Skip to main content

Posts

Showing posts from September, 2020

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஐ.பி.எல் ராஜஸ்தான் vs கொல்கொத்தா - செப்டம்பர் 30 - ஆட்டம் கொண்டாட்டம் அலசல்

கொல்கொத்தா-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்ட அலசலைப் பார்க்க: https://youtu.be/Dv15h0_KYj4

தமிழரின் துக்கம் மீதான மனச்சாய்வு

தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை.  மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ?  இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா...

ஐ.பி.எல் தில்லி vs சன் ரைசர்ஸ் - ஆட்டம் கொண்டாட்டம் அலசல்

  https://www.youtube.com/watch?v=jNIKKoULJ9A

Delhi vs Sun Risers; 29 Sep - 6 best things that happened today

The summary of the match:  As usual Delhi won the toss and chose to field. On this slow sticky wicket this is not a bad decision. They made 162 for 4 wickets, definitely short by 20-25 runs.  Sun Risers had a slow steady start - they could have gone broke and accelerated in the first 8 overs, but they didn’t and chose to have a stable start, which made things difficult in the last 8 overs. Eventually they got out for 147 and lost the match.  Delhi’s bowling: a) Amit Mishra - 35 for 2 in 4 overs - his length, flight, speed and courage. Great to see a conventional bowler excelling in this format and that shows you dont need to have much mystery always to succeed in t20. Also the pace bowlers bowled a nice length and mixed up the pace in this Abu Dhabi slow sticky pitch. B) Rabada bowled well as well - 2 for 21 in 4 overs. Great play: Williamson is a genius - he knows the kind of shots you need to play on this pitch. His chip over extra cover for a boundary against Mishra wa...

தமிழர் vs மலையாளிகள் - ஒரு தெளிவுபடுத்தல்

நான் எங்குமே மலையாளிகள் சர்வநேரமும் இலக்கியம் வாசிப்பதாகவோ அவர்களில் பெரும்பாலானோர் வாசிக்கிறார்கள் என்றோ கூறவில்லை . என்னுடைய கருத்து அவர்கள் தமிழர்களை விட அதிக பண்பாட்டு ஓர்மை கொண்டிருக்கிறார்கள் , உயர்கலைகளான இலக்கியம் , இசை , தமது அடையாளமான நாட்டுப்புற கலைகள் ( ஓட்டம் துள்ளல் ) துவங்கி செவ்வியல் நிகழ்த்துகலைகள் ( கதகளி , மோகினி ஆட்டம் ) வரை அவர்கள் போற்றிப் பாதுகாக்கிறார்கள் , அது மிக முக்கியம் என்பதே .   நம்முடைய அடிமுறை இங்கிருந்து கேரளாவுக்கு சென்று களரிப் பயிற்று ஆக வளர்ந்தது ; அவர்கள் களரிக்கென பயிற்சிக்களங்கள் , பள்ளிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் . நம்மூரில் இருந்து அடிமுறை சீனாவுக்கு சென்று குங் பூவாகி , பௌத்த தத்துவத்தின் சாரத்தை உறிஞ்சி ஒரு அற்புதமான சண்டைப் பயிற்சியாகியது ; உலகம் முழுக்க புரூஸ் லீ வழி அது பரவியது . நம்மவர்கள் அடிமுறை , சிலம்பக் கலையை சற்றாவது பொருட்படுத்தி இருக்கிறார்களா ? இசையையும் நடனத்தையும் எடுத்துக் கொண்டால் கோயில் சார்ந்து இக்கலைகளை தமிழர்கள் ( சில சமூகங்கள் )...

ஏன் தமிழர்கள் எழுத்தாளனுக்காக அழுவதில்லை?

இதை பற்றிப் பேசும் மனுஷ்யபுத்திரன் சில காரணங்களைத் தருகிறார் . ஒவ்வொறாக பார்ப்போம் : “ தமிழ் வாழ்க்கை , தமிழ்ப்பண்பாடு , தமிழர் அரசியல் என எதனோடும் தொடர்பில்லாத ஒரு சிறு கும்பல் தங்களை நவீன இலக்கியத்தின் முகமாக முன்னிருத்தி வந்திருக்கிறது . ஒரு நவீன எழுத்தாளன் செத்தால் தமிழர்கள் அழுவதில்லை என்பது உண்மைதான் . ஏனெனில் பெரும்பாலான நவீன எழுத்தாளர்களுக்கும் தமிழர்களின் பண்பாட்டு நீரோட்டங்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை . உயர்சாதி தன்னிலை அகங்காரங்கள் மட்டுமே இங்கு உலக இலக்கிய ரசனையாக முன்னிறுத்த பட்டிருக்கின்றன . தமிழில் பல முக்கியமான நவீன கவிஞர்கள் தொட்ட உயரங்களைவிட கண்ணதாசனும் வைரமுத்துவும் தொட்ட கவித்துவ உச்சங்கள் பிரமாண்டமானவை . இதை தமிழ்ச்சிறுபத்திரிகைச்சூழல் உறைந்திருக்கும் உயர்சாதி அகங்காரம் ஒருபோதும் ஏற்காது .  இந்த மூன்று காரணங்களுடனும் எனக்கு உடன்பாடில்லை : தமிழ் வாழ்க்கை , தமிழ் மைய நீரோட்டம் , பண்பாட்டுக் கூறுகளுடன் ஊடாடுகிற இலக்கியவாதிகளை தமிழர்கள் கொண்டாடுகிறார்களா ? “ பெத்தவன் ” கத...