முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எல்லாம் பழக்கம் தானா?



இன்று ஆயுஷுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவன் எழுதுவது, படிப்பது, சிந்திப்பது எல்லாம் ஒரு பழக்கத்தினால் தானா எனக் கேட்டான். பழக்கம் ஒரு போதையாகிறது. அது இல்லாமல் வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போகுமா என பயம் வருகிறது. காதல் கூட சுலபத்தில் ஒரு பழக்கமாவதில்லையா எனக் கேட்டான். எனக்கு வாழ்க்கையை இப்படி வடிவத்துக்குள் அடைப்பதில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. ஆனால் என்னை ஈர்த்தது மற்றொரு கேள்வி: அவன் என்னிடம் கேட்டான் - “உங்களால் எழுதாமல் இருக்க இயலுமா?” “அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் தாராளமாக நான் எழுதாமல் வேறெதாவது செய்வேன். எழுதுவது ஒரு வேதனையான வேலை தானே” (பேஸ்புக்கில் எழுதுவது, தெரிந்த கருத்துக்களை வைத்து கட்டுரை எழுதுவதை சொல்லவில்லை.) என்று நான் அவனிடம் சொன்னேன். கடந்த 14 ஆண்டுகளாக தினமும் எழுதி வருகிறேன். மிக மோசமான இழப்புகள் நேர்ந்து உருக்குலைந்து போகும் போது சில நாட்களில் எழுத்துக்கு மீண்டு விடுவேன். அது பழக்கத்தினால் அல்ல - எழுத்தில் ஒருவித ஈடு இணையற்ற இன்பம் உள்ளது. அது பேசுவதில் நிச்சயம் இல்லை. 


ஆனால் வாழ்க்கை இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்து சென்றால் நான் எழுதுவதை மறந்து / விட்டுவிட்டு வேறொன்றை சந்தோஷமாக செய்து கொண்டிருப்பேன் என நினைக்கிறேன். உ.தா., நான் கைதாகி சிறையில் ஒரு வருடம் இருக்க நேர்ந்தால் அங்குள்ள வாழ்க்கைக்கு உகந்தவாறு இருப்பேன். அல்லது நமது ஜி எதிர்காலத்தில் வதைமுகாம்களை ஏற்படுத்தி நாட்டு மக்களை அதனுள் அடைத்தால் என்னுடைய அன்றாட தேவைகளுக்கே கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், எழுத்துக்கு அரை மணி நேரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டால், மரணம் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தால் ஒவ்வொரு கணத்தையும் வேறெப்படி மகிழ்ச்சியாக, தீவிரமாக வாழ்வது என கண்டுபிடித்து செயல்படுவேன். 

நான் என்றில்லை, பெரும்பாலானோர் அப்படித்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்வதற்கு தூண்டுதல், பழக்கம், வடிவம் எல்லாம் தேவையில்லை, அதற்கு நேரம் மட்டும் போதும். காலத்துள் வாழ்கிறவர்களுக்கு அக்காலத்தினுள் தம் இருப்பதை (இன்மையை) அறிவதே நோக்கம், உத்வேகம், திளைப்பு, அறிதல் எல்லாம். ஒரு பனித்திவலைக்குள் தன் முகத்தைத் தேடும் குழந்தையை, ஒரு மலரைப் போல, ஒவ்வொரு மணித்துளிக்குள்ளும் நமது இருப்பை அறிய முனைகிறோம். அதற்கே வாழ்கிறோம். வாழ்தலுக்கு வேறெந்த அர்த்தமும் இல்லை என நினைக்கிறேன். 


காலத்தின் பிள்ளைகள் நாம். நம்மையும் காலத்தையும் பிரிக்க முடியாது. அதனாலே எனக்கு சாவிலும் நம்பிக்கை இல்லை. அது காலத்துக்கு அப்பால் இருக்கிறது. வாழப் பிறந்தவனுக்கு சாவே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...