முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழரின் துக்கம் மீதான மனச்சாய்வு

தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை.

 மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ? 
இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா", "போரும் வாழ்வும்", Catcher in the Rye, Great Gatsby, Great Expectations, Oldman and the Sea, Farewell to Arms, Norwegian Wood, The Windup Bird Chronicle, Kafka on the Shore போன்றவை உடனடியாய் மனத்தில் எழுகின்றன. ஹெமிங்வேயின் Farewell to Arms நாவலின் முடிவில் ஹென்ரியின் கைகளில் கேதரினும் அவர்களது குழந்தையும் மடியும் காட்சி எப்போது படித்தாலும் கண்ணீரை வரவழைப்பது.
 இழப்புணர்வு, அதன் துக்கம் மகத்தான உணர்வுகள் என நினைக்கிறேன். நமது மகாபாரதம் முழுக்க இவ்வுணர்வுகளால் ஆனது தானே. துக்கத்தை எடுத்து விட்டால் மகாபாரதம் குடும்பங்கள் இடையிலான ஒரு சல்லித்தனமான தன்னலப் போட்டி மட்டுமே. துக்கம் ஏன் மகத்தானதாக இருக்கிறது என்தற்கு ஒரு நடைமுறை காரணத்தை நம்மால் சுலபத்தில் கண்டறிய முடியாது, அது இருமையைக் கடந்து சிந்திக்க நமக்கு உதவுகிறது என்பதைத் தவிர.

கார்ல் மார்க்ஸின் இந்த பார்வை மிகச்சிறப்பாகப் பொருந்துவது தமிழ் நவீன கவிதைகளுக்கு எனத் தோன்றுகிறது. இந்த கோணத்தில், தமிழ்ப் புனைவுகளில் உள்ள வெள்ளாள இலக்கிய அரசியலைப் பற்றி, அது பிராமண-வெள்ளாள மோதலாக, இழப்பின் கசப்புணர்வாக வெளிப்படுவதைப் பற்றி ராஜ் கௌதமன் எழுதிய "புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்‌ஷஸ்" எனும் ஒரு முக்கியமான படைப்பையும் குறிப்பிட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...