முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளாவில் ஏன் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன?

Image result for dmk aiadmk cadre
தமிழகத்தில் அதிமுக செயல்பாட்டாளர்களிடம் உரையாடும்போது திமுக மீது ஒருவித பொறாமையான விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதிமுககாரர் ஒருவர் திமுககாரரைப் பற்றிப் பேசும்போது அவர்கள் குரலிலே மரியாதை தொற்றிக்கொள்ளும். திமுகவினர் அதிமுகவினர் மீது விமர்சனம் கொண்டிருந்தாலும் அவர்களின் கார்ப்பரேட் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு, தனிமனிதர்கள் தமது பணியின் பொருட்டே படிநிலையில் ஏறி விரைவில் உச்சாணியை அடையும் சாத்தியம் அதிமுகவில் போல திமுகவில் இல்லாமை பற்றி எல்லாம் கொஞ்சம் புகைச்சலுடனும் மரியாதையுடனும் பேசுவார்கள். ஆகையால் இருவரும் பரஸ்பரம் ஆழமாக வெறுப்பதில்லை.


இது மட்டுமல்ல. நான் பல டிவி விவாத நிகழ்ச்சிகளில் முரண்படும் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் பரஸ்பர நட்புணர்வுடன், பண்புடன் உரையாடுவதைக் கண்டிருக்கிறேன். மிக அபத்தமாய் கிறுக்குத்தனமாய் பேசி என்னை கடுப்பேற்றும் பாஜககாரர்கள்கூட நிகழ்ச்சிக்குப் பிறகு என்னிடம் பேசும்போது இயல்பாய் நியாயமாய் தெரிவார்கள்.
தமிழக அரசியலில் லட்சியம், கொள்கை, கோட்பாடு எல்லாம் உண்டுதான். ஆனால் அவை பெயருக்குத்தான். கிட்டத்தட்ட எல்லாக் கோட்பாடுகளும் அடிப்படையில் தமிழ் தேசியக் கதையாடலை, உணர்வைக் கொண்டிருப்பவை. தமிழ், தமிழர் எனும் புள்ளியில் நமது கொள்கைகள் ஒன்றுபடுகின்றன. பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் விதிவிலக்காக இருந்தாலும் அவர்களும் தத்துவத்தை வைத்து ஆழமான வெறுப்பைப் பிற கட்சிகளிடம் காட்டுவதில்லை.

பொதுவாகத் தமிழகக் கட்சிகளின் தமிழுணர்வு என்பது கம்யூனிஸம் போல அரூபமானது அல்ல. இந்துத்துவா போல கற்பனாதீதமானது அல்ல. இது பௌதீகமானது. தமிழ் பேசுபவன், தமிழை நேசிப்பவன் தமிழன். தமிழ் மண்ணில் வசிப்பவன், அதைத் தனது மண்ணாய் நினைப்பவன் தமிழன். தமிழ் உடலும் தமிழ் நிலமும் பௌதீகமான தமிழ் தேசியக் கட்டமைப்பின் ரூபங்கள். ஆகையால் யாரும் இக்கொள்கையை கற்க வேண்டியதில்லை. தத்துவ நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. இங்கு மக்களின் இதயத்துடன் உரையாடுபவர் எவருமே ‘தமிழ் தேசியவாதி’. தமிழை இதயபூர்வமாய் கொண்டாடுபவர் எவரும் ‘தமிழ் தேசியவாதி’. இந்த தேசிய உணர்வு நமது மண் சார்ந்த இனக்குழுவாதத்திலிருந்து, நமது திணைக் கோட்பாட்டிலிருந்து ஆதி காலத்திலிருந்தே இருந்துவருகிறது. ஆகையால் தமிழகத்தில் அரசியல் மற்றமை என்பது ஆழமானதல்ல.

கேரளத்தில் இத்தகைய மண் சார்ந்த அரசியல் உணர்வு குறைவு என்பதால் அவர்களின் லட்சியவாதம் அரூபமான சொற்களாலான ஒன்றாய் இருக்கிறது. அது கம்யூனிஸமாக, காங்கிரஸின் மாநிலம் கடந்த தேசியவாதமாக, பாஜகவின் இந்து தேசியமாக உள்ளது (இதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அப்படிச் செயல்படுவதில்லை). இந்த வகையான அபௌதீக லட்சியவாதம் மற்றமையைக் கட்டமைப்பது. இது ஆபத்தானது; இதுவே கொலைக் குற்றங்கள், கொடூரங்களை இழைக்க மக்களைத் தூண்டுகிறது.
கேரளத்தின் அரசியல் குற்றங்களுக்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியாதுதான். ஆனால், இது ஒரு பிரதான காரணம்.

மேலும் படிக்க: https://minnambalam.com/k/2019/02/23/13

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...