முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நாயகனும்” “காலாவும்” - மீள்-சொல்லலின் அரசியல்

















இன்று “நாயகன்” படத்தின் ஒரு பகுதியை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன் - அப்போது தான் இதற்கும் “காலாவுக்குமான” ஒற்றுமை மீண்டும் நினைவுக்கு வந்தது. இப்போது இது வெறும் ஒற்றுமை அல்ல, ஒரு அரசியல், மீள்-சொல்லலின் அரசியல் எனப் பட்டது.

 பின்நவீனக் கதையாடல்களில் இப்படி மீள்சொல்வதற்கு ஒரு தனி இடம் உண்டு - இரண்டிலுமே தாராவியை நவீனப்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தி அடித்தட்டு மக்களை வெளியேற்ற முயலும் பண முதலைகளை நாயகன் எதிர்க்கிற காட்சி உண்டு; இரண்டு படங்களின் திரைக்கதையிலும் இதுவே மையக்காட்சி (key incident). ஒரு மத்திய சாதி ஆள் தாதாவாகி அங்கு அதிகமாய் வசிக்கும் தலித்துகளைக் காப்பாற்றுகிறார் என்பதில் ஒரு போலியான அரசியல் வருகிறது. அப்படி ஒரு மானுடநேயத்தை முன்னிறுத்தும் போது பாதிக்கப்பட்ட மக்களின் agencyஐ மணிரத்னம் “நாயகனில்” பறித்து விடுகிறார். அதை மீட்டெடுப்பதே “காலா”. அங்கு தலித்துகளுக்கு ஒரு தலித் தலைமை அமைகிறது. அவர்களின் விடுதலையும் சாதி ஒருங்கிணைப்பில், ஒற்றுமையில், சுயமரியாதையில் பிறக்கிறது.

வேலு வேலுபாய், வேலு நாயக்கர் ஆகும் முன்பு அங்கு ஒரு லோக்கல் தலைவர் இருப்பார் (விஜயன்). அவர் பணம் வாங்கிக்கொண்டு சோரம் போவார். அவரைப் போன்றே அரசியல் தலைவர் ஒருவர் காலாவிலும் வருகிறார். மனைவியும், மகனும் கொல்லப்படுவது, அதன் துயரமும் “காலாவில்” மீள வருகிறது. ஆனால் மனைவி மீதான காதல் “காலாவில்” இன்னும் எதார்த்தமாக, கருணையை, மானுட நேயத்தை மீறின ஒரு புரிந்துணர்வாக, நேசமாக, சஞ்சலங்களும் தடுமாற்றங்களும் கொண்ட தாம்பத்ய பந்தமாக காட்டப்படுகிறது. கணவனின் அரசியலைப் புரிந்த, நடைமுறையில் களத்தில் இயங்குகிறவராக மனைவி காட்டப்படுகிறார். அதே போல நாயக்கரின் பிள்ளைகளைப் போல விடலைத்தனமாக, தந்தையிடம் இருந்து விலகி நிற்பவர்களாக “காலாவின்” மகன்கள் இல்லை - அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்திலேயே நிற்கிறார்கள், போராடுகிறார்கள்.





ஒரு மிக முக்கியமான காட்சியாக எனக்குப் பட்டது “அந்திமழை மேகம்” பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு ஷாட் - நாயக்கரின் முன்னே வந்து நிற்கும் ஒரு சிறுவன் சிவப்பு வண்ணப்பொடியை அவர் மீது தேய்க்கிறான். அங்கிருந்து பாட்டு - விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம் - தொடங்குகிறது. இந்த சதுர்த்திக் கொண்டாட்டத்தின் அடிப்படையிலே இந்துத்துவ அணிதிரட்டல்கள் அங்கு நடந்தே என நமக்குத் தெரியும். மணிரத்னம் இந்த மத அரசியலை கவனிப்பதில்லை அல்லது போகிற போக்கில் திணித்தபடி செல்கிறார்.


21 வருடங்களுக்குப் பிறகு இந்த அரசியலுக்கு ரஞ்சித் ஒரு பதில் அளிக்கிறார் -

இதே போன்ற ஒரு ஷாட் “காலாவின்” கிளைமேக்ஸ் காட்சியில் வருகிறது. வில்லன் ஹரிதேவ் அபயங்கர் பூமிபூஜை நடத்த வர, ஒரு சின்னஞ்சிறு சிறுவன் அவரிடம் வந்து கறுப்பு வண்ணப்பொடியை அவர் மீது வீசி அவரது வெள்ளையாடையை கறுப்பாக்குகிறான். தொடர்ந்து அங்கு குழுமியிருக்கும் மக்கள் அதே போல கறுப்புப் பொடியை அவர் வீசுகிறார்கள். அந்த பகுதியே கறுப்பு வண்ணத்தால் சூழப்படுகிறது. வில்லனும் அவரது அடியாட்களும் குழம்புகிறார்கள், அஞ்சுகிறார்கள், அழிகிறார்கள்.

 இந்த கறுப்பு வண்ணம் என்பது காலாவின் நிறம், காலத்தின் நிறம், கறுப்பு என்பது அனைத்தையும் உள்ளடக்கிய நிறம், அதற்குள் வெளிச்சம்-இருட்டு, நன்மை-தீமை, சுத்தம்-அசுத்தம் எனும் இருமைகள் இல்லை. கறுப்பு எதிர்-அரசியலின் நிறம்; ஹரி தாதாவினுடயது வெண்மையின் அரசியல், தூய்மையின், பிராமணத்துவத்தின் அரசியல், அது ஒரு முடிவுக்கு வரப் போகிறது என்பதை இந்த கருமையின் பிரவாகம் காட்டுகிறது; அடுத்து நீலப்பொடிகள் தூவப்படுவதை ரஞ்சித் காட்டுகிறார். கருமை நீலமாக மாறுகிறது. இது விடுதலை அரசியலின் எதிர்காலத்துக்கான உருவகம். சிவப்புப் பொடியின், மதச்சடங்கின் நிறத்தை, ஒரு சிறிய காட்சித்துளியை எடுத்து அதை எப்படி ஒரு மகத்தான கிளைமேக்ஸின் விஷுவலாக ரஞ்சித் மாற்றியமைத்து மீள்கதையாக்கம் செய்கிறார் பாருங்கள்! 


 ஒரு மக்கள் சமூகத்தின் போராட்ட வாழ்வை மணிரத்னம் மத்தியவர்க்க சிக்கல்களுக்கு ஆட்பட்ட நாடகமாக்கி, சாதி, அரசியல் நீக்கம் செய்யும் போது, ரஞ்சித் அதையே தனதான அரசியலுக்குள் வைத்து மீளச் சொல்லுகிறார். அதற்கான விஷுவல் குறிப்புகளாக மேற்சொன்ன சில காட்சிகளை படமெங்கும். விட்டுச் செல்கிறார்.

ஒரு மகத்தான கலைஞன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...