முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியின் தகிடுதித்தம்


ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.

ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.
கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.
தேர்தல் முடியும் போது,
 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0
 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.

ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.

கிட்னி பத்திரம்!


 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க மாட்டார், அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாய் என முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்தி வந்திருக்கிறது. இது உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக (சிறுநீரக சிகிச்சை) என சொல்லப்பட்டாலும் அது முழுக்க உண்மையல்ல.


ரஜினி இனி அரசியலுக்கு வருவது அவருக்கு நடைமுறையில் நல்லதல்ல என நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆரம்பத்தில் தன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைக்க முடியாவிடினும் மூன்றாவது அணியாக ஒரு அதிகார மையமாகத் தோன்றலாம் என அவர் நம்பியிருக்கலாம். ஆனால் வரக் கூடிய தேர்தலில் அதிமுக மட்டுமல்ல பாஜகவும் இங்கு பெருத்த தோல்வியை சந்திக்கும் என தகவல் போனதும் அவர் சுதாரித்திருப்பார். ஆனாலும் பாஜக, குருமூர்த்தியின் அழுத்தம் அவரை உடனடியாய் முடியாது என சொல்ல முடியாத அளவுக்கு தத்தளிக்க வைத்திருக்கும்.

கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் அரசியல்ரீதியாக அவர் பெறப்போகும் மக்கள் கோபமும், அடுத்த ஆளும் கட்சியினரின் வெறுப்பும் தன் மீது முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகும் என அவர் அறிவார். உ.தா., கட்சி ஆரம்பித்துள்ள கமலை விட கட்சியே ஆரம்பிக்காத ரஜினியே கடுமையான விமர்சனங்களை, எதிர்ப்பை சந்தித்தார். ஏனென்றால் கமல் ஒரு பக்கம் வழவழகொழகொழ என பேசினாலும் அவர் ஆளும் தரப்புக்கு எதிராக தன்னை வைத்துக் கொள்கிறார். ஆனால் ரஜினியோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் திரளும் போது அவர் மக்களின் மனநிலைக்கு எதிர்நிலையில் நின்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கொந்தளிப்பை ஏற்படுத்துவார். இதற்கே இவ்வளவு அடி விழுகிறது என்றால் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீரா பகையை, கோபத்தை அவர் மக்களிடம் ஏற்படுத்துவார் என அறிவார்.

தேர்தல் முடியும் போது,

 அதிகாரம், சினிமா வெற்றி, செல்வாக்கு = 0

 கூட்டிக் கழித்துப் பார்த்தால், கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதே லாபம் எனும் முடிவுக்கு ரஜினி வந்திருக்க வேண்டும். இதற்குப் பதிலாக, இனி ரஜினியால் மோடி, ஷா, ஸ்டாலின் என அனைத்து தரப்புக்கும் ஜால்ரா போட்டு இமயமலை உச்சியில் தவம் புரிய முடியும். கதம் கதம், சுபம் சுபம்.


ரஜினி காலங்காலமாக அவரது பணம், சினிமா வெற்றி ஆகியவற்றை காவு கொடுக்க தயங்கியே அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறவர். இன்னும் அவருக்கு மார்க்கெட் சில வருடங்களாவது உள்ளது. ஆகையால் தோற்கக் கூடிய குதிரையில் பந்தயம் வைத்து அவர் அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த படங்களை இழக்கத் துணிய மாட்டார். கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடும் முன்பே ஓய்வெடுப்பதே ரஜினிக்கு நல்லது. அந்த தனிப்பெரும் சாதனை இறுதி வரை அவருக்குரியதாகவே இறுதிவரை இருக்கட்டும்.


கிட்னி பத்திரம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...