முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2019இல் கிரிக்கெட்: மட்டையாளர்கள் வந்தார்கள் வென்றார்கள்





நாட்டுப்புறக் கதைகளில் ஒரு நாட்டில் பேரழகியான இளவரசி ஒருத்தி இருப்பாள். அவள் ஒரு யாரும் குணப்படுத்த முடியாத வியாதியால் மரணப்படுக்கையில் கிடப்பாள். அரசர் பரிதவித்துப் போவார். அவளை குணப்படுத்துவோருக்கு தேசத்தையே பரிசாய் அளிக்கிறேன் என்பார். பேராசைக்கார மருத்துவர்கள் யாராலும் குணப்படுத்த முடியாது. இளவரசியின் மரணத்தை யாரும் தடுக்க முடியாது எனும் நிலை ஏற்படும் போது ஒருவன் வருவான். அவன் சுலபத்தில் அவளைக் காப்பாற்றி நாட்டின் மன்னன் ஆவான். உலக கிரிக்கெட்டின் நிலையும் அவ்வப்போது இப்படித் தான் - டெஸ்ட் ஆட்டம் செத்து விட்டது, ஒருநாள் ஆட்டம் அலுத்து விட்டது, டி-20 தேவைக்கதிகமாய் ஆடப்படுகிறது, கிரிக்கெட் வெறும் சிக்ஸர் அடிக்கும் கூத்தாகி விட்டது, நிதானமான கச்சிதமான ஆட்டத்துக்கு மதிப்பில்லை எனும் குற்றச்சாட்டுகளும் ஒப்பாரிகளும் விண்ணைப் பிளக்கும், ஆனால் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட்டில் அபாரமான சாதனைகளும் அற்புதங்களும் நடக்கும்; கிரிக்கெட் இப்போதும், சமீபமாய் நடந்து முடிந்த இந்தியா-மே. தீவுகள் ஒருநாள் ஆட்டத்தொடரின் கடைசி ஆட்டம் வரை, கடைசிப் பந்து வரை நம்மை நகங்களைக் கடித்துக் கொண்டு வியப்பும் நெஞ்சிடிப்புமாய் எதிர்பார்த்திருக்க வைக்கிறது. கிரிக்கெட்டின் ஆயுள் கெட்டி என்பதை 2019 நிரூபித்துள்ளது.


 2019இல் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் இங்கிலாந்துக்கும் நியுசிலாந்துக்கும் இடையில் நடந்த போது உலகமே - இங்கிலாந்தைத் தவிர பிற நாட்டு ரசிகர்களில் கணிசமானோர் - நியுஸிலாந்து வெல்ல வேண்டும் என்று பிரார்த்தித்தனர். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தேசங்களுக்கும் சிறிய தேசங்களுக்குமான இடைவேளை மிகவும் அதிகரித்து வரும் கடந்த பத்தாண்டிலும் நாம் மிகச்சிறிய, வலுவற்ற ஒரு தேசம் ஒரு ராட்சச அணியை வீழ்த்த வேண்டும் என்றே எதிர்பார்த்தோம். அந்த அணியும் முடிந்த வரை போராடியது. ஜூன் மாதம் 14ஆம் தேதி நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் மட்டையாடிய நியுசிலாந்து 241 அடித்தது; அடுத்தாடிய இங்கிலாந்து 46.1 ஓவர்களில் 203 அடித்து ஆறு விக்கெட்டுகள் இழந்த போது இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் மூழ்கியே விட்டது என ரசிகர்கள் நம்பினர். ஆனால் மற்றொரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் எனும் லியனார்டோ டி காப்ரியோ தன் காதலியின் கையைப் பற்றி எப்படியாவது கரை சேர்க்கப் போராடினார். அவரது 98 பந்துகளிலான 84 கிரிக்கெட் ஆட்டத்தை கௌபாய் துப்பாக்கி சண்டையாக மாற்றியது. 241க்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. சூப்பர் ஓவர் வந்தது. அதிலும் ஒரு பக்கம் நியுசிலாந்தின் பிடிவாதம், மற்றொரு பக்கம் ஸ்டோக்ஸின் மேதைமை என இழுபறி நடக்க அதுவும் டை ஆனது. கடைசியில் நியுசிலாந்தை விட அதிக பவுண்டரிகள் அடித்தது எனும் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்துக்குப் போனது; அதுவும் ஒரு பந்து களத்தடுப்பின் போது ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு உருண்டோடியது என்னும் நிலையில், உலகமே மீண்டும் ஒப்பாரி வைத்தது

என்னதான் நியுசிலாந்தின் தோல்வி காவிய சோகம் பொருந்தியது என்றாலும் இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி இங்கிலாந்து தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை - இவ்வருடம் அவர்களின் ரன் ரேட் சராசரி என்பது 6.49. ஒவ்வொரு ஆட்டத்திலும் பிற அணிகளை விட அவர்கள் 51 ரன்கள் அதிகம் அடித்திருக்கிறார்கள். 22 ஆட்டங்களில் 14 போட்டிகளை வென்று இவ்வருடம் தாம் ஆடிய ஆட்டங்களில் சிறந்த வெற்றி விகிதத்துக்கான சாதனையும் படைத்திருக்கிறார்கள்

இவ்வருடம் கிரிக்கெட்டில், டெஸ்ட் போட்டிகளைத் தவிர்த்து, மட்டையே பந்தை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. 150 ஒருநாள் போட்டிகள் இவ்வருடம் நடந்திருக்கின்றன - இவற்றில் 5.42 என்பது ரன்களின் சராசரி. 350 என்பது வெற்றிக்கு குறைந்த பட்சம் தேவைப்படும் இலக்காக இருந்துள்ளது. விதிமுறைகள், ஆடுதளம், ஆட்டச்சூழல், அதிக ஆட்டங்கள் என பல விசயங்கள் பந்து வீச்சுக்கு விரோதமாகவே இருந்தன. பவுலர்களின் விக்கெட் சராசரியான 33.36 என்பது, 1974க்குப் பிறகு, உலகில் வேறெப்போதும் இவ்வளவு அதிகமாக இருந்தது (பவுலிங் சராசரி குறைவாக இருந்தாலே சிறப்பு.)

இவ்வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த முதல் 15 மட்டையாளர்களில் 12 பேர் துவக்க வீரர்கள். இவர்களில் ரோஹித் ஷர்மாவே எதிரணி பவுலர்களை ஜுராசிக் பார்க்கில் புகுந்ததைப் போல மிரட்சியடைய வைத்தார். 28 ஆட்டங்களில் 1490 ரன்கள். ஏழு சதங்கள் (உலகக்கோப்பையில் மட்டுமே 5). இவருக்கு அடுத்தபடியாய் விராத் கோலி இருக்கிறார் (1377 ரன்கள்). சிறந்த பவுலர்களின் பட்டியலில் முதல் ஐந்து பேர் வேக வீச்சாளர்கள்: ஷாமி, போல்ட், பெர்குஸன், முஸ்தபீசு, புவனேஸ்வர் குமார். ஷாமி 42 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கால்சுழலர்கள் உலகை ஆள்வார்கள் என குல்தீப், சாஹலின் கூட்டணியால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஆசியாவுக்கு வெளியே ஆடுதளங்கள் சுழலர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் ஏற்றத்தாழ்வான விதிமுறைகளாலும் பொய்த்துப் போனது.  

டெஸ்ட் போட்டிகளில் டாப்டென் வரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் இந்தியா இவ்வருடம் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்கவில்லை என்பதும், ஆஸ்திரேலியா மற்றும் மே. தீவுகளில் தொடர்களை வென்றது என்பதும் தனி சாதனைகள். இதே போல இலங்கை தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டித் தொடரில் எதிர்பாராமல் வென்றதும், டர்பன் மைதானத்தில் குசல் பரேரா அடித்த 153 நாட் அவுட்டும் குறிப்பிட வேண்டிய மைல்கற்கள்


வரும் ஆண்டில் வேகவீச்சாளர்களுக்கு மட்டுமன்றி சுழலர்களுக்கும் சாதகமாய் ஆட்டம் மாற வேண்டும், மட்டைக்கும் பந்துக்குமான ஏற்றத்தாழ்வு மறைய வேண்டும் என்பதே நம் வேண்டுதல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...