முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு அட்டகாசமான இறுதி ஆட்டம்



கட்டக்கில் நடந்த இந்தியா-மே. தீவுகள் ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டம் நான் கண்ட மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டங்களில் ஒன்று - என் கணிப்புப்படி ரிஷப் பண்டின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்து விட்டது. ஏனென்றால் கோலி இலக்கை விரட்டும் போது ஆபாரமான சாதனையாளர் என்றாலும் அவருக்கு துணையாக மத்திய வரிசையில் யாராவது அதிரடியாக ஆட வேண்டும். அல்லாவிடில் அவர் சோர்ந்து தவறான நேரத்தில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால் இன்று ஒரு பக்கம் விக்கெட்டுகள் உதிர அவர் உறுதியாக நிதானமாக புத்திசாலித்தனமாக ஆடினார். அதுவும் பந்தை தூக்கி அடிக்காமல், ஸ்டம்புக்கு குறுக்கே ஆக்ரோசமாய் பந்தை விளாசாமல் 30-45 ஓவர்கள் வரை அவர் ஆடி தொய்வின்றி ரன்கள் சேகரித்த விதம் அவரது கட்டுப்பாட்டுக்கு, தன்னம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது. இன்னொரு பக்கம் 25வது ஓவருக்கு சற்று முன்பிருந்தே மே. தீவுகளின் வேக வீச்சாளர்கள் அபாரமாய் வீசிக் கொண்டிருக்க அவர்கள் களத்தடுப்பின் தீவிரம், மும்முரம் ஆட்டத்தை பரபரப்பாக்கியது. ஆடுதளத்தில் அவர்களுக்கு உதவ ஒன்றுமே இல்லை; ஒவ்வொரு வீச்சாளரும் தமது பாணியில் தொடர்ந்து விக்கெட் எடுக்க முயன்றனர். ஜோசப் குறைநீளத்தில் தொடர்ந்து வீசினார். ஹோல்டர் குட் லெங்தில் தன் வழக்கமான வேகத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் அதிகமாய் வீசினார். கீமோ பால் தான் அதிசிறப்பு - அவரது ஸ்லோ பந்துகளையும் குறைநீளத்தையும் அடிக்கடி எகிறும் வேகத்தையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. ராகுல், ஷ்ரேயாஸ், பண்ட், கேதார் போன்றோர் மே. தீவு வேகவீச்சாளர்கள் இந்த நீளத்தை சரியாக கவனிக்கவோ கணிக்கவோ இல்லை


இந்த ஆடுதளத்தில் சில பந்துகள் நின்று வருகின்றன - குறிப்பாக ஸ்லோ பந்துகள் (கடைசி பத்து ஓவர்களில் இந்திய வேகவீச்சாளர்கள் இதை சரிவர பயன்படுத்தவில்லை.) ஆட்டத்தின் முக்கியமான திருப்புமுனை மே. தீவு வீரர்களின் மிகையான ஆவேசம் தான் - ஜாதவ் வெளியேறினதும் ஜடேஜாவுக்கு கோட்டரல் பவுன்சர் இட முயன்று நான்கு ரன்கள் கொடுத்தார். இதே போல ஆடுதளத்தின் இரட்டை வேகத்தை பயன்படுத்தி கோலியை வெளியேற்றிய பின் தாக்கூர் ஆட வந்தார். அவர் சற்று பதற்றமாக இருந்தார். அவருக்கு ஒரு யார்க்கரோ ஸ்லோ பந்தோ வைடாக இட்டு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பால் வேகப்பந்தை முழுநீளத்தில் வீச அதை தாக்கூர் நான்குக்கு கவர் டிரைவ் பண்ணினார். அந்த ஒரே ஷாட்டுடன் மே. தீவு வீச்சாளர்களை சற்று குழப்பி விட்டது. அவரக்ள் கோலியின் விக்கெட்டுடன் ஆட்டம் முடிந்தது என நினைத்தார்கள். ஆனால் தாக்கூரின் பேட்டிங் திறன் அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு அடுத்த ஓவரும் ஒரு திருப்பு முனை - முதல் பந்தில் நக்கிள் பால் எனப்படும் ஸ்லோ பந்தை போல முயன்று கோட்டரல் வைடாக போட்டார். இதை அடுத்து அவர் பதற்றமானார். அவரது உடல்நிலையும் சரியாக இல்லை என நினைக்கிறேன். அந்த ஓவரில் அவர் தொடர்ந்து ஸ்லோ பந்துகளாக வீசியிருந்தால் ஒருவேளை தாக்கூரை தூக்கி இருக்கலாம். ஆனால் முதல் பந்தே சொதப்ப அவர் அடுத்து பவுன்சர் போட தாக்கூர் அதை ஹூக் பண்ணி டாப் எட்ஜ் வாங்கி அது சிக்ஸருக்குப் போக காட்டரல் நிலைகுலைந்து போனார். அடுத்து அவர் பதற்றத்தில் தொடர்ந்து வேகத்தை குறைக்காமலே வீசி தொடர்ந்து அடி வாங்கினார். ஒருவேளை அந்த வைட் விழாமல் இருந்திருந்தால் அந்த ஓவர் ஒழுங்காக அமைந்திருக்கலாம், இந்தியா மீது நெருக்கடி அதிகரித்திருக்கும். இதற்கு அடுத்த ஓவரில் மே. தீவுகள் முழுக்க நம்பிக்கை குலைந்து சொதப்பியது. இப்படி கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல்லும் போது நடுத்தர அணிகள் தம் கட்டுப்பாட்டையும் நம்பிக்கையையும் இழக்கும் எனும் தோனி கால வியூகத்தை ஜோலியும் ஜடேஜாவும் பின்பற்றி மற்றுமொரு வெற்றியை, மறக்க முடியாத வெற்றியை, ஈட்டினர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.