முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளாவில் ஏன் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன?

Image result for dmk aiadmk cadre
தமிழகத்தில் அதிமுக செயல்பாட்டாளர்களிடம் உரையாடும்போது திமுக மீது ஒருவித பொறாமையான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதிமுககாரர் ஒருவர் திமுககாரரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் குரலிலே மரியாதை தொற்றிக்கொள்ளும். திமுகவினர் அதிமுகவினர் மீது விமர்சனம் கொண்டிருந்தாலும் அவர்களின் கார்ப்பரேட் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் தமது பணியின் பொருட்டே படிநிலையில் ஏறி விரைவில் உச்சாணியை அடையும் சாத்தியம் அதிமுகவில் போல திமுகவில் இல்லாமை பற்றி எல்லாம் கொஞ்சம் புகைச்சலுடனும் மரியாதையுடனும் பேசுவார்கள். ஆகையால் இருவரும் பரஸ்பரம் ஆழமாக வெறுப்பதில்லை.


இது மட்டுமல்ல. நான் பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் முரண்படும் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் பரஸ்பர நட்புணர்வுடன், பண்புடன் உரையாடுவதைக் கண்டிருக்கிறேன். மிக அபத்தமாய் கிறுக்குத்தனமாய் பேசி என்னை கடுப்பேற்றும் பாஜககாரர்கள்கூட நிகழ்ச்சிக்குப் பிறகு என்னிடம் பேசும்போது இயல்பாய் நியாயமாய் தெரிவார்கள்.
தமிழக அரசியலில் லட்சியம், கொள்கை, கோட்பாடு எல்லாம் உண்டுதான். ஆனால் அவை பெயருக்குத்தான். கிட்டத்தட்ட எல்லாக் கோட்பாடுகளும் அடிப்படையில் தமிழ் தேசியக் கதையாடலை, உணர்வைக் கொண்டிருப்பவை. தமிழ், தமிழர் எனும் புள்ளியில் நமது கொள்கைகள் ஒன்றுபடுகின்றன. பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் விதிவிலக்காக இருந்தாலும் அவர்களும் தத்துவத்தை வைத்து ஆழமான வெறுப்பைப் பிற கட்சிகளிடம் காட்டுவதில்லை.

பொதுவாகத் தமிழகக் கட்சிகளின் தமிழுணர்வு என்பது கம்யூனிஸம் போல அரூபமானது அல்ல. இந்துத்துவா போல கற்பனாதீதமானது அல்ல. இது பௌதீகமானது. தமிழ் பேசுபவன், தமிழை நேசிப்பவன் தமிழன். தமிழ் மண்ணில் வசிப்பவன், அதைத் தனது மண்ணாய் நினைப்பவன் தமிழன். தமிழ் உடலும் தமிழ் நிலமும் பௌதீகமான தமிழ் தேசியக் கட்டமைப்பின் ரூபங்கள். ஆகையால் யாரும் இக்கொள்கையை கற்க வேண்டியதில்லை. தத்துவ நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. இங்கு மக்களின் இதயத்துடன் உரையாடுபவர் எவருமே ‘தமிழ் தேசியவாதி’. தமிழை இதயபூர்வமாய் கொண்டாடுபவர் எவரும் ‘தமிழ் தேசியவாதி’. இந்த தேசிய உணர்வு நமது மண் சார்ந்த இனக்குழுவாதத்திலிருந்து, நமது திணைக் கோட்பாட்டிலிருந்து ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஆகையால் தமிழகத்தில் அரசியல் மற்றமை என்பது ஆழமானதல்ல.

கேரளத்தில் இத்தகைய மண் சார்ந்த அரசியல் உணர்வு குறைவு என்பதால் அவர்களின் லட்சியவாதம் அரூபமான சொற்களாலான ஒன்றாய் இருக்கிறது. அது கம்யூனிஸமாக, காங்கிரஸின் மாநிலம் கடந்த தேசியவாதமாக, பாஜகவின் இந்து தேசியமாக உள்ளது (இதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அப்படிச் செயல்படுவதில்லை). இந்த வகையான அபௌதீக லட்சியவாதம் மற்றமையைக் கட்டமைப்பது. இது ஆபத்தானது; இதுவே கொலைக் குற்றங்கள், கொடூரங்களை இழைக்க மக்களைத் தூண்டுகிறது.
கேரளத்தின் அரசியல் குற்றங்களுக்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியாதுதான். ஆனால், இது ஒரு பிரதான காரணம்.

மேலும் படிக்க: https://minnambalam.com/k/2019/02/23/13

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.