முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ்: சேரனுக்கு எதிரான மீராவின் பாலியல் குற்றச்சாட்டு (2)

அந்த வீட்டில் சேரன் தன்னை பொருட்படுத்தியதோ கவனித்ததோ இல்லை என இந்த குற்றச்சாட்டின் இடையே ஓரிடத்தில் சொல்கிறார். இது ஒரு முரணான கூற்று. அதாவது சேரனுக்கு மீராவிடம் பாலியல் ஈடுபாடு இருந்திருந்தால் அவர் அவரை தவறாக தொட்டிருக்க வாய்ப்புண்டு. தன்னை எந்தவிதத்திலும் பிடிக்காத, வெறுக்கிர ஒருவர் என அவர் சேரனை சித்தரிக்கும் பட்சத்தில் சேரன்அப்படிஏன் செய்ய வேண்டும்? சரி இது எப்படியோ போகட்டும். தன்னை ஒருவர் வெறுப்பதாய் ஒரு பெண் உணரும் பட்சத்தில் இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பாரா? சில பெண்கள் செய்வார்கள் என்பதற்கு மீராவே உதாரணம்.
ஏனென்றால் இதற்கு ஒரு வரலாறு உள்ளது - தன்னுடன் ஒரு நடனப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சயிப் என்பவருக்கு எதிராக மீரா இத்தகைய குற்றச்சாட்டை முன்பு வைத்திருக்கிறார். அப்போது நிகழ்ச்சி நடுவரான சங்கீதா சயிப்பை தன்னுடன் நடனமாடக் கேட்டு ஆடுகிறார். சயிப்பின்தொடுகையில்எந்த தவறுமில்லை என்கிறார். மீரா தன் குற்றச்சாட்டை அப்போதும் திரும்ப வாங்கி மறுக்கிறார். சங்கீதா மீராவை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுகிறார். இதற்கான காரணமும் சயிப் தன்னை மதிக்கவில்லை எனும் அவரதுநினைப்பாகஇருக்கலாம். சயிப் யுடியூப் பேட்டி ஒன்றில், இதற்கு அடுத்து ஒருமுறை மற்றொரு நிகழ்ச்சியில் மீராவை தான் சந்திக்க நேர்ந்த போது மீரா மிக உற்சாகமாக ஹலோ சொல்லி தன்னிடம் கைகுலுக்கிக் கொண்டதாக, நடந்த சம்பவத்தை முழுக்க மறந்து விட்ட பாவனையில் நடந்து கொண்டதாக சொல்கிறார்.  

இப்படி மீராவின் இந்த குழந்தைத்தனமும்மனக்குழப்பங்களும்உலகின் மீதான அவரது முதிரா கோபங்களில் இருந்து, ஏற்றுக் கொள்ளப்படாத ஏக்கங்களில் இருந்து தோன்றுவதாக இருக்கலாம். மீரா அடிப்படையில் போதுமான தந்தை அன்பைப் பெறாத குழந்தை / எவ்வளவு அன்பு கிடைத்தாலும் அதை போதாமையாக உணரும் ஒரு குழந்தை. ஆகையால் தான் அவர் தொடர்ந்து போதாமையின் கோபத்தில் நொதித்துக் கொண்டே இருக்கிறார். உதாரணமாக, சேரன் ஆரம்பத்தில் இருந்தே லாஸ்லியா மீது ஆதித அன்பை பொழிகிறார். அவர் அவரை தனது பெண் என்று கருதி பாசத்தைப் பொழிகிறார். கொஞ்சம் கூடுதலாகவே செய்கிறார் - கன்னத்தை கிள்ளுகிறார், அணைக்கிறேன் என்ற பெயரில் பிதுக்குகிறார் என வீட்டில் இருந்து வெளிவந்த பின் ஒரு பேட்டியில் பாத்திமா பாபு குற்றம் சாட்டுகிறார்

ஆனால் நேற்றையகுற்றவிசாரணையின்போது லாஸ்லியா தன்னை சேரன்ஹக்பண்ணாமல் ஒருநாள் கூட தூங்க சென்றதில்லை என சேரனுக்கு ஆதரவாக பேசுகிறார். இந்த தொடுகை பாத்திமா பாபுவுக்கு தப்பாக பட லாஸ்லியாவுக்கு அப்படித் தோன்றவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த முரணான பார்வைக்கு காரணம் லாஸ்லியாவின் உடல் பிம்பம் என்பது லாஸ்லியாவுக்கு ஒன்று பாத்திபா பாபுவுக்கு மற்றொன்று என்பது. லாஸ்லியா ஸ்பரிசத்தை தனக்குள் பார்க்கிறார், பாத்திமா பாபு வெளியே வைத்து பார்க்கிறார். ஆனால் இதைப் பார்க்கும் மற்றொருவர் மீரா. அவர் மனதுக்கு இது ஒரு புறக்கணிப்பாக தோன்றியிருக்கலாம் - சேரன் தன்னை புறக்கணிக்கிறார், அதனாலே அவர் தன்னை வெறுக்கிறார் என நம்பத் தலைப்படும் மீரா லாஸ்லியாவை தனக்கு எதிர் பிம்பமாக, போட்டி பிம்பமாக கருதுகிறார். இயல்பாகவே லாஸ்லியா இடத்தில் தன்னை வைத்துக் கொண்டு பாத்திமா பாபுவின் குற்றச்சாட்டை மீள நிகழ்த்துகிறார் - லாஸ்லியா அணைக்கப்பட்டதை த்தான் அணைகக்ப்பட்டதாக அவர் ஏதோ ஒரு கட்டத்தில் நம்பத் தொடங்குகிறார். அவர் அப்படி அணைக்கப்பட்டு மகளாக கொஞ்சப்பட விரும்புகிறார்; அது  நிகழாத பட்சத்தில் தோளில் பட்ட ஸ்பரிசத்தை இடுப்புக்கு நகர்த்தி குற்றச்சாட்டை வைக்கிறார்.

மீராவின் மனதுக்குள் எப்படியோ லாஸ்லியாவின் உடல் பிம்பம் தனதாக உருக்கொண்டிருக்கலாம். அவர் அதை நேரடியாக ஏற்க தயாரில்லை என்பதால் நேர்மறை தொடுகையை எதிர்மறையான தொடுகையாக, மீறலாக, மாற்றி இருக்கலாம்

பலரும் கூறுவது போல மீரா ஒரு பைத்தியம் என நான் நம்பவில்லை. அவர் ஒரு குழந்தை. அதனால் தான்செக்ஷுவல்என சொல்லை தன் சாட்சியத்தில் நேரடியாக பயன்படுத்த அவர் தயங்குகிறார். அவருக்குத் தேவை ஒரு நல்லஹக்”. அவ்வளவு தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...