முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் காதலை வேடிக்கை பார்ப்பவவர்களின் எதிர்வினை (1)


பிக்பாஸ் வீட்டுக்குள் காதலை அதில் சம்மந்தப்படாதவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே நாம் விவாதிக்கப்போகும் விசயம். அதற்கு முன் வேலையிடத்திலும் நட்பு வட்டங்களிலும் பொதுவான காதல் ஏற்படுத்தும் அலைகளைப் பற்றி பார்ப்போம்.

நான் கல்லூரியில் படிக்கையில் வகுப்புக்குள் பரஸ்பரம் காதலிக்கக் கூடாது எனும் மறைமுகமான விதி நிலவியது. இன்றும் பல கல்லூரிகளில் அது தொடர்கிறது. காதல் ஜோடிகள் தம் நண்பர்களை தனிமைப்படுத்துகிறார்கள். அதற்கு முன்போ பின்போ சற்றும் சளைக்காமல் காதல் ஜோடிகளை அவர்களின் நண்பர்கள் தனிமைப்படுத்துகிறார்கள். இன்றைய வகுப்புகளில் லெஸ்பியன் ஜோடிகளைக் காண்கிறேன். அவர்களிடமும் பிற பெண்கள் நெருங்கி அதிக நேரம் உரையாடுவதில்லை. இது ஏன்?
வெளிப்படையான காரணம் இது: இருவர் காதலிக்கும் போது அவர்களால் தம் நண்பர்களுக்கு, தோழியருக்கு இடமளிக்க முடிவதில்லை. அவர்களின் நேரம் முழுக்க தனியுடைமை ஆகிறது. சற்று முன்பு வரை நான் இது தான் காரணம் என நினைத்து வந்தேன். இப்போது அது ஒரு எளிய, அதிக முக்கியமற்ற காரணம் எனப்படுகிறது.
காதலில் ஈடுபடுகிறவர்களின் தம் தோழமைகளுடன் நேரம் செலவழித்தாலும் கூட அவர்களால் முன்பைப் போல இருக்க முடிவதில்லை. அப்படி முடிந்தால், அவர்கள் தீவிரமான உக்கிரமான காதலில் இல்லை எனப் பொருள்.
காதல் ஜோடிகளை கவனிக்கையில் அவர்கள் தோள்கள் தாழ்ந்து, கண்கள் கவிழ்ந்து கொஞ்சம் இறகுகளை குவித்து அடை இருக்கும் தாய்ப்பறவை போல அவர்களின் உடல்மொழி ஆகி விடுவதைக் காண்கிறேன். நமது மனம் என்ன நினைக்கிறதோ அதை சித்தரிப்பதே நமது உடலின் மொழி. (அது திரும்பியும் நடப்பதுண்டு.) காதல் ஜோடிகளின் மனம் என்பது தனக்குள் கவிந்ததாய், குவிந்ததாய் இருக்கிறது. அவர்களுக்கு அந்த உலகம் மட்டுமே போதும் - உலகின் அத்தனை அகத்திளைப்புகளும் அர்த்தங்களும் வர்ணங்களும் உணர்ச்சி அலைகளும் அங்கிருந்தே வந்து அங்கேயே முடிவதாய் அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது கேள்விகளும் கோபங்களும் கவலைகளும் அந்த உலகின் முன்வாசலில் துவங்கி பின்வாசலில் முடிந்து போகின்றன. சுருக்கமாய், காதல் ஒரு தீவு. தனித் தீவி. காதல் வயப்படுகிறவர்கள் அங்கு தனியாக மாட்டிக் கொள்கிறார்கள்.

நான் அலுவலக காதல் ஜோடிகளை அதிகம் கண்டதில்லை. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தாம் ஒரு தீவுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் அக்கறை கொள்வார்கள். மிக மிக கவனமாய் சகபணியாளர்கள் மத்தியில் உரையாடுவதை, பழகுவதை தவிர்ப்பார்கள்.
தன் மாணவியைக் காதலித்து மணம் புரிந்த பேராசிரியரை எனக்குத் தெரியும். அவர் நான் மாணவனாய் இருக்கையில் எனக்கு பாடம் எடுத்தார். ஐம்பது வருடங்கள் நீடித்த மண உறவு அவர்களுடையது. பின்னர் நான் கல்லூரி ஆசிரியன் ஆன போது ஒரு நண்பர் அமைந்தார். அவரும் பேராசிரியர், அவர் மீது ஒருநாள் மாணவியர் சிலர் புகார் தெரிவித்தார்கள். அவர் இப்பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் நிறைய அரட்டை அடித்திருக்கிறார். வெட்டி அரட்டை தான். இப்பெண்களின் பிரதான புகார் இவர் ஒரு பெண்ணை தனியாக கூடுதலாய் நிஜமாய் காதலிக்கிறார் என்பது. நிர்வாகம் அவரது சீட்டைக் கிழித்தது. அவர் கவலைப்படவில்லை. அப்பெண்ணுடன் வீடெடுத்து வாழத் தொடங்கி விட்டார். இருவருக்கும் இடையே சுமார் பத்து வயது வித்தியாசம் என்பதால் தாம்பத்தியத்தில் அவருக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்படவில்லை. ஆனால் உலகம் முழுக்க இருக்கிற ஒரு அடிப்படை ஒழுக்கவிதியை அவர் மீறியிருக்கிறார் - தன் மாணவியை காதலிப்பது. இதில் ஒரு பிரதான பிரச்சனை பிற மாணவ மாணவியர் இவ்விருவரால் புறக்கணிப்படுவதாய் உணர்வது; எந்தளவுக்கு என்றால் தாம் அவமதிக்கப்படுகிறோம், தமது இருப்பு நிராகரிக்கப்படுகிறது என எண்ணி கோபம் கொள்வது வரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...