Skip to main content

பிக்பாஸ்: காதல் வரும் வேகம்! (1)



தமிழ்பிக்பாஸ்முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது தோன்றிய காதலுக்கு அதற்கான ஒரு தயாரிப்பு காலம் இருந்தது. நட்பாகி, பழகி புரிந்து இணக்கமாகி ஏதோ ஒரு தருணத்தில் காதல் வயப்படுகிறார்கள். ஏற்கனவே செம க்யூட்டாக நடந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்றிருந்த ஓவியா இந்த காதல் அத்தியாயத்துடன் தன் புகழின் உச்சிக்கே சென்றார். இந்த பருவத்தில் இந்த அத்தியாயம் ஒரு முழுநீள காதல் படத்தை பார்ப்பது போன்றே அமைந்தது - அதுவும் எண்பதுகளில் “பதினாறு வயதினிலே” போன்ற மிக பிரபலமான படங்களில் வரை அதிகமாய் பேசப்பட்ட தொன்மமான அழகிய காதலனால் கைவிடப்பட்ட கபடமற்ற கன்னிப்பெண் என்பது ஓவியா-ஆரவ் விசயத்தில் மீண்டும் புனையப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆரவின் காதலின் நிலையாமை, அவர் ஓவியாவுக்கு செய்ததுரோகத்தைபிக்பாஸ் காணொளி போட்டுக் காட்டி அம்பலப்படுத்தினாலும், பார்வையாளர்கள் தரப்பு வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினாலும் ஓவியா தன் காதலை கைவிட வில்லை; அவர் தொடர்ந்து ஆரவையே தான் காதலிப்பதாய் சொன்னார். இந்தகோவலனைமன்னித்து ஏற்கும் நல்லியல்பு மீண்டும் ஓவியாவுக்கான நற்பெயரை பலமடங்கு வலுப்படுத்தியது. இதை மேலும் நிறுவும் பட்சத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் போன கதை ஊடகங்களில் லீக் ஆனது. இன்னொரு சுவாரஸ்யம் ஆரவ்வின் பெயர் ஆரம்பத்தில் சற்றே களங்கப்பட்டாலும் பின்னர் அது அவருக்கே அனுகூலமான அம்சம் ஆனது. ஆரவ் போட்டியின் இறுதி நிலை வரை சென்று வெற்றிபெற இது பெரிதும் உதவியது.

இந்த காதல் தோன்றி வளர்ந்து சிதைத்து சர்ச்சையாகி பின்னர் மீண்டும் உயிர்பெற்ற போக்கைக் காண்கையில் இது புனைவல்ல, ஓரளவுக்கு நிஜமே என ஊர்ஜிதம் பண்ண முடிகிறது. ஆனால் அடுத்தடுத்த தமிழ் மற்றும் மலையாள பிக்பாஸ் பருவங்களில் ஓவியாவின் காதல் அத்தியாயம் பிரதியெடுக்கப்பட்டது; அவ்வாறு பிரதியெடுப்பது போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு வியூகம் என கருதப்பட்டது. உதாரணமாய், மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தில் பெர்ளி-ஶ்ரீனிஷ் இருவரின் காதல். பெர்ளி முதலில் பிக்பாஸ் வீட்டில் நெருங்கியது நாட்டுப்புற பாடகர் சுரேஷை. ஏனென்றால் சுரேஷ் மோகன்லாலுக்கு நெருக்கமானவராக ஆரம்பத்தில் இருந்தே ஒரு சித்திரம் இருந்தது; அவர் அங்கு வாழும் போட்டியாளர்களுக்கும் பிரியமானவராக இருந்தார். ஆக, ஷாபுவுக்கு இணையான ஒரு போட்டியாளர் அவர் என நினைத்து பெர்ளி அவரிடம் நெருங்கி அவரை (தன் அந்தஸ்துக்காக) பயன்படுத்தி கொண்டதாய் ஒருமுறை பிற போட்டியாளர்கள் குற்றம் சாட்டி பெர்ளியை கடுமையாய் விமர்சித்தனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் பெர்ளி இந்நேரம் சுரேஷிடம் இருந்து விலகி ஶ்ரீனிஷ் எனும் இளம்நடிகரிடம் நெருங்கத் தொடங்கி இருந்தார் என்பதும், இதனால் ஏற்கனவே பெர்ளியிடம் காதல் வயப்பட்டிருந்த சுரேஷ் மனம் உடைந்து நிலைமயங்கி நடந்து கொள்ள தொடங்கினார் என்பதும்
மொத்த வீடும் இப்போது சுரேஷுக்கு ஆதரவாகவும் பெர்ளிக்கு எதிராகவும் திரண்டது; இது தமிழ் பிக்பாஸ் முதல் பருவத்தில் ஓவியாவுக்கும் ஆரவுக்கும் இடையில் நிகழ்ந்த ஊடலை பிற போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதத்திற்கு நேர் எதிரானது (தமிழில் ஆண் வில்லனாகிறன், மலையாளத்தில் பெண் வில்லியாகிறாள்.) ஆனால் இது எப்படியாகினும் சம்மந்தப்பட்டவர்கள் பலன் பெற்றார்கள். சுரேஷ் இறுதி கட்டம் வரையிலும் ஸ்ரீனிஷ் அதற்கு சற்றும் முன்பு வரையிலும் போட்டியில் தக்க வைப்பட்டார்கள். காதலின் பொறிகள் பறக்காதிருந்தால் இவ்வளவு டிராமாவும் இருந்திருக்காது; ஶ்ரீனிஷ் மற்றும் பெர்ளி நிச்சயமாய் இறுதி வரை தொடர்ந்திருக்க மாட்டார்கள். ஓவியா-ஆரவைப் போன்றே பெர்ளி-ஶ்ரீனிஷ் ஜோடியும் போட்டிக்குப் பின்னரும் உறவைத் தொடர்ந்தனர்; அடுத்த கட்டத்துக்கே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தான் ஹிமா-சாபு காதல் நாடகம் அரங்கேறியது.

வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட ஹிமா நடுவில் திரும்ப வருகிறார். அப்போது அவர் பயன்படுத்திய முக்கிய வியூகம் காதல். அவர் தனக்கு சாபு மீது ஈர்ப்பு உண்டென தன் தோழி அர்ச்சனாவிடம் சொல்கிறார். அடுத்து சாபுவிடம் இணக்கமாய் ஒட்டி உறவாட முயல்கிறார். இது செயற்கையாக பட, சாபு விலகி செல்கிறார். கூடவே, இது ஒரு வியூகம் என சாபுவிடம் அர்ச்சனா போட்டு கொடுக்கிறார். இது பெரிய பிரச்சனையாகிறது - தான் உண்மையானவள், நாணயமானவள் என ஹிமா மீண்டும் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார். அவர் மீது எழுந்த பிரதான கேள்வி ஏன் ஆரம்ப வாரங்களில் காதல் தோன்றாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேறி திரும்ப வந்த பின் உடனே காதல் வருகிறது என்பது. இதைப் பற்றி தன் தோழியிடம் பேசும் ஹிமா தனது சகோதரன் மற்றும் ஆண் நண்பர்களிடம் தான் தனக்கு சாபு மீது காதல் உள்ளதை விவாதித்ததாகவும் அவர்களது அனுமதியுடனே தான் இப்போது காதலை வீட்டுக்குள் வைத்து வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் இப்படி குடும்பத்துடன் யாருடன் காதலை விவாதிக்க மாட்டார்கள், இது ஒரு சதியாலோசனை, அதுவும் தமிழில் ஓவியா பண்ணியதை போல செய்து ஹீமா இப்படி காய் நகர்த்துகிறார் என சாபு கூறிட, ஹிமா கண்ணீர் உகுத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார். இப்படி, ஹிமாவின் காதல் வியூகம் தோல்வி உற்றது




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...