்தக்க ஒன்று. கண்ணனிடமும் ஜெயமோகனிடமும் இந்த மாண்பை நான் பார்க்கிறேன்.
படைப்பாளி தனிமனிதன் அல்ல. படைப்புலகில் தனிமனிதர்களே இல்லை. தனிமனித கோபங்களும் பார்வைகளும் வெறும் பாவனைகளே. அதைக் கடந்து நாம் எப்போதுமே கைகோர்க்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.