Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாசக சாலை மீதான ஜெயமோகனின் விமர்சனமும் அதன் பிழையும் (2)

இலக்கிய வாசிப்பை நாம் இன்று ஒரு எலைட்டிஸ்டான பொழுதுபோக்காகி விட்டோம். அப்போது அதற்கான எளிய கையேடுகள், சுவாரஸ்யமான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு போதும் முழுமூச்சாய் இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதால் இவர்களுக்குஅறிமுகம்முக்கியமாக இருக்கிறது. ஒரு நல்ல வாசகன் என்றுமே அறிமுகத்துக்காக ஒரு கூட்டத்துக்கு செல்ல மாட்டான். அவன் தொடர்ந்து சவால்களை மட்டுமே நாடுவான். விஷ்ணுபுரம் அமைப்பில் நான் இத்தகைய பெரும் கூட்டத்தையே கடந்த முறை அங்கு சென்றிருந்த போது பார்த்தேன்

ஜெயமோகன் இவர்களுக்காக ஒரு ஆரம்பநிலை பள்ளியை நடத்துகிறார். அவர்களுக்கு Farex, formula milk எல்லாம் தயாரித்து ஊட்டுகிறார். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து காட்டுகிறார். ஒரு கதையை எடுத்துக் கொண்டு அது எந்தளவுக்கு எதார்த்தமாக இருக்கிறது, வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது என இவர்கள் உரையாடுவதைக் கண்ட போது எனக்கு கண்ணில் ரத்தமே வந்து விட்டது. இலக்கிய விமர்சனத்தில் மானுடவாதம் எனும் ஒன்று தோன்றி முடிந்து இருநூறு வருடங்கள் முடிந்து விட்டது; ஆனால் ஜெயமோகன் எவ்வளவோ பயிற்சி அளித்தும் இவர்கள் இலக்கிய வாசிப்பு / விமர்சனத்தை பொறுத்தமட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இருக்கிறார்கள் (இதைப் பற்றி நான் விரிவாக என் பிளாகில் எழுதி இருக்கிறேன்.) இவர்களும் நிச்சயம் இலக்கிய வாசகர்கள் அல்ல. இத்தகைய A for Apple வகுப்புகளை ஜெயமோகன் தமிழகம் முழுக்க நடத்த வேண்டும் என தேவி ஶ்ரீராம் கேட்பது அவர் எவ்வளவு பெரிய அப்பாவி என்பதைக் காட்டுகிறது.

நான் கடந்த பத்தாண்டுகளிலான என் ஆசிரிய அனுபவத்தில் ஆயிரக்கணக்கான இலக்கிய மாணவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் முறையான பாடத்திட்டம் மற்றும் தொடர் இலக்கிய உரைகளின் வழி இலக்கியத்தைமுறையாககற்பவர்கள். விஷ்ணுபுரம் வாசக அமைப்பின் வாசகர்களை விட நூறு மடங்கு அதிக வாசிப்பை கொண்டவர்கள் (ஏனென்றால் அவர்கள் அதையே பிழைப்பாக செய்பவர்கள்.) ஆனால் இவர்களும் அசலான இலக்கிய வாசகர்கள் அல்ல. சொந்தமாக ஆழ்ந்து வாசிக்க, சுயமாக சிந்திக்க, அதை தெளிவாக பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்த தெரிந்தவனே இலக்கிய வாசகன். இலக்கிய வாசகனை நீங்கள் மூன்று மாதங்கள் வகுப்பெடுத்து தயாரிக்க முடியாது. இலக்கிய பேருரைகள் வழியாகவும் அவனை உருவாக்க முடியாது.

(இலக்கிய விவாதங்களையும்இலக்கிய பேருரைகளையும்ஒன்றாக பாவிக்கும் இடத்துக்கு ஜெயமோகன் வந்துள்ளது நினைத்து எனக்கு உண்மையில் ஆயாசமாக உள்ளது. நான் இதை சொல்வதனால் அவர் என் மீது இன்னும் சற்று கோபித்து கூடுதலாக ஆறு மாதங்கள் என்னை நிராகரிப்பார் எனத் தெரியும். ஆனாலும் நான் உண்மையை இங்கு துணிந்து சொல்லியாக வேண்டும்.)  
வாசகர்களுக்கான பலன் / அவர்களின் வளர்ச்சியை பொறுத்தமட்டில் வேலூர் இலக்கிய அமைப்புக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் வாசக சாலைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. வாசகர்களை யாரும் அப்படி வெளியில் இருந்து மேம்படுத்தவோ உருவாக்கவோ நெறிப்படுத்தவோ முடியாது. அப்படி கனவு வேண்டுமானால் சும்மா காணலாம். இந்த இலக்கிய அமைப்புகள், வாசக சாலை உள்ளிட்டு, தமக்கான இலக்குகளுடன், நாட்டங்கள், தேவைகள், எல்லைகளுடன் இயங்குகின்றன. அவற்றால் மக்கள் நிச்சயம் பயனடைகிறார்கள் - அவர்கள் ஒன்றுகூட, விவாதிக்க, உரையாட, நட்பு பாராட்ட, எளிய இலக்கிய அறிமுகங்களை பெற இவை உதவுகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்று மேலானது மற்றொன்று பயனற்றது என்றெல்லாம் இல்லை

விஷ்ணுபுரம் வாசகர் சட்டமும் வாசகசாலையும் என்னைப் பொறுத்தமட்டில் ஒன்று தான். அவற்றின் சமூக பங்களிப்பும் நோக்கும் ஒன்று தான் (செயல்பாட்டு முறை வேறுவேறு என்றாலும்).

பின்குறிப்பு: வாசக சாலை நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஜெயமோகனின் சாபத்தினால் மனம் வாடாதீர்கள். அவர் பாராட்டியவர்கள் எல்லாரும் உருப்பட்டதில்லை; சபித்தவர்கள் கெட்டதும் இல்லை. நான் உருப்படாமல் போய் விடுவேன் என 12 வருடங்களுக்கு முன்பு சொன்னார். விஷால் ராஜா, சுநீல் கிருஷ்ணன் அளவுக்கு மாபெரும் படைப்பாளியாக, மகத்தான சிந்தனையாளனாக வளர்வில்லை என்றாலும், அவர்கள் அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்கங்களையும் நூற்றுக்கணக்கான நூல்களையும் எழுதி, பல லட்சம் வாசகர்களையும், பல தேசிய விருதுகளை நான் வெல்லவில்லை எனினும் ஏதோ ஒரு சின்ன படைப்பாளியாக நிலைத்திருக்கிறேன். என்னைப் போல நீங்களும் இருப்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.

மற்றொன்று: ஜெயமோகனின் கருத்துகள் தம்மளவில் நிலையானவையோ தர்க்க ஒழுங்கானவையோ அல்ல. ஜெயமோகனின் நரைத்த தலையும் கோபமான முகமும் அவரது வெறும் பாவனைகள். அவர் மனதளவில் ஒரு குழந்தை; இன்று வெகுண்டெழுந்து சாபம் விட்டு கொஞ்ச நாளில் அதை மறந்தே விடுவார்.  



Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...