என் சக-விரிவுரையாளர் அருள் கேஸ்பர், சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையை சேர்ந்த டி. வெங்கட் ரமணன் ஆகியோருடன் சேர்ந்து 200 தமிழ் நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் ஒரு நூலாக மொழிபெயர்த்து வருகிறேன். அடுத்த வருட இறுதிக்குள் தயாராகி விடும். எந்த வரையறையும் இன்றி எங்கள் ரசனை மற்றும் விருப்பத்தின் படி தான் கவிதைகளின் தேர்வு. இப்போது வரை தேவதேவன், மனுஷ்யபுத்திரன், நகுலன், குட்டி ரேவதி, முகுந்த் நாகராஜன், இசை, விக்கிரமாதித்தன், அழகிய பெரியவன், பசுவய்யா, பாதசாரி ஆகியோரின் கவிதைகள் சேர்ந்திருக்கின்றன. முடிந்தளவுக்கு தமிழின் முக்கிய கவிஞர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்து விட திட்டம். ஆனால் அப்படி முழுமையான ஒரு தொகுப்பாக இது அமையும் என நம்பிக்கையில்லை - தமிழ் நவீன கவிதை அப்படி ஒரு முடிவற்ற கடல்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்
for all the great blog posts.