முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த மூன்றாவது ஆள்


1) நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியல என ஒரு நண்பர் ஆயாசப்பட்டார். அது நல்லது என எனக்குப் பட்டது. ஏன்? அது தான் நேரத்தின் இயல்பே. நேரம் மிக மிக எலாஸ்டிக்கானது, இழுவையானது, ஒரு ரப்பர் பேண்டை இழுப்பதைப் போல அதை இழுத்து விட முடியும். இது எங்கு ஆரம்பித்து எங்கு போகிறது எனும் குழப்பம் தான்நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியலேஎன நம்மை யோசிக்க வைக்கிறது. சிலநேரம் நேரம் இப்படிச் செல்வது விடுதலையை அளிக்கும்; நம்மை மறந்து எதிலாவது திகைத்துப் போய் இருப்போம். உதாரணமாய் ஒரு அழகிய பெண் பேசும் போது அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தால்நேரம் போவதே தெரியாது”. பார்க்கிற உணர்வு நமக்கே வந்து விட்டால் பிரக்ஞைபூர்வமாகி விடுவோம்; பதற்றமும் அலுப்பும் ஏற்படும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றொரு விவாதத்தில் சொல்லுகையில் நாமே நம் வாயைப் பார்க்கிறோம் என்கிறார். அதுவும் பிறர் வாயைப் பார்க்கையில், பார்க்கிற உணர்வு ஏற்படுகையில். அப்போது அங்கு மூன்று பேர் இருக்கிறார்கள் - அழகிய பெண், அவள் வாயைப் பார்க்கும் நீங்கள், உங்களையும் அவளது வாயையும் ஒருசமயம் பார்க்கும் மற்றொரு நீங்கள். அந்த மற்றொரு ஆள் வந்ததும் ரப்பர் பேண்ட் அறுந்து சுரீரென கன்னத்தில் வந்து அடிக்கும்.

2) நேரம் எலாஸ்டிக்காக இருக்கும் போது அழகானது - அதை ஒரு சமயம் ஒன்றை நோக்கி மட்டுமே இழுப்பது நல்லது; நான் இன்று நாவல் எழுதும் நோக்கம் கொண்டிருந்தால் காலை முதல் கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் அதை மட்டுமே செய்வேன் - காப்பி குடிக்கும் போது, டிபன் சாப்பிடும் போது, எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கிற பத்து பத்து நிமிடங்களில் எல்லாம்; அரைமணி, ஒரு மணி இடைவெளி நேரம் வகுப்புகளுக்கு இடையில் கிடைத்தாலும் எழுதுவேன். முதலில் பத்து நிமிடங்கள் நான் நேரத்தை ஜவ்வாக இழுத்துப் பழக்கி இருப்பதால் இந்த அரைமணி, ஒருமணி இழுப்புக்கும் அது நன்றாகவே ஒத்து வரும். அது மட்டுமல்ல அந்த இழுப்பே சுகமாக இருக்கும் (ஒரே வாயைப் பார்ப்பதனால்). ஆனால் பல்வேறு திசைகளில் இழுத்தால் அது எரிச்சலையே தரும். பத்து நிமிடங்கள் பேஸ்புக், பத்து நிமிடங்கள் புத்தகம் படிக்க, இன்னும் பத்து நிமிடங்கள் சில வரிகள் எழுதுவதற்கு, அடுத்த அரைமணி நேரம் மின்னஞ்சல் ஒன்றைப் புனைய, அதற்கு அடுத்த இருபது நிமிடங்கள் இடைவேளை நாவல் எழுத என முயன்று பார்த்தால் அது சுலபமாக, சரளமாக இருக்காது. இது என் அனுபவம்; இது எல்லாருக்கும் பொருந்தும் என சொல்ல மாட்டேன்.

 மாறுபட்ட விசயங்களை செய்யும் போது நான் மாறுபட்ட பல தலைப்பாகைகளை அணிகிறேன்; ஒருவேளை அங்கே அப்போது அந்த மூன்றாவது ஆள் - அந்த பார்க்கிறவனைபார்க்கிறவன்” - தோன்றி விடுகிறானாக இருக்கலாம். சிறிய நேரத் துண்டுகளை ஒரே இலக்கின் பொருட்டு செலவழிப்பதே எப்போதும் என் பரிந்துரை. அதன் மற்றொரு அனுகூலம் சுலபமாக நம்மால் ஒன்றிரண்டு மணிநேரங்களை ஒரு காரியத்துக்காக ஒரு மிக பிஸியான நாளில் கூட செலவழிக்க முடியும் என்பதும் அதனால் காத்திரமாக எதையோ செய்து முடிக்க இயலும் என்பதும்.  

கருத்துகள்

thamizh இவ்வாறு கூறியுள்ளார்…
Very interesting. I do more work same time. But I will try this method and tell you about the result

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...