முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நாயகனும்” “காலாவும்” - மீள்-சொல்லலின் அரசியல்

















இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது.

 பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது.

வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங்கிக்கொண்டு சோரம் போவார். அவரைப் போன்றே அரசியல் தலைவர் ஒருவர் காலாவிலும் வருகிறார். மனைவியும், மகனும் கொல்லப்படுவது, அதன் துயரமும் “காலாவில்” மீள வருகிறது. ஆனால் மனைவி மீதான காதல் “காலாவில்” இன்னும் எதார்த்தமாக, கருணையை, மானுட நேயத்தை மீறின ஒரு புரிந்துணர்வாக, நேசமாக, சஞ்சலங்களும் தடுமாற்றங்களும் கொண்ட தாம்பத்ய பந்தமாக காட்டப்படுகிறது. கணவனின் அரசியலைப் புரிந்த, நடைமுறையில் களத்தில் இயங்குகிறவராக மனைவி காட்டப்படுகிறார். அதே போல நாயக்கரின் பிள்ளைகளைப் போல விடலைத்தனமாக, தந்தையிடம் இருந்து விலகி நிற்பவர்களாக “காலாவின்” மகன்கள் இல்லை - அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்திலேயே நிற்கிறார்கள், போராடுகிறார்கள்.





ஒரு மிக முக்கியமான காட்சியாக எனக்குப் பட்டது “அந்திமழை மேகம்” பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு ஷாட் - நாயக்கரின் முன்னே வந்து நிற்கும் ஒரு சிறுவன் சிவப்பு வண்ணப்பொடியை அவர் மீது தேய்க்கிறான். அங்கிருந்து பாட்டு - விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம் - தொடங்குகிறது. இந்த சதுர்த்திக் கொண்டாட்டத்தின் அடிப்படையிலே இந்துத்துவ அணிதிரட்டல்கள் அங்கு நடந்தே என நமக்குத் தெரியும். மணிரத்னம் இந்த மத அரசியலை கவனிப்பதில்லை அல்லது போகிற போக்கில் திணித்தபடி செல்கிறார்.


21 வருடங்களுக்குப் பிறகு இந்த அரசியலுக்கு ரஞ்சித் ஒரு பதில் அளிக்கிறார் -

இதே போன்ற ஒரு ஷாட் “காலாவின்” கிளைமேக்ஸ் காட்சியில் வருகிறது. வில்லன் ஹரிதேவ் அபயங்கர் பூமிபூஜை நடத்த வர, ஒரு சின்னஞ்சிறு சிறுவன் அவரிடம் வந்து கறுப்பு வண்ணப்பொடியை அவர் மீது வீசி அவரது வெள்ளையாடையை கறுப்பாக்குகிறான். தொடர்ந்து அங்கு குழுமியிருக்கும் மக்கள் அதே போல கறுப்புப் பொடியை அவர் வீசுகிறார்கள். அந்த பகுதியே கறுப்பு வண்ணத்தால் சூழப்படுகிறது. வில்லனும் அவரது அடியாட்களும் குழம்புகிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிகிறார்கள்.

 இந்த கறுப்பு வண்ணம் என்பது காலாவின் நிறம், காலத்தின் நிறம், கறுப்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நிறம், அதற்குள் வெளிச்சம்-இருட்டு, நன்மை-தீமை, சுத்தம்-அசுத்தம் எனும் இருமைகள் இல்லை. கறுப்பு எதிர்-அரசியலின் நிறம்; ஹரி தாதாவினுடயது வெண்மையின் அரசியல், தூய்மையின், பிராமணத்துவத்தின் அரசியல், அது ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்பதை இந்த கருமையின் பிரவாகம் காட்டுகிறது; அடுத்து நீலப்பொடிகள் தூவப்படுவதை ரஞ்சித் காட்டுகிறார். கருமை நீலமாக மாறுகிறது. இது விடுதலை அரசியலின் எதிர்காலத்துக்கான உருவகம். சிவப்புப் பொடியின், மதச்சடங்கின் நிறத்தை, ஒரு சிறிய காட்சித்துளியை எடுத்து அதை எப்படி ஒரு மகத்தான கிளைமேக்ஸின் விஷுவலாக ரஞ்சித் மாற்றியமைத்து மீள்கதையாக்கம் செய்கிறார் பாருங்கள்! 


 ஒரு மக்கள் சமூகத்தின் போராட்ட வாழ்வை மணிரத்னம் மத்தியவர்க்க சிக்கல்களுக்கு ஆட்பட்ட நாடகமாக்கி, சாதி, அரசியல் நீக்கம் செய்யும் போது, ரஞ்சித் அதையே தனதான அரசியலுக்குள் வைத்து மீளச் சொல்லுகிறார். அதற்கான விஷுவல் குறிப்புகளாக மேற்சொன்ன சில காட்சிகளை படமெங்கும். விட்டுச் செல்கிறார்.

ஒரு மகத்தான கலைஞன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...