முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் காதலை வேடிக்கை பார்ப்பவவர்களின் எதிர்வினை (1)


பிக்பாஸ் வீட்டுக்குள் காதலை அதில் சம்மந்தப்படாதவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே நாம் விவாதிக்கப்போகும் விசயம். அதற்கு முன் வேலையிடத்திலும் நட்பு வட்டங்களிலும் பொதுவான காதல் ஏற்படுத்தும் அலைகளைப் பற்றி பார்ப்போம்.

நான் கல்லூரியில் படிக்கையில் வகுப்புக்குள் பரஸ்பரம் காதலிக்கக் கூடாது எனும் மறைமுகமான விதி நிலவியது. இன்றும் பல கல்லூரிகளில் அது தொடர்கிறது. காதல் ஜோடிகள் தம் நண்பர்களை தனிமைப்படுத்துகிறார்கள். அதற்கு முன்போ பின்போ சற்றும் சளைக்காமல் காதல் ஜோடிகளை அவர்களின் நண்பர்கள் தனிமைப்படுத்துகிறார்கள். இன்றைய வகுப்புகளில் லெஸ்பியன் ஜோடிகளைக் காண்கிறேன். அவர்களிடமும் பிற பெண்கள் நெருங்கி அதிக நேரம் உரையாடுவதில்லை. இது ஏன்?
வெளிப்படையான காரணம் இது: இருவர் காதலிக்கும் போது அவர்களால் தம் நண்பர்களுக்கு, தோழியருக்கு இடமளிக்க முடிவதில்லை. அவர்களின் நேரம் முழுக்க தனியுடைமை ஆகிறது. சற்று முன்பு வரை நான் இது தான் காரணம் என நினைத்து வந்தேன். இப்போது அது ஒரு எளிய, அதிக முக்கியமற்ற காரணம் எனப்படுகிறது.
காதலில் ஈடுபடுகிறவர்களின் தம் தோழமைகளுடன் நேரம் செலவழித்தாலும் கூட அவர்களால் முன்பைப் போல இருக்க முடிவதில்லை. அப்படி முடிந்தால், அவர்கள் தீவிரமான உக்கிரமான காதலில் இல்லை எனப் பொருள்.
காதல் ஜோடிகளை கவனிக்கையில் அவர்கள் தோள்கள் தாழ்ந்து, கண்கள் கவிழ்ந்து கொஞ்சம் இறகுகளை குவித்து அடை இருக்கும் தாய்ப்பறவை போல அவர்களின் உடல்மொழி ஆகி விடுவதைக் காண்கிறேன். நமது மனம் என்ன நினைக்கிறதோ அதை சித்தரிப்பதே நமது உடலின் மொழி. (அது திரும்பியும் நடப்பதுண்டு.) காதல் ஜோடிகளின் மனம் என்பது தனக்குள் கவிந்ததாய், குவிந்ததாய் இருக்கிறது. அவர்களுக்கு அந்த உலகம் மட்டுமே போதும் - உலகின் அத்தனை அகத்திளைப்புகளும் அர்த்தங்களும் வர்ணங்களும் உணர்ச்சி அலைகளும் அங்கிருந்தே வந்து அங்கேயே முடிவதாய் அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது கேள்விகளும் கோபங்களும் கவலைகளும் அந்த உலகின் முன்வாசலில் துவங்கி பின்வாசலில் முடிந்து போகின்றன. சுருக்கமாய், காதல் ஒரு தீவு. தனித் தீவி. காதல் வயப்படுகிறவர்கள் அங்கு தனியாக மாட்டிக் கொள்கிறார்கள்.

நான் அலுவலக காதல் ஜோடிகளை அதிகம் கண்டதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தாம் ஒரு தீவுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அக்கறை கொள்வார்கள். மிக மிக கவனமாய் சகபணியாளர்கள் மத்தியில் உரையாடுவதை, பழகுவதை தவிர்ப்பார்கள்.
தன் மாணவியைக் காதலித்து மணம் புரிந்த பேராசிரியரை எனக்குத் தெரியும். அவர் நான் மாணவனாய் இருக்கையில் எனக்கு பாடம் எடுத்தார். ஐம்பது வருடங்கள் நீடித்த மண உறவு அவர்களுடையது. பின்னர் நான் கல்லூரி ஆசிரியன் ஆன போது ஒரு நண்பர் அமைந்தார். அவரும் பேராசிரியர், அவர் மீது ஒருநாள் மாணவியர் சிலர் புகார் தெரிவித்தார்கள். அவர் இப்பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் நிறைய அரட்டை அடித்திருக்கிறார். வெட்டி அரட்டை தான். இப்பெண்களின் பிரதான புகார் இவர் ஒரு பெண்ணை தனியாக கூடுதலாய் நிஜமாய் காதலிக்கிறார் என்பது. நிர்வாகம் அவரது சீட்டைக் கிழித்தது. அவர் கவலைப்படவில்லை. அப்பெண்ணுடன் வீடெடுத்து வாழத் தொடங்கி விட்டார். இருவருக்கும் இடையே சுமார் பத்து வயது வித்தியாசம் என்பதால் தாம்பத்தியத்தில் அவருக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் உலகம் முழுக்க இருக்கிற ஒரு அடிப்படை ஒழுக்கவிதியை அவர் மீறியிருக்கிறார் - தன் மாணவியை காதலிப்பது. இதில் ஒரு பிரதான பிரச்சனை பிற மாணவ மாணவியர் இவ்விருவரால் புறக்கணிப்படுவதாய் உணர்வது; எந்தளவுக்கு என்றால் தாம் அவமதிக்கப்படுகிறோம், தமது இருப்பு நிராகரிக்கப்படுகிறது என எண்ணி கோபம் கொள்வது வரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.