முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

370 சட்டப்பிரிவு நீக்கம் - என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்?


காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ஒரு நீண்ட வரலாறு கொண்டது. காஷ்மீர் இந்திய அரசமைப்பில் இணைய மறுத்து, தனி நாடாக பிரிந்து போக எண்ணி சுதந்திரம் கோரிய நாற்பதுகளின் முடிவு மற்றும் ஐம்பதுகளின் துவக்கத்தில், .நா இப்பிரச்சனையை ஒரு மனித உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்குமோ என அச்சம் தோன்றிய நிலையில்நமது மைய அரசு ஒரு சமரசமாக இந்த சட்டப்பிரிவை ஏற்றுக் கொண்டது. இதன் படி காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவோ அரசு வேலை பெறவோ முடியாது (பெண்களின் சொத்துரிமை மட்டுமே இந்த சட்டப்பிரிவில் பிற்போக்கானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்). இது பிற மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சிலர் எண்ணினாலும், காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு நாம் அளித்த மதிப்பின் தூல வடிவமாக இது அமைந்தது. மக்களை பிடிவாதமாக ஒரு ஒற்றை தேசியத்தில் இணைக்கக் கூடாது எனும் நல்லதொரு ஜனநாயக விழுமியத்தை இது கொண்டிருந்தது.

 நியாயமாக 370 சட்டப்பிரிவு நல்கும் இத்தகைய சில சிறப்புரிமைகளை பிற மாநிலங்களும் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக இன்று தமிழகத்தில் மைய அரசு வேலைகளில் (ரயில்வே) வேற்று மாநிலத்தவர் சுலபமாக அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதை எதிர்க்கிறோம். தமிழக மருத்துவ கல்வி நிறுவனங்களில் இடம் பெற மைய அரசின் தேர்வு ஒன்றை எழுதி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நம் மாணவர்கள் தள்ளப்பட்டதை எண்ணி கலங்குகிறோம். பிற மாநிலத்தவர் நமது மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் இதன் மூலம் பெறுவது நடந்தால் நியாயமா என கேட்கிறோம். ஆனால் இந்த சிக்கல்கள் ஏதும் வராத வகையில் காஷ்மீர் மக்கள் இந்த சட்டப்பிரிவு பெற்று இன்று வரை பாதுகாத்திருந்தனர். ஆனால் அதை இன்று அவர்கள் இழந்து விட்டனர். இந்த சட்டப்பிரிவு தான் காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகத்துக்கு, அவர்களின் போராட்ட உணர்வுக்கு அடித்தளம். அதை தகர்ப்பதன் மூலம் மைய அரசு மக்களை போராடும் திறனற்ற, மாநில தேசியவாத உணர்வற்றவர்களாக, ஒற்றை இந்திய தேசிய அடையாளத்துக்கு கைப்பாவைகளாக மக்களை மாற்ற உத்தேசிக்கிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கம் என்பது அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மோடியின் அரசு பிற மாநிலங்களின் கட்டுறுதியை எப்படி சிதைக்கப் போகிறது என்பதற்கான ஒரு அபாய சமிக்ஞை இது.

 ஒரு மாநிலத்துக்கு என ஒரு தேசியம் இருக்கலாம் (தமிழ் தேசியத்தைப் போல). அதன் அடிப்படையில் ஒரு மாநிலத்து மக்கள் கூடுதலான சுதந்திரத்தை அமைதியான முறையில் கோரலாம். ஒரு ஜனநாயக அமைப்பு இதை நிச்சயம் அனுமதித்தாக வேண்டும். ஆனால் மத்திய அரசின் இந்த முடிவானது காஷ்மீர் மக்களின் தேசியத்தை வேரோடு அறுத்தெறியும் நோக்கம் கொண்டது. காஷ்மீரின் மக்கள் தொகையில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு வேறு மாநில மக்களை குடியேற்றி குழப்பங்களை உண்டு பண்ணும் விஷமத்தனமே இந்த அரசியல் நகர்வு. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
அடுத்த சில பத்தாண்டுகளில் காஷ்மீர் மக்கள் இனி தம் மாநிலத்துக்குள் வரும் பிற மக்களை கடுமையாக வெறுத்து அவர்களை மற்றமையாக்கி தாக்குவார்கள். இந்திய அரசபயங்கரவாதமேஇதுவரை அம்மக்களுக்கு ஒரு மற்றமை. இனி அது அனைத்து காஷ்மீரிகள் அல்லாதவர்களும் ஆவார்கள். இது அடுத்த கால் நூற்றாண்டில் காஷ்மீர் மக்களின் வெறுப்பரசியலை மத்திய அரசின் மீதிருந்து எளிய வேற்று மொழி மக்கள் மீது திருப்பி விட இது உதவும். மக்கள் குழப்பத்தில் தத்தளிக்க, மோடியை போன்றோர் அந்த குட்டையில் மீன் பிடிப்பார்கள்.

மோடியின் அரசு இனி அனைத்து மாநிலங்களையும் - குறிப்பாய் தென்னகத்தை - ஒரு மையப்புள்ளியில் திரட்ட, மையவாத அரசியலை அனைத்து தளங்களிலும் முன்னெடுக்க இது உதவும். சமீபத்தில், அணைப் பிரச்சனையில் முடிவெடுக்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றும் முடிவை எதிர்த்து எம்.பி ரவிக்குமார் மக்களவையில் கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது நினைவிருக்கலாம். இனிமேல் அயல்மாநிலத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட நீங்கள் மத்திய அரசை நாட வேண்டி வரும். மைய அரசு ஒரு பக்க சார்பாய் நடந்து கொள்ளும் பட்சத்தில் அது தமிழகத்துக்கு தீங்காக முடியலாம் என ரவிக்குமார் கூறி இருக்கிறார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என ஒவ்வொன்றாய் மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசு இப்போது காஷ்மீர் விசயத்தில் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து முதல் ஆணியை அடித்து விட்டது. வரும் ஆண்டுகளில் ஜனநாயகத்தை அது முழுக்க சவ அடக்கம் பண்ணி விடும்.  

இந்த சட்ட நீக்கத்தை அறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவை பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு. அதற்கான அவசியம் தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே அறிந்து ஒரு மாநிலத்தின் மீதுசர்ஜிக்கல் ஸ்டிரைக்தொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் அல்லவா!

மோடி அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.


இந்த தேசத்தில் இப்போது வாழ நாம் எல்லாம் வெட்கப்பட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...