முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கின் பூடகம்


பாத்திமா லத்தீப்பின் தற்கொலை வழக்கு (ஸ்வாதி கொலை வழக்கு போன்றே) பூடகமானது. சில கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் இல்லை:
1) பேராசிரியர் சுதர்சனன் பத்மநாபன்  செய்த குற்றம் தான் என்ன? அவர் பேசிய மத-துவேசம் கொண்ட வாக்கியம் என்ன?
2) அவர் நேரடியாக தற்கொலைக்குத் தூண்டினாரா
3) வகுப்பில் பொதுமன்றத்தில் அவர் மாணவியை அவமதிக்கும்படி பேசினாரா? ஆம் எனில் அது என்ன? இத்தனை பேர் இருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் கூடவா இதை வெளியே வந்து சாட்சியமாக சொல்ல மாட்டார்களா?
4) ஒரு ஆசிரியர் தன் மாணவிக்கு CIA மதிப்பெண்ணை குறைத்து வழங்கியதை தற்கொலைக்கான தூண்டுதல் / உளவியல் ரீதியான ஒடுக்குமுறை என நாம் சித்தரிக்க முடியுமா? அது நியாயமா? அதற்கு சட்டத்தில் இடமுண்டா?

5) ..டியில் சாதிய / மத ஒடுக்குமுறைச் சூழல் இருக்கலாம் - இருக்கிறதெனில் அதனால் தான் பாத்திமா போன்றவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் எனில் அது என்ன? ஆடை அணிவதில், கருத்துக்களை வெளிப்படுத்துவதில், மத அடையாளங்களைப் பூணுவதில், சைவ / அசைவ உணவை உண்பதில் தடைகள் உண்டா? இந்த கலாச்சார நடைமுறைகளை வைத்து யாரேனும் அவமதிக்கப்படுகிறார்களா? எங்கே எப்போது என்று மற்றும் எப்படி?
6) தற்கொலை என வழக்கு கட்டமைக்கப்படுவதை பாத்திமாவின் அப்பா எதிர்க்கிறார் - தன் மகள் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக, ஆகையால் இது ஒரு கிட்டத்தட்ட கொலை என அவர் நம்பலாம். அதற்கு ஆதாரம் இருப்பின் கராறாய் விசாரணை நடத்தப்பட வேண்டும். காவல்துறையின் போக்கில் சந்தேகம் ஏற்பட்டதனாலே அவர் சி.பி. விசாரணிஅ வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து ..டி பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். கேரள மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். அவர் இந்த குற்றச்சாட்டுகளையும் துல்லியமாக வெளிப்படையாக வைக்கவில்லை. தன் மகளின் தற்கொலைக் குறிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை (பாத்திமாவின் சகோதரி அதை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள்; ஊடகங்களில் வெளியான படம் போலியானது என்றும் சொல்கிறார்கள்). வெறுமனே பெயர்களை உதிர்த்திருக்கிறார். இது பிரச்சனையை மேலும் பூடமாக்கி விட்டது. நாளை வழக்கு விசாரணையில் அந்த பேராசிரியர் குற்றமற்றவர் எனத் தெரிய வந்தால் இப்போது ஏற்பட்டுள்ள சமூக சித்தரிப்பு / இந்த முகத்தில் பூசப்பட்ட கரி அகலுமா? அவர் ஆய்விதழ்களில் முற்போக்கு அரசியல் கட்டுரைகள் எழுதுபவர் என்கிறார்கள். அவர் உண்மையில் மதவெறியர் அல்லவெனில் இந்த ஊடகங்களின் கூட்டுவேட்டை நியாயமாகுமா? இதற்கு பாத்திமாவின் அப்பா பொறுப்பேற்பாரா?
பாத்திமாவின் அப்பா ஒன்று தன் மகளின் மரணம் தற்கொலை அல்ல, அது குறித்து சந்தேகமிருக்கிறது என சொல்லி இருக்க வேண்டும். அல்லது நேரடியாக ஆதாரங்களை வெளியிட்டிருக்க வேண்டும். அவரது செயல் இரண்டுக்கும் இடைப்பட்டது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகவே நம்புகிறேன்.

பொத்தாம்பொதுவாக எதிரிகளை கட்டமைக்கக் கூடாது இல்லையா? ..டி மட்டுமல்ல எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் சாதி/மத ஒடுக்குமுறை உண்டெனில் அதை வெளிப்படையாக ஆதராங்களுடன் விவாதிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.
 இப்போதுள்ள ஊடக கட்ட பஞ்சாயத்து சூழலில் அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் பிராமணிய மனநிலை கொண்டவர்கள் / மதவெறியர்கள் / சங்கிகள் எனும் சித்திரம் உருவாகிறது. இது அங்கு வேலை செய்பவர்கள் / படிப்பவர்களை காயப்படுத்தும்; அவர்களுக்கு உளவியல் நெருக்கடி ஏற்படுத்தி தம்மளவில் சிறு சிறு குழுக்களாக பிரியத் தூண்டும்.
என் அனுபவத்தில் நான் வசித்த இடங்களில் இருந்து படித்த / வேலை பார்த்த இடங்கள் வரை தொடர்ந்து சாதிய ஒடுக்குமுறை குறித்த பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். சாதியக் குழுமங்கள் செயல்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றாத இடங்களே இல்லை. இந்தியச் சூழலில் இதைத் தவிர்க்க முதல் வழி சாதிய / மதப் பிரவினையை சமூகவெளியில் குறைப்பது தான். அடுத்து அரசு / தனியார் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகள் வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும். அடுத்து, இட ஒதுக்கீட்டை இன்னும் கூடுதலாக நடைமுறைப்படுத்தலாம் (தகுதிப்பாடு என்பது ஒரு அபத்தம்; வாய்ப்பு கொடுக்கப்பட்டால் கல்வியில் அனைவரும் சமமாவார்கள்). ஆனால் இப்படி ஒரு சமத்துவத்தை நீங்கள் நிறுவனங்களில் செயற்கையாக உருவாக்கினாலும் அது நீடிக்காது; மாற்றம் சமூக அளவில் முதலில் நிகழ வேண்டும். நீங்கள் உங்கள் சாதிக்குள்ளே (அல்லது மதத்துக்குள்ளே) பெண் கொடுத்து / எடுத்து விட்டு வெளியே பாகுபாடு இருக்கக் கூடாது என்றால் அது அபத்தம் இல்லையா? பாசாங்கு இல்லையா


விரைவில் இந்த வழக்கு முடிக்கப்பட்டு விசாரணை முடிவுகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அரசல்புரசலாக குற்றச்சாட்டுகளை கிளப்புவதை நாம் நிறுத்த வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...