முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினி ஏன் வரவில்லை என்பது குறித்த புளுகுகள்



ரஜினி உடல்நலமின்மையால் அரசியலுக்கு வரவில்லை என்பது சுத்தப் புளுகு என நினைக்கிறேன். அது தெரியும் என்பதாலே பாஜகவினர் புலம்புகிறார்கள். பிரவீன் காந்த் கூட ரஜினியின் அறிவிப்புக்கு ரத்தக்கொதிப்பு காரணமல்ல என்கிறார். ஏன் புளுகு என்பதற்கான சில நடைமுறை நியாயங்களைப் பார்ப்போம்:


1) ஆம், ரஜினி ஒன்றும் புரூஸ் லீ இல்லை. ஆனால் அதே நேரம் இன்றைய நிலையில் அவர் ஊர் ஊராகப் பயணித்து மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. காணொலி மூலமாக அவ்வப்போது அறிவிப்புகளை விட்டால் போதும். அவர் நீண்ட நேரம் பேசினால் அது அவருக்கே பாதகமாகும் என்பதால் சுருக்கமாக ஒன்றிரண்டு வசனங்களைப் பேசி விட்டு மிச்ச வேலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள், கட்சியை நடத்தும் மாஜி பாஜக தலைவர்கள், தமிழருவிகளிடம் விட்டு விடலாம். ஆக, உடல்நிலை காரணமாக விலகுகிறேன் என்பது இந்த இணைய அரசியல் காலத்தில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.


2)  சன் நியூசில் குணசேகரன் கேட்டதைப் போல இந்த உடற்பிரச்சனைகள், கொரோனா ஆபத்து எல்லாம் முன்பே இருந்தது. ஒருநாள் பி.பி எகிறினதும் ஏன் ரஜினி வேலியை எகிறிக் குதித்து ஓட வேண்டும். ஆக இந்த முடிவுக்குப் பின்னால் ஏதோ அரசியல் / பொருளாதாரக் காரணம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தவே அவர் இரண்டு நாள் அட்மிட் ஆகி மருத்துவ சான்றிதழ் எல்லாம் வாங்கி இருக்கிறார். என்னதான் வளர்ந்து கழுதை வயசானாலும் ரஜினி ஒரு குழந்தை தான்.


3) ரஜினியின் முடிவுக்குப் பின்னால் பாஜக கொடுத்த அழுத்தம் தான் என்கிறார்கள். இது சரியாக இருக்க முடியாது - ரஜினி எப்போதுமே பாஜகவுக்கு இணக்கமானவர். அவர்களது மனதை நோகடிக்கக் கூடாது என தாங்குவாரே தவிர அவர்களை நினைத்து அஞ்சவோ எரிச்சலாகவோ மாட்டார். மாறாக, இதன் பின்னால் அதிமுக தலைமை இருக்கலாம். ரஜினி களத்தில் இருந்து நீங்கியது அதிமுகவுக்கே பெரிதும் பயனளித்துள்ளது. இனி சசிகலாவை களமிறக்கி மட்டுமே பாஜகவால் அதிமுகவை கழுத்தை நெரிக்க முடியும். சசி எனும் அஸ்திரமும் எந்தளவுக்கு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்குமென சொல்ல முடியாது. ஏவின ஆளையே வந்து தாக்கினாலும் தங்கலாம். இப்போதைக்கு சீட் பேரத்தில் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கிறது. 20 இடங்களை பொத்திக் கொண்டு வாங்க வேண்டியது தான். பாஜகவை இதுவே கடுப்பேற்றியிருக்கும் - தப்பான நேரத்தில் ரஜினி கைவிட்டதில் தாமரை சகதியில் விழுந்து விட்டது. ஆனால் எடப்பாடியார் எதைக் காட்டி “அண்ணாத்தையை” மிரட்டியிருப்பார் என்பது தான் தெரியவில்லை.


4) வீட்டில் உட்கார்ந்து காணொலியில் பிரச்சாரம் பண்ணுவதற்கு இல்லாத உடற்தகுதி ரஜினிக்கு படம் நடிக்க மட்டும் இருக்கிறதா? அவர் “அண்ணாத்த” படபிடிப்பில் இருந்து பின்வாங்கவில்லை, கவனியுங்கள். 


5) கமல் எத்தனையோ தப்பான படங்களில் ரிஸ்க் எடுத்து பணத்தைக் கொட்டி சொதப்பி இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் வலது காலை வைத்தால் கையால் தங்கிக் கொள்வார்கள், இடது கால் என்றால் கண்ணிவெடி எனச் சொன்னால் அவர் இடதுகாலை தான் வைப்பார். அப்படித்தான் அவர் அரசியலிலும் களம் இறங்கினார். கமலின் இந்த  ரஸ்கைப் போல ரிஸ்கைக் கடிக்கும் தெகிரியம் தலைவருக்குக் கிடையாது. அவர் மிக மிக யோசித்து தான் படத்தேர்வுகளையே செய்வார். 

ரஜினி அவ்வளவாக ரிஸ்க் எடுக்க விரும்பாத மத்திய வர்க்க மனநிலை கொண்டவர் என்பார்கள். அதனால் தான் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம் என சந்துபொந்தில் எல்லாம் புகுந்து வரி ஏய்ப்பு பண்ணுகிறார். அந்தளவுக்கு “கஞ்சம்”. அவர் தன் “எதிர்கால” திரைவாழ்வு அரசியலினால் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கலாம். எப்படியும் ஏதாவது ஒரு கழகக் கட்சியே ஆட்சிக்கு வரும். எதற்கு மூன்று மாத பிரச்சாரத்தினால் இரண்டு தரப்பையும் பகைத்து தன் படவெளியீட்டை முடக்க வேண்டும் என கொஞ்சம் அற்பமாகவே கவலைப்பட்டிருக்கலாம். 


எது எப்படியோ ரஜினியின் பின்வாங்கல் தான் 2020இன் மிகச்சிறந்த சேதி. 

(அ) இனி அவரது அரசியல் உளறல்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் (உளறத் தான் போகிறார்) நடிப்பை ரசிக்கலாம். 

(ஆ) பேரங்களில் பாஜகவின் கரம் தாழ்வது எப்போதுமே தமிழகத்துக்கு நலன் பயக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...