என் சக-விரிவுரையாளர் அருள் கேஸ்பர், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையை சேர்ந்த டி. வெங்கட் ரமணன் ஆகியோருடன் சேர்ந்து 200 தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் ஒரு நூலாக மொழிபெயர்த்து வருகிறேன். அடுத்த வருட இறுதிக்குள் தயாராகி விடும். எந்த வரையறையும் இன்றி எங்கள் ரசனை மற்றும் விருப்பத்தின் படி தான் கவிதைகளின் தேர்வு. இப்போது வரை தேவதேவன், மனுஷ்யபுத்திரன், நகுலன், குட்டி ரேவதி, முகுந்த் நாகராஜன், இசை, விக்கிரமாதித்தன், அழகிய பெரியவன், பசுவய்யா, பாதசாரி ஆகியோரின் கவிதைகள் சேர்ந்திருக்கின்றன. முடிந்தளவுக்கு தமிழின் முக்கிய கவிஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து விட திட்டம். ஆனால் அப்படி முழுமையான ஒரு தொகுப்பாக இது அமையும் என நம்பிக்கையில்லை - தமிழ் நவீன கவிதை அப்படி ஒரு முடிவற்ற கடல்.
நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...
கருத்துகள்
for all the great blog posts.