முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த மூன்றாவது ஆள்


1) நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியல என ஒரு நண்பர் ஆயாசப்பட்டார். அது நல்லது என எனக்குப் பட்டது. ஏன்? அது தான் நேரத்தின் இயல்பே. நேரம் மிக மிக எலாஸ்டிக்கானது, இழுவையானது, ஒரு ரப்பர் பேண்டை இழுப்பதைப் போல அதை இழுத்து விட முடியும். இது எங்கு ஆரம்பித்து எங்கு போகிறது எனும் குழப்பம் தான்நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியலேஎன நம்மை யோசிக்க வைக்கிறது. சிலநேரம் நேரம் இப்படிச் செல்வது விடுதலையை அளிக்கும்; நம்மை மறந்து எதிலாவது திகைத்துப் போய் இருப்போம். உதாரணமாய் ஒரு அழகிய பெண் பேசும் போது அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தால்நேரம் போவதே தெரியாது”. பார்க்கிற உணர்வு நமக்கே வந்து விட்டால் பிரக்ஞைபூர்வமாகி விடுவோம்; பதற்றமும் அலுப்பும் ஏற்படும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றொரு விவாதத்தில் சொல்லுகையில் நாமே நம் வாயைப் பார்க்கிறோம் என்கிறார். அதுவும் பிறர் வாயைப் பார்க்கையில், பார்க்கிற உணர்வு ஏற்படுகையில். அப்போது அங்கு மூன்று பேர் இருக்கிறார்கள் - அழகிய பெண், அவள் வாயைப் பார்க்கும் நீங்கள், உங்களையும் அவளது வாயையும் ஒருசமயம் பார்க்கும் மற்றொரு நீங்கள். அந்த மற்றொரு ஆள் வந்ததும் ரப்பர் பேண்ட் அறுந்து சுரீரென கன்னத்தில் வந்து அடிக்கும்.

2) நேரம் எலாஸ்டிக்காக இருக்கும் போது அழகானது - அதை ஒரு சமயம் ஒன்றை நோக்கி மட்டுமே இழுப்பது நல்லது; நான் இன்று நாவல் எழுதும் நோக்கம் கொண்டிருந்தால் காலை முதல் கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் அதை மட்டுமே செய்வேன் - காப்பி குடிக்கும் போது, டிபன் சாப்பிடும் போது, எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கிற பத்து பத்து நிமிடங்களில் எல்லாம்; அரைமணி, ஒரு மணி இடைவெளி நேரம் வகுப்புகளுக்கு இடையில் கிடைத்தாலும் எழுதுவேன். முதலில் பத்து நிமிடங்கள் நான் நேரத்தை ஜவ்வாக இழுத்துப் பழக்கி இருப்பதால் இந்த அரைமணி, ஒருமணி இழுப்புக்கும் அது நன்றாகவே ஒத்து வரும். அது மட்டுமல்ல அந்த இழுப்பே சுகமாக இருக்கும் (ஒரே வாயைப் பார்ப்பதனால்). ஆனால் பல்வேறு திசைகளில் இழுத்தால் அது எரிச்சலையே தரும். பத்து நிமிடங்கள் பேஸ்புக், பத்து நிமிடங்கள் புத்தகம் படிக்க, இன்னும் பத்து நிமிடங்கள் சில வரிகள் எழுதுவதற்கு, அடுத்த அரைமணி நேரம் மின்னஞ்சல் ஒன்றைப் புனைய, அதற்கு அடுத்த இருபது நிமிடங்கள் இடைவேளை நாவல் எழுத என முயன்று பார்த்தால் அது சுலபமாக, சரளமாக இருக்காது. இது என் அனுபவம்; இது எல்லாருக்கும் பொருந்தும் என சொல்ல மாட்டேன்.

 மாறுபட்ட விசயங்களை செய்யும் போது நான் மாறுபட்ட பல தலைப்பாகைகளை அணிகிறேன்; ஒருவேளை அங்கே அப்போது அந்த மூன்றாவது ஆள் - அந்த பார்க்கிறவனைபார்க்கிறவன்” - தோன்றி விடுகிறானாக இருக்கலாம். சிறிய நேரத் துண்டுகளை ஒரே இலக்கின் பொருட்டு செலவழிப்பதே எப்போதும் என் பரிந்துரை. அதன் மற்றொரு அனுகூலம் சுலபமாக நம்மால் ஒன்றிரண்டு மணிநேரங்களை ஒரு காரியத்துக்காக ஒரு மிக பிஸியான நாளில் கூட செலவழிக்க முடியும் என்பதும் அதனால் காத்திரமாக எதையோ செய்து முடிக்க இயலும் என்பதும்.  

கருத்துகள்

thamizh இவ்வாறு கூறியுள்ளார்…
Very interesting. I do more work same time. But I will try this method and tell you about the result

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...