முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதியமைச்சரின் புதிய அறிவிப்பு - அரசு தன் நிலைப்பாட்டை மாற்றுகிறதா?


நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இன்றைய அறிக்கை அரசு வரும் ஐந்தாண்டுகளில் 102 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு பணிகளுக்காக செலவழிக்கப் போவதாய் சொல்கிறது
நம்ப முடியவில்லையே! வழக்கமாக பெரும்பகுதி பணத்தை ராணுவம், தடுப்பு முகாம் எனத் தானே செலவழிப்பார்கள். இது ஒரு நல்ல திருப்பமே. இந்த முதலீடு எளிய மக்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உண்டு பண்ணித் தர வேண்டும்.
 ஆனால் விபரமாய் பார்க்கும் போது சொற்பமான தொகை மட்டுமே விவசாயத்துக்குப் போவது இந்த அரசு இன்னமும் நமது பொருளாதார சீரழிவின் ஆதாரக் காரணத்தை புரிந்து கொள்ள வில்லை என்பதைக் காட்டுகிறது. விவசாயத்திற்கும் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்கும் இலவசமாய் மின்சாரமும் கட்டமைப்பு வசதிகளையும் பண்ணித் தர வேண்டும். கல்விக்கும் கூடுதலாய் பணம் செலவழிக்க வேண்டும்.


 ஜனங்கள் சந்தைக்குப் போய் தினமும் கார்களையும் பிரைவெட் ஜெட்களையும் வாங்கப் போவதில்லை. உற்பத்தியும் வணிகமும் மட்டுமே இந்த அரசின் அக்கறையாக இருக்கிறது; அதிலும் பெரிய தெளிவில்லை. விவசாயம் தெருவில் கிடந்து அழிவதால் தான் வெங்காய விலை வரலாறு காணாதபடி உயர்ந்திருக்கிறது. நகரங்களை மையமிட்ட திட்டங்களும் செலவுகளும் இந்திய பொருளாதாரத்துக்கு தெம்பு தராது
பரந்துபட்ட வளர்ச்சியே நமக்குத் தேவை. வெறும் மின் ஆற்றலை பெருக்கியும் சாலைகளை அமைத்தும் அது சாத்தியப்படாது (மறைமுகமாய் இவையும் விவசாயத்துக்கு உதவும் என்றாலும்). கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்து மத்தியவர்க்கத்தின் வரியைக் கூட்டினால் அது நுகர்வை மேலும் பாதாளத்தில் தான் தள்ளும். பல பொருளாதார நிபுணர்கள் ஊடகங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விசயஙக்ள் இவை. இப்போதைக்கு 102 லட்சம் கோடி முதலீடு பாராட்டத்தக்கது

இப்போதைக்கு மோடி-ஷா இரட்டையர்கள் போக வேண்டிய தொலைவு நெடியது (யு-டர்ன் எடுத்து மக்களை தடுப்புமுகாம்களில் தள்ளுவது, அண்டை நாடுகளில் குண்டுபொழிய்வது என மீண்டும் ஆரம்பித்தால் அத்தொலைவு கொடியது).

தற்போது நடந்து வரும் CAAக்கு எதிரான போராட்டங்களே இந்த நிலைப்பாட்டு மாற்றத்துக்கு வழிவகுத்ததா? காலம் தான் பதில் சொல்லும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.