Skip to main content

வாசக சாலை மீதான ஜெயமோகனின் விமர்சனமும் அதன் பிழையும் (2)

இலக்கிய வாசிப்பை நாம் இன்று ஒரு எலைட்டிஸ்டான பொழுதுபோக்காகி விட்டோம். அப்போது அதற்கான எளிய கையேடுகள், சுவாரஸ்யமான வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். இவர்கள் ஒரு போதும் முழுமூச்சாய் இலக்கியத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் நுனிப்புல் மேய்கிறவர்கள் என்பதால் இவர்களுக்குஅறிமுகம்முக்கியமாக இருக்கிறது. ஒரு நல்ல வாசகன் என்றுமே அறிமுகத்துக்காக ஒரு கூட்டத்துக்கு செல்ல மாட்டான். அவன் தொடர்ந்து சவால்களை மட்டுமே நாடுவான். விஷ்ணுபுரம் அமைப்பில் நான் இத்தகைய பெரும் கூட்டத்தையே கடந்த முறை அங்கு சென்றிருந்த போது பார்த்தேன்

ஜெயமோகன் இவர்களுக்காக ஒரு ஆரம்பநிலை பள்ளியை நடத்துகிறார். அவர்களுக்கு Farex, formula milk எல்லாம் தயாரித்து ஊட்டுகிறார். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து காட்டுகிறார். ஒரு கதையை எடுத்துக் கொண்டு அது எந்தளவுக்கு எதார்த்தமாக இருக்கிறது, வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது என இவர்கள் உரையாடுவதைக் கண்ட போது எனக்கு கண்ணில் ரத்தமே வந்து விட்டது. இலக்கிய விமர்சனத்தில் மானுடவாதம் எனும் ஒன்று தோன்றி முடிந்து இருநூறு வருடங்கள் முடிந்து விட்டது; ஆனால் ஜெயமோகன் எவ்வளவோ பயிற்சி அளித்தும் இவர்கள் இலக்கிய வாசிப்பு / விமர்சனத்தை பொறுத்தமட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இருக்கிறார்கள் (இதைப் பற்றி நான் விரிவாக என் பிளாகில் எழுதி இருக்கிறேன்.) இவர்களும் நிச்சயம் இலக்கிய வாசகர்கள் அல்ல. இத்தகைய A for Apple வகுப்புகளை ஜெயமோகன் தமிழகம் முழுக்க நடத்த வேண்டும் என தேவி ஶ்ரீராம் கேட்பது அவர் எவ்வளவு பெரிய அப்பாவி என்பதைக் காட்டுகிறது.

நான் கடந்த பத்தாண்டுகளிலான என் ஆசிரிய அனுபவத்தில் ஆயிரக்கணக்கான இலக்கிய மாணவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் முறையான பாடத்திட்டம் மற்றும் தொடர் இலக்கிய உரைகளின் வழி இலக்கியத்தைமுறையாககற்பவர்கள். விஷ்ணுபுரம் வாசக அமைப்பின் வாசகர்களை விட நூறு மடங்கு அதிக வாசிப்பை கொண்டவர்கள் (ஏனென்றால் அவர்கள் அதையே பிழைப்பாக செய்பவர்கள்.) ஆனால் இவர்களும் அசலான இலக்கிய வாசகர்கள் அல்ல. சொந்தமாக ஆழ்ந்து வாசிக்க, சுயமாக சிந்திக்க, அதை தெளிவாக பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்த தெரிந்தவனே இலக்கிய வாசகன். இலக்கிய வாசகனை நீங்கள் மூன்று மாதங்கள் வகுப்பெடுத்து தயாரிக்க முடியாது. இலக்கிய பேருரைகள் வழியாகவும் அவனை உருவாக்க முடியாது.

(இலக்கிய விவாதங்களையும்இலக்கிய பேருரைகளையும்ஒன்றாக பாவிக்கும் இடத்துக்கு ஜெயமோகன் வந்துள்ளது நினைத்து எனக்கு உண்மையில் ஆயாசமாக உள்ளது. நான் இதை சொல்வதனால் அவர் என் மீது இன்னும் சற்று கோபித்து கூடுதலாக ஆறு மாதங்கள் என்னை நிராகரிப்பார் எனத் தெரியும். ஆனாலும் நான் உண்மையை இங்கு துணிந்து சொல்லியாக வேண்டும்.)  
வாசகர்களுக்கான பலன் / அவர்களின் வளர்ச்சியை பொறுத்தமட்டில் வேலூர் இலக்கிய அமைப்புக்கும் விஷ்ணுபுரம் அமைப்புக்கும் வாசக சாலைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. வாசகர்களை யாரும் அப்படி வெளியில் இருந்து மேம்படுத்தவோ உருவாக்கவோ நெறிப்படுத்தவோ முடியாது. அப்படி கனவு வேண்டுமானால் சும்மா காணலாம். இந்த இலக்கிய அமைப்புகள், வாசக சாலை உள்ளிட்டு, தமக்கான இலக்குகளுடன், நாட்டங்கள், தேவைகள், எல்லைகளுடன் இயங்குகின்றன. அவற்றால் மக்கள் நிச்சயம் பயனடைகிறார்கள் - அவர்கள் ஒன்றுகூட, விவாதிக்க, உரையாட, நட்பு பாராட்ட, எளிய இலக்கிய அறிமுகங்களை பெற இவை உதவுகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்று மேலானது மற்றொன்று பயனற்றது என்றெல்லாம் இல்லை

விஷ்ணுபுரம் வாசகர் சட்டமும் வாசகசாலையும் என்னைப் பொறுத்தமட்டில் ஒன்று தான். அவற்றின் சமூக பங்களிப்பும் நோக்கும் ஒன்று தான் (செயல்பாட்டு முறை வேறுவேறு என்றாலும்).

பின்குறிப்பு: வாசக சாலை நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஜெயமோகனின் சாபத்தினால் மனம் வாடாதீர்கள். அவர் பாராட்டியவர்கள் எல்லாரும் உருப்பட்டதில்லை; சபித்தவர்கள் கெட்டதும் இல்லை. நான் உருப்படாமல் போய் விடுவேன் என 12 வருடங்களுக்கு முன்பு சொன்னார். விஷால் ராஜா, சுநீல் கிருஷ்ணன் அளவுக்கு மாபெரும் படைப்பாளியாக, மகத்தான சிந்தனையாளனாக வளர்வில்லை என்றாலும், அவர்கள் அளவுக்கு ஆயிரக்கணக்கான பக்கங்களையும் நூற்றுக்கணக்கான நூல்களையும் எழுதி, பல லட்சம் வாசகர்களையும், பல தேசிய விருதுகளை நான் வெல்லவில்லை எனினும் ஏதோ ஒரு சின்ன படைப்பாளியாக நிலைத்திருக்கிறேன். என்னைப் போல நீங்களும் இருப்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.

மற்றொன்று: ஜெயமோகனின் கருத்துகள் தம்மளவில் நிலையானவையோ தர்க்க ஒழுங்கானவையோ அல்ல. ஜெயமோகனின் நரைத்த தலையும் கோபமான முகமும் அவரது வெறும் பாவனைகள். அவர் மனதளவில் ஒரு குழந்தை; இன்று வெகுண்டெழுந்து சாபம் விட்டு கொஞ்ச நாளில் அதை மறந்தே விடுவார்.  



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...