முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகனின் சிந்தனைப் பள்ளி



ஜெயமோகனுக்கு ஒரு தனித்த சிந்தனைப் பள்ளி உள்ளதாக சிலர் கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஜெ.மோ உள்ளிட்ட எந்த படைப்பாளிகளுக்கும் அப்படி ஒரு சிந்தனைப் பள்ளி இல்லை. .தா., சு.ரா இலக்கியம் குறித்த நிறைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். ஆனால் சு.ராவின் பள்ளியை சேர்ந்தவர்கள் என தமிழில் யாருமில்லை. அவருடைய ஸ்டைலை காப்பியடிக்க முயன்றவர்கள், சிலாகிக்க முயன்றவர்கள் மட்டுமே உண்டு


ஜெமோ பல விமர்சன மரபுகளை ஒட்டி எழுதுகிறார். லிபரல் ஹியூமனிசம் என்று கூட வகுக்க முடியாது. அவருக்கென்று ஒரு தனித்த இலக்கிய சிந்தனைப் பள்ளி இல்லை. அவருக்கே உரித்த உதிரிக் கருத்துக்கள், பிடிவாதங்கள் உண்டு.

ஜெயமோகனின் கருத்துக்கள் ஒரு பெரிய சந்தையில் உலவும் மனிதர்கள், அவர்களுக்கு என்று ஒற்றை முகமில்லை. அவர்கள் அந்த சந்தைக்கு சொந்தமும் இல்லை.

 போகிற போக்கில் அவற்றை school of thought என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவற்றை தத்துவ சரடில் சீராக கோர்க்க முடியாது


.தா., ஜெ.மோவின் இலக்கியப் பார்வையை நவீனத்துவம் என்றும் வகுக்க முடியாது, பின்நவீனம் என்றும் பாத்தி கட்ட முடியாது. அது சில நேரம் நியோ கிளாசிசிசம் அல்லது கற்பனாவாதம் போன்றும் இருக்கும். அவரை இந்து தேசியவாதி என நம்பி பாஜகவில் கூட சேர்க்க மாட்டார்கள். அவர்களிடத்தும் முரண்படுவார்

பெரியாரியத்தை, அயோத்திதாசர் சிந்தனைகளை, மேற்கில் தெரிதா, நீட்சே போன்றோர் உருவாக்கியதை ஒரு பள்ளி எனலாம்


ஜெ.மோவின் பள்ளியில் (அப்படி ஒன்று உள்ளதாய் கற்பனை பண்ணினாலும்) ஒரு ஆழமான தனித்துவமான சிந்தனைத் தரப்பை நூலாக எழுதியவர்கள் என யாரும் இல்லை. அவரிடம் உள்ளவர்கள் கருத்தளவில் அவருடன் முரண்படும் அதேவேளை பாணியிலும் ஸ்டைலிலும் அவரை போல செய்யும் ரசிகர்கள். Personality cult என வேண்டுமெனில் இதை சொல்லலாம்.


 ஜெயமோகனின் கருத்துக்களின் தாக்கம் என்னிடமும் உண்டு. ஆனால் அதை ஒரு போதும் ஒரு சிந்தனைப் பள்ளி எனச் சொல்ல மாட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.