முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புகைக்கும் பெண் (1)


Image result for rajini smoking

சிகரெட் எப்போதுமே சற்றே முரட்டுத்தனமான, உதிரியான, கடுமையான, எதிர்-மனநிலையை உணர்த்தும் ஒரு வஸ்து தான். பொன்னிற மதுவை கண்ணாடிக் கோப்பையில் உறிஞ்சும் நங்கையை கூட நளினமானவளாக பார்க்க இயலும். மது ஒரு பெண்ணை கிக்காக காட்டுவதுண்டு. சொல்லப் போனால், நமது கவர்ச்சிக்கன்னிகளான சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் விழி நுனியில் போதையை தேக்கி வைத்தவர்களாகவே தம்மைக் காட்டிக் கொண்டனர். மது போதையை குறிப்புணர்த்தும் அந்த போதையே அவர்களைக் கண்டு பல கோடி ஆண்களை கிளரச் செய்தது. அவர்கள் மதுவை கையில் ஏந்தவில்லை, பார்வையில் ஏந்தினர்.
என் அறிவில், சிகரெட் புகைக்கும் ஹீரோயின்களோ கவர்ச்சிக் கன்னிகளோ இங்கு மிக மிகக் குறைவு. அதற்கு ஒரு காரணம் சிகரெட் போதையை அல்ல மீறலை சுட்டுகிறது என்பது தான். மேலும் சிகரெட் புகைத்தல் அத்துமீறலை, ஆக்கிரமிப்பை, சிதைவை, ஆக்ரோசத்தை, எதிர்ப்புணர்வை சித்தரிக்கிறது. ஆசையைத் தூண்டும் பெண் பிம்பத்தோடு இந்த உணர்வுகள் பொருந்துவதில்லை.

அதாவது, பலரும் கருதுவது போல சிகரெட் ஆண் செருக்கின், ஆதிக்கத்தின் பிம்பம் என்பதால் நம் ஹீரோயின்கள் திரைவெளியில் புகைக்காமல் இருக்கவில்லை; பொதுவெளியிலும் பெண்கள் இக்காரணத்தால் புகைக்காமல் இருக்கவில்லை. ஏனென்றால் ரஜினி தோன்றி சிகரெட்டை காற்றில் சொடுக்கி விட்டு உதடுகளால் கவ்வி தோரணை காட்டும் வரை நம் நாயகர்கள் சிகரெட் புகையை தன் முத்திரையாக்கவில்லை. ரஜினிக்குப் பின்பு கூட இன்று வரை நமது நாயகர்கள் திரையில் அதிகம் புகைப்பவர்கள் இல்லை. எப்போதெல்லாம் அவர்கள் எதிர்-நாயகர்களாகவோ தேவதாஸ்களாகளோ தோன்றுகிறார்களோ அப்போதெல்லாம் கையில் மதுக்கோப்பையுடன் சிகரெட்டை ஊதி அதில் மிதக்கிறவர்களாக நடிப்பார்கள். அப்போது மதுக்கோப்பை அவர்களின் மிதப்பையும் சிகரெட் அவர்களது சமூக மீறலையும் குறிப்பதாக அமையும். அதாவது தேவதாஸின் காதல் மிதப்பு குடி, அவனது சமூக கட்டமைப்பு மீறலுக்கு புகை.
ரஜினி வாயில் சிகரெட்
எண்பதுகளில் ரஜினி ஒரு வில்லனாகவும் அதிலிருந்து எதிர்-நாயகனாகவும் பரட்டைத் தலையும் அலட்சிய உடல்மொழியுமாக தோன்றிட அவருக்கு சிகரெட் ஒரு முக்கிய குறியீடாக உதவியது. இதன் பின்னர் அவர் மெல்ல மெல்ல குடும்பத்திலும் காதல் உறவிலும் சமூகப் போராட்டங்கள் / புரட்சிகளிலும் ஈடுபடும் புரட்சி-நாயகனாகி அதில் இருந்து சூப்பர் ஸ்டாராக உருமாறினார். அவரது சமூக எதிர்ப்பு வெறும் முரட்டுத்தனமாக தோன்றி விளையாட்டுத்தனமாகி இறுதியில் சமூக / குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஹீரோயிசமாக உருமாறி வந்தது. இப்போது அவர் சிகரெட்டை கைவிட்டு ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் சூயிங் கம்மை வாயில் இட்டு மெல்கிறவரானார். அதாவது, விளிம்பில் இருந்து, விளிம்புநிலை பண்பாட்டில் இருந்து அவர் மையத்திற்கு நகர்ந்திட சிகரெட்டை கைவிட வேண்டியதானது.
ரஜினியுடன், ரஜினிக்குப் பின் தோன்றின நாயகர்கள் எவரும் அவர் அளவுக்கு கலகத்தனம் கொண்டவர்களாக உருப்பெறவில்லைஅவரளவுக்கு விளிம்புநிலை உடல்மொழியுடன் அனைத்தையும் மறுக்கிற இடத்தில் நின்று அலட்சியமாக ஹீரோயிசம் பண்ணவில்லை. ரஜினியுடன் / அவருக்கு சற்றுப் பின்னால் நடிக்க வந்த விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்றோர் ரஜினியை விட மிகுதியான ஆண்மை வீரியத்தை தம் பாத்திரங்களில் சித்தரித்தவர்கள். ஆனால் அவர்களுக்கு சிகரெட் தேவைப்படவில்லை. தனுஷ் தன் பாத்திரங்களுக்குள் மட்டும் கலகம் பண்ணுகிறவரானார்; சிம்பு காதல் விளையாட்டுகளில் மட்டும் கலகவாதியாய் காட்டிக் கொண்டார். ஆக, யாருக்குமே சிகரெட் தேவைப்படவில்லை.
தமிழ், மலையாளம், இந்தி எங்குமே நாயகர்கள் தொடர்ந்து (ரஜினி அளவுக்கு) வாயில் சிகரெட் புகைய தோன்றவில்லை என்பது ஒரு விசித்திரமான விசயம்ஹாலிவுட்டில் காட்சிக்குக் காட்சி புகைய வருகிற நாயகர்களை அறுபதுகளில் இருந்து இன்று வரை பார்க்க முடியும். இந்தியாவின் எந்த தெருமுனை, பெட்டிக்கடைக்குப் போனாலும் புகை மண்டலம் நடுவே கண்கள் மினுங்க நிற்கும் ஆண்களைப் பார்க்கலாம். பொதுவில் நாம் குடிக்கிற ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் புகைக்கிற ஆண்களையே பார்க்கிறோம். “ஒரு தம் போட்டு வரலாமா?” எனும் வசனம் கேட்காத இலக்கிய கூட்டம் உண்டா? ஆனால்ஒரு பெக் போட்டு வரலாம்என சந்திப்புகள், கூட்டங்கள் நடுவே கிளம்புகிற ஆண்கள் மிக மிகக் குறைவே. ஆனால், நம் சினிமாவில் குடிக் காட்சிகள், குடி பிம்பங்கள் தோன்றுவதற்கு பத்தில் ஒரு பங்கு கூட புகைக் காட்சிகளும் புகை பிம்பக்களும் வருவதில்லை, மதுப்புட்டியுடன் ஆண்கள் ஆடிப் பாடும் காட்சிகள் வரும் அளவு சிகரெட் புகைத்தபடி அதைப் பற்றி சிலாகித்து ஆண்கள் பாடும் காட்சிகள் வருவதில்லை. உதா., “வேலையில்லா பட்டதாரி” (1) படத்தில் தனுஷ் ரகசியாய் ஒளித்து வைத்து புகைப்பவராக வருகிறார்; ஆனால் வெளிப்படையாய் மொட்டைமாடியில் உழைக்கும் தொழிலாளிகளுடன் சேர்ந்து குடித்து பாடுகிறவராக, சாலையில் நண்பர்களுடன் குடித்தபடி பாடுகிறவராக வருகிறார்.
இது ஒன்றைக் காட்டுகிறது: நம் படங்களில் சிகரெட் என்பது ஆண்மையின் குறியீடு அல்ல.
புகை ஒரு சில நொடிகள் வந்தால் கூட மிகத் தீவிரமாக ஒருவரது விளிம்புநிலைத்தன்மையை, சமூக-எதிர் மனநிலையை காட்டுவதாய் வருகிறது; சிகரெட்டுடன் தோன்றும் ஒருவன் தனது அனைத்து விழுமியங்களுக்கும் வெளியே போய் விடுகிறான். அவன் ஒரு காம்யூத்தன்மையிலானஅந்நியன்”. ஆனால் இதையே  மதுவுக்கு சொல்ல முடியாது. மது எப்போது துயர வெளிப்படலுக்கான சந்தர்ப்பம் மட்டுமே.
சிகரெட் எனும் Self-referential குறியீடு
ஆனால் மசாலா படங்களின் குறியீடுகளை பிரக்ஞைபூர்வமாய் கதைமொழிக்குள் கொண்டு வரும் பின்நவீனத்துவ படங்களில் சிகரெட் ஒரு அதிகார சின்னமாகிறது. கார்த்திக் சுப்புராஜின்ஜிகிர்தண்டாவில்நாயகன் கார்த்திக்கும், வில்லன் அசால்ட் சேதுவும் சில காட்சிகளில் மட்டுமே புகைக்கிறார்கள். (இதுவே வணிக படங்களில் என்றால், சிகரெட் புகை துவக்கம் முதல் முடிவு வரை இப்பாத்திரங்களை அடையாளப்படுத்தும் படியாக இருக்கும்.) கார்த்திக் ஒரு இயக்குநராக தன் கேங்ஸ்டர் படத்துக்கு ஆய்வு செய்ய மதுரை வருகிறான். அப்போது அவனது அசட்டுத் துணிச்சலைக் காட்டும் பொருட்டு அவன் நண்பன் ஊருணியுடன் குடித்தபடி புகைக்கும் காட்சி வருகிறது. அடுத்து, அவன் தான் ஆய்வு செய்ய உத்தேசிக்கும் அசால்ட் சேதுவின் கொடூரங்களை கவனித்து அசரும் இடங்களில் புகைப்பதே இல்லை. அவன் ஒட்டுக்கேட்கும் கருவியைக் கொண்டு சேதுவை கவனித்து பிடிபடுகிறான். அப்போது அவனை அடித்து உதைக்கும் சேது அவன் மீது புகை விடுகிறான். அந்த இடத்தில் (அதுவரை ஒரு காட்சியில் கூட புகைக்காத) சேது தன் அதிகாரத்தை, ஆண் வன்மத்தை, சிகரெட் புகையாக கார்த்திக் மீது செலுத்துகிறான். ஒரு கட்டத்தில் சேதுவுடன் சமரசமாகிய பின் இருவரும் அமர்ந்து குடிக்கிறார்கள். ஆனால் சேது யு-டர்ன் எடுத்து படத்தில் நாயகன் தானே என முடிவெடுக்க கார்த்திக் அதிர்ச்சியில் தளர்கிறான். இப்போது ஒரு பெட்டிக்கடைக்காரர் (பெட்டிக்கடை பழனி) அவனுக்கு புத்திமதி அளிக்கிறார். சேதுவை எதிர்த்து தப்பிக்க முயன்று சாகாமல் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி படமெடுப்பதே சம்யோஜிதம் என அறிவுரைக்கிறார். அப்போது அவர் கார்த்திக்குக்கு சிகரெட் கொடுத்து பற்ற வைக்கவும் செய்கிறார். புகை விட்டபடி கார்த்திக் தலை உயர்த்தும் போது அவன் ஒரு நாயகனாக எழுகிறான் எனும் சேதி நமக்கு கிடைக்கிறது. நாயகனும் வில்லனும் மாறி மாறி வேடிக்கைப் பாத்திரம் ஆகி அதிகார நிலையில் ஏறி இறங்குவதே அப்படத்தின் மையக்கருஇதை உணர்த்த சிகரெட்டை இயக்குநர் பயன்படுத்தி இருக்கிறார். நேர்வழியில் யோசிக்கும் கார்த்திக் ரௌடித்தனமாய் யோசிக்கத் துவங்குவதன் குறியீடாக இங்கு சிகரெட் வருகிறது. சிகரெட்டின் எதிர்-பண்பாட்டுக் குறியீட்டை, அதன் குறியீட்டு அதிகாரத்தை ஒரு வணிகப் படத்துக்குள்ளாகவே நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் பயன்படுத்தி கௌரவத்தையும் பகடியையும் மாற்றி மாற்றி காட்டுவதே கார்த்திக் சுப்புராஜின் சாமர்த்தியம். இதை நாம் பெரிதும் கவனிக்காதபடி நுட்பமாய் செய்திருக்கிறார். “ஜிகிர்தண்டாவில்சிகரெட் ஒரு self-referential குறியீடு. அதாவது இதுவரையில் தமிழ் சினிமாவில் சிகரெட் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நினைவுபடுத்தும்படியான குறியீடு.


கருத்துகள்

shiva இவ்வாறு கூறியுள்ளார்…
தொன்னூறுகளிலும் அதற்குப் பின்னரும் பிறந்தவர்கள் சிகரெட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. ஒப்புநோக்க புகைப்படங்கள் பழக்கம் குறைந்திருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...