முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: காதல் வரும் வேகம்! (1)



தமிழ்பிக்பாஸ்முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது தோன்றிய காதலுக்கு அதற்கான ஒரு தயாரிப்பு காலம் இருந்தது. நட்பாகி, பழகி புரிந்து இணக்கமாகி ஏதோ ஒரு தருணத்தில் காதல் வயப்படுகிறார்கள். ஏற்கனவே செம க்யூட்டாக நடந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்றிருந்த ஓவியா இந்த காதல் அத்தியாயத்துடன் தன் புகழின் உச்சிக்கே சென்றார். இந்த பருவத்தில் இந்த அத்தியாயம் ஒரு முழுநீள காதல் படத்தை பார்ப்பது போன்றே அமைந்தது - அதுவும் எண்பதுகளில் “பதினாறு வயதினிலே” போன்ற மிக பிரபலமான படங்களில் வரை அதிகமாய் பேசப்பட்ட தொன்மமான அழகிய காதலனால் கைவிடப்பட்ட கபடமற்ற கன்னிப்பெண் என்பது ஓவியா-ஆரவ் விசயத்தில் மீண்டும் புனையப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆரவின் காதலின் நிலையாமை, அவர் ஓவியாவுக்கு செய்ததுரோகத்தைபிக்பாஸ் காணொளி போட்டுக் காட்டி அம்பலப்படுத்தினாலும், பார்வையாளர்கள் தரப்பு வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினாலும் ஓவியா தன் காதலை கைவிட வில்லை; அவர் தொடர்ந்து ஆரவையே தான் காதலிப்பதாய் சொன்னார். இந்தகோவலனைமன்னித்து ஏற்கும் நல்லியல்பு மீண்டும் ஓவியாவுக்கான நற்பெயரை பலமடங்கு வலுப்படுத்தியது. இதை மேலும் நிறுவும் பட்சத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் போன கதை ஊடகங்களில் லீக் ஆனது. இன்னொரு சுவாரஸ்யம் ஆரவ்வின் பெயர் ஆரம்பத்தில் சற்றே களங்கப்பட்டாலும் பின்னர் அது அவருக்கே அனுகூலமான அம்சம் ஆனது. ஆரவ் போட்டியின் இறுதி நிலை வரை சென்று வெற்றிபெற இது பெரிதும் உதவியது.

இந்த காதல் தோன்றி வளர்ந்து சிதைத்து சர்ச்சையாகி பின்னர் மீண்டும் உயிர்பெற்ற போக்கைக் காண்கையில் இது புனைவல்ல, ஓரளவுக்கு நிஜமே என ஊர்ஜிதம் பண்ண முடிகிறது. ஆனால் அடுத்தடுத்த தமிழ் மற்றும் மலையாள பிக்பாஸ் பருவங்களில் ஓவியாவின் காதல் அத்தியாயம் பிரதியெடுக்கப்பட்டது; அவ்வாறு பிரதியெடுப்பது போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு வியூகம் என கருதப்பட்டது. உதாரணமாய், மலையாள பிக்பாஸின் முதல் பருவத்தில் பெர்ளி-ஶ்ரீனிஷ் இருவரின் காதல். பெர்ளி முதலில் பிக்பாஸ் வீட்டில் நெருங்கியது நாட்டுப்புற பாடகர் சுரேஷை. ஏனென்றால் சுரேஷ் மோகன்லாலுக்கு நெருக்கமானவராக ஆரம்பத்தில் இருந்தே ஒரு சித்திரம் இருந்தது; அவர் அங்கு வாழும் போட்டியாளர்களுக்கும் பிரியமானவராக இருந்தார். ஆக, ஷாபுவுக்கு இணையான ஒரு போட்டியாளர் அவர் என நினைத்து பெர்ளி அவரிடம் நெருங்கி அவரை (தன் அந்தஸ்துக்காக) பயன்படுத்தி கொண்டதாய் ஒருமுறை பிற போட்டியாளர்கள் குற்றம் சாட்டி பெர்ளியை கடுமையாய் விமர்சித்தனர். அதற்கு ஒரு முக்கிய காரணம் பெர்ளி இந்நேரம் சுரேஷிடம் இருந்து விலகி ஶ்ரீனிஷ் எனும் இளம்நடிகரிடம் நெருங்கத் தொடங்கி இருந்தார் என்பதும், இதனால் ஏற்கனவே பெர்ளியிடம் காதல் வயப்பட்டிருந்த சுரேஷ் மனம் உடைந்து நிலைமயங்கி நடந்து கொள்ள தொடங்கினார் என்பதும்
மொத்த வீடும் இப்போது சுரேஷுக்கு ஆதரவாகவும் பெர்ளிக்கு எதிராகவும் திரண்டது; இது தமிழ் பிக்பாஸ் முதல் பருவத்தில் ஓவியாவுக்கும் ஆரவுக்கும் இடையில் நிகழ்ந்த ஊடலை பிற போட்டியாளர்கள் எதிர்கொண்ட விதத்திற்கு நேர் எதிரானது (தமிழில் ஆண் வில்லனாகிறன், மலையாளத்தில் பெண் வில்லியாகிறாள்.) ஆனால் இது எப்படியாகினும் சம்மந்தப்பட்டவர்கள் பலன் பெற்றார்கள். சுரேஷ் இறுதி கட்டம் வரையிலும் ஸ்ரீனிஷ் அதற்கு சற்றும் முன்பு வரையிலும் போட்டியில் தக்க வைப்பட்டார்கள். காதலின் பொறிகள் பறக்காதிருந்தால் இவ்வளவு டிராமாவும் இருந்திருக்காது; ஶ்ரீனிஷ் மற்றும் பெர்ளி நிச்சயமாய் இறுதி வரை தொடர்ந்திருக்க மாட்டார்கள். ஓவியா-ஆரவைப் போன்றே பெர்ளி-ஶ்ரீனிஷ் ஜோடியும் போட்டிக்குப் பின்னரும் உறவைத் தொடர்ந்தனர்; அடுத்த கட்டத்துக்கே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தான் ஹிமா-சாபு காதல் நாடகம் அரங்கேறியது.

வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட ஹிமா நடுவில் திரும்ப வருகிறார். அப்போது அவர் பயன்படுத்திய முக்கிய வியூகம் காதல். அவர் தனக்கு சாபு மீது ஈர்ப்பு உண்டென தன் தோழி அர்ச்சனாவிடம் சொல்கிறார். அடுத்து சாபுவிடம் இணக்கமாய் ஒட்டி உறவாட முயல்கிறார். இது செயற்கையாக பட, சாபு விலகி செல்கிறார். கூடவே, இது ஒரு வியூகம் என சாபுவிடம் அர்ச்சனா போட்டு கொடுக்கிறார். இது பெரிய பிரச்சனையாகிறது - தான் உண்மையானவள், நாணயமானவள் என ஹிமா மீண்டும் மீண்டும் நிரூபிக்க முயல்கிறார். அவர் மீது எழுந்த பிரதான கேள்வி ஏன் ஆரம்ப வாரங்களில் காதல் தோன்றாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேறி திரும்ப வந்த பின் உடனே காதல் வருகிறது என்பது. இதைப் பற்றி தன் தோழியிடம் பேசும் ஹிமா தனது சகோதரன் மற்றும் ஆண் நண்பர்களிடம் தான் தனக்கு சாபு மீது காதல் உள்ளதை விவாதித்ததாகவும் அவர்களது அனுமதியுடனே தான் இப்போது காதலை வீட்டுக்குள் வைத்து வெளிப்படுத்துவதாகவும் சொன்னார். ஆனால் இப்படி குடும்பத்துடன் யாருடன் காதலை விவாதிக்க மாட்டார்கள், இது ஒரு சதியாலோசனை, அதுவும் தமிழில் ஓவியா பண்ணியதை போல செய்து ஹீமா இப்படி காய் நகர்த்துகிறார் என சாபு கூறிட, ஹிமா கண்ணீர் உகுத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார். இப்படி, ஹிமாவின் காதல் வியூகம் தோல்வி உற்றது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...