Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தூங்காதே தம்பி தூங்காதே


கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஒரு வழிமுறை நோய்க்குறியைக் கண்டறிந்து, அடையாளங் கண்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிப்பது (test, tract, isolate). ஆனால் இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது சாத்தியமில்லை என்கிறார்கள். இது ஒரு பச்சைப் பொய். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் வீடுவீடாகப் போய் வாக்காளர் அட்டைக்காக தகவல் சேகரிக்க நம்மால் முடியும்; அடுத்து தேசிய மக்கள் பதிவேட்டுக்காக அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் கொண்ட ஒரு பெரும் படையை மத்திய அரசு ஒவ்வொரு குடிமகனும் வீட்டுக்கும் அனுப்பப் போகிறது; அப்போதெல்லாம் சாத்தியமாகும் மனிதவளம் இப்போது மட்டும் இந்த அரசுக்கு இல்லை என்பது ஒப்பந்தத்தை மீறக்கூடாது எனும் அஹிம்சைக் கொள்கைக்காக சீனவீரர்களிடம் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி நம் ராணுவ வீரர்கள் செத்தார்கள் என்பதைப் போல இருக்கிறது.


135 கோடி பேர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு மற்றும் பொருள் வசதி நமக்கு இல்லை என்பதை ஏற்கிறேன். ஆனால் குறைந்தபட்சம் ஜுரம் உள்ளோரை மட்டுமாவது கண்டடையலாமே. உடல் வெப்பத்தைக் கொண்டு சோதிக்கும் கருவிகளை காவலர்கள் பல இடங்களில் பயன்படுத்துவதைக் காண்கிறோம். இது ஒரு மலிவான முறை. இதைப் பயன்படுத்தி ஏன் அரசு தன் படையை வீடுவீடாக அனுப்பி கொரோனாத் தொற்று இருப்பதாய் தெரிகிறவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது?

நோய்த்தொற்று உள்ளோரில் ஒரு பாதி பேருக்கு நோய்க்குறி தெரிவதே இல்லை, தெரியாமல் நோய் வந்து மறைந்து விடும் என்கிறார்கள், சிலருக்கு நோய்க்குறி தெரிய நாளாகும். ஆனால் ஜுரம், சளி, இருமல் என முற்றிப் போன நிலையில் உள்ளோர் உடனே மருத்துவமனைக்கு செல்வதில்லை. என் ஊரில் (தக்கலையில்) ஒரு மருத்துவர் கொரோனாத் தொற்றால் கடுமையாக ஜுரம் கண்டு ஐந்து நாள் தாமதித்து பின்னர் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி இப்போது சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்; அவரால் ஆஸ்பத்திரி பணியாளர்கள், செவிலிகள் என பலருக்கு நோய்த்தொற்று வந்துள்ளது. வீடுவீடாக சென்று உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் ஒரு அடிப்படையான சோதனையை செய்தால் அரசு இப்போதுள்ள பயங்கர சூழலை ஓரளவு தவிர்க்கலாம். நோய்ப்பரவலின் கடுமையைக் குறைக்கலாம்

இந்த அரசுக்கு இது தெரியவில்லை என்பதை விட அக்கறையில்லை என்பதே உண்மை. இதுவே தேர்தல் சமயம் என்றால் எவ்வளவு மும்முரமாக எவ்வளவு ஆட்களை இறங்கி எவ்வளவு ஆயிரம் கோடிகளை செலவழித்து வேலை செய்வீர்கள். ஆனால் மக்கள் பேரழிவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது எல்லா அரசுகளும் திண்ணையில் படுத்து குறட்டை விடுகிறீர்கள். சென்னை வெள்ளத்தின் போது பார்த்தோம், ஒக்கிப் புயலின் போது பார்த்தோம், இப்போது இதோ ஒரு பெருந்தொற்று காலத்திலும் பார்க்கிறோம். உங்களையெல்லாம் திருத்தவே முடியாது


பெருந்தொற்றுச் சூழலுக்கு அரசு தயாராக இல்லை, அதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, வலுவில்லை, தடுமாறுகிறது போன்ற வாதங்களை நம்பாதீர்கள். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஊழல்-தேர்தல்-அதிகாரம் போன்றத் தேவைகள் மட்டுமே கும்பர்கர்ணனை எழுப்புகிறது. மற்ற சமயங்களில் குறட்டை.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...