முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியின் தகிடுதித்தம்


ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.

ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.
கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.
தேர்தல் முடியும் போது,
 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0
 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.

ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.

கிட்னி பத்திரம்!


 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.


ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.

கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.

தேர்தல் முடியும் போது,

 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.


ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.


கிட்னி பத்திரம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...