முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியின் தகிடுதித்தம்


ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.

ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.
கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.
தேர்தல் முடியும் போது,
 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0
 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.

ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.

கிட்னி பத்திரம்!


 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.


ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.

கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.

தேர்தல் முடியும் போது,

 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.


ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.


கிட்னி பத்திரம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.