Skip to main content

பிக்பாஸில் காதலை வேடிக்கை பார்ப்பவவர்களின் எதிர்வினை (1)


பிக்பாஸ் வீட்டுக்குள் காதலை அதில் சம்மந்தப்படாதவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே நாம் விவாதிக்கப்போகும் விசயம். அதற்கு முன் வேலையிடத்திலும் நட்பு வட்டங்களிலும் பொதுவான காதல் ஏற்படுத்தும் அலைகளைப் பற்றி பார்ப்போம்.

நான் கல்லூரியில் படிக்கையில் வகுப்புக்குள் பரஸ்பரம் காதலிக்கக் கூடாது எனும் மறைமுகமான விதி நிலவியது. இன்றும் பல கல்லூரிகளில் அது தொடர்கிறது. காதல் ஜோடிகள் தம் நண்பர்களை தனிமைப்படுத்துகிறார்கள். அதற்கு முன்போ பின்போ சற்றும் சளைக்காமல் காதல் ஜோடிகளை அவர்களின் நண்பர்கள் தனிமைப்படுத்துகிறார்கள். இன்றைய வகுப்புகளில் லெஸ்பியன் ஜோடிகளைக் காண்கிறேன். அவர்களிடமும் பிற பெண்கள் நெருங்கி அதிக நேரம் உரையாடுவதில்லை. இது ஏன்?
வெளிப்படையான காரணம் இது: இருவர் காதலிக்கும் போது அவர்களால் தம் நண்பர்களுக்கு, தோழியருக்கு இடமளிக்க முடிவதில்லை. அவர்களின் நேரம் முழுக்க தனியுடைமை ஆகிறது. சற்று முன்பு வரை நான் இது தான் காரணம் என நினைத்து வந்தேன். இப்போது அது ஒரு எளிய, அதிக முக்கியமற்ற காரணம் எனப்படுகிறது.
காதலில் ஈடுபடுகிறவர்களின் தம் தோழமைகளுடன் நேரம் செலவழித்தாலும் கூட அவர்களால் முன்பைப் போல இருக்க முடிவதில்லை. அப்படி முடிந்தால், அவர்கள் தீவிரமான உக்கிரமான காதலில் இல்லை எனப் பொருள்.
காதல் ஜோடிகளை கவனிக்கையில் அவர்கள் தோள்கள் தாழ்ந்து, கண்கள் கவிழ்ந்து கொஞ்சம் இறகுகளை குவித்து அடை இருக்கும் தாய்ப்பறவை போல அவர்களின் உடல்மொழி ஆகி விடுவதைக் காண்கிறேன். நமது மனம் என்ன நினைக்கிறதோ அதை சித்தரிப்பதே நமது உடலின் மொழி. (அது திரும்பியும் நடப்பதுண்டு.) காதல் ஜோடிகளின் மனம் என்பது தனக்குள் கவிந்ததாய், குவிந்ததாய் இருக்கிறது. அவர்களுக்கு அந்த உலகம் மட்டுமே போதும் - உலகின் அத்தனை அகத்திளைப்புகளும் அர்த்தங்களும் வர்ணங்களும் உணர்ச்சி அலைகளும் அங்கிருந்தே வந்து அங்கேயே முடிவதாய் அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது கேள்விகளும் கோபங்களும் கவலைகளும் அந்த உலகின் முன்வாசலில் துவங்கி பின்வாசலில் முடிந்து போகின்றன. சுருக்கமாய், காதல் ஒரு தீவு. தனித் தீவி. காதல் வயப்படுகிறவர்கள் அங்கு தனியாக மாட்டிக் கொள்கிறார்கள்.

நான் அலுவலக காதல் ஜோடிகளை அதிகம் கண்டதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தாம் ஒரு தீவுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அக்கறை கொள்வார்கள். மிக மிக கவனமாய் சகபணியாளர்கள் மத்தியில் உரையாடுவதை, பழகுவதை தவிர்ப்பார்கள்.
தன் மாணவியைக் காதலித்து மணம் புரிந்த பேராசிரியரை எனக்குத் தெரியும். அவர் நான் மாணவனாய் இருக்கையில் எனக்கு பாடம் எடுத்தார். ஐம்பது வருடங்கள் நீடித்த மண உறவு அவர்களுடையது. பின்னர் நான் கல்லூரி ஆசிரியன் ஆன போது ஒரு நண்பர் அமைந்தார். அவரும் பேராசிரியர், அவர் மீது ஒருநாள் மாணவியர் சிலர் புகார் தெரிவித்தார்கள். அவர் இப்பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் நிறைய அரட்டை அடித்திருக்கிறார். வெட்டி அரட்டை தான். இப்பெண்களின் பிரதான புகார் இவர் ஒரு பெண்ணை தனியாக கூடுதலாய் நிஜமாய் காதலிக்கிறார் என்பது. நிர்வாகம் அவரது சீட்டைக் கிழித்தது. அவர் கவலைப்படவில்லை. அப்பெண்ணுடன் வீடெடுத்து வாழத் தொடங்கி விட்டார். இருவருக்கும் இடையே சுமார் பத்து வயது வித்தியாசம் என்பதால் தாம்பத்தியத்தில் அவருக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் உலகம் முழுக்க இருக்கிற ஒரு அடிப்படை ஒழுக்கவிதியை அவர் மீறியிருக்கிறார் - தன் மாணவியை காதலிப்பது. இதில் ஒரு பிரதான பிரச்சனை பிற மாணவ மாணவியர் இவ்விருவரால் புறக்கணிப்படுவதாய் உணர்வது; எந்தளவுக்கு என்றால் தாம் அவமதிக்கப்படுகிறோம், தமது இருப்பு நிராகரிக்கப்படுகிறது என எண்ணி கோபம் கொள்வது வரை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...