முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - இங்கிலாந்து டி-20 தொடர்





முதலாவது டி-20 போட்டியில் ஆடுதளத்தின் மெத்தனமான மிகை துள்ளல் இந்திய மட்டையாளர்களை குப்புற விழ வைத்தது என்றால் இரண்டாவது போட்டியில் குறைவான துள்ளல் கொண்ட, மேம்பட்ட ஆடுதளம் இந்திய அணிக்கு சிறப்பாக மட்டையாட உதவியது. முதல் போட்டியில் சிறந்த திட்டத்துடன் வந்த இங்கிலாந்து அணி செயல்திட்டத்தை பொறுத்தமட்டில் இப்போட்டியில் சொதப்பியது. குறிப்பாக 2-3 ஓவர்களில் அடில் ரஷீத்தை கோலிக்கு எதிராக பந்து வீச வைக்காதது முக்கியமான தவறாகியது. இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள் - எந்த நீளத்தில் வீசுவது? குறைநீளமா அல்லது முழுநீளமா? வேகமாகவே மெதுவாகவா? சரியான பந்து விரட்டுகிற நீளத்தில் கட்டர்கள் போடுவதே. அவர்கள் இது குறித்து ஒரு முடிவுக்கு வருமுன்பு இஷான் கிஷனும், ரிஷப் பண்டும் அடித்து காலி பண்ணி விட்டார்கள். 


துவக்க வீரர்களைப் பொறுத்தமட்டில் ரோஹித்தும், இஷானும் சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ராகுல் ஒரு சிறந்த மட்டையாளர் என்றாலும் டி-20யில் அவர் அநியாயத்துக்கு பொறுமையாக ஆடுவதாக எனக்கு ஒரு வருத்தமுண்டு. ஐ.பி.எல்லில் அவருடைய அணி தொடர்ந்து சொதப்புவதற்கு இந்த எதிர்மறை மட்டையாட்டம் - 18வது ஓவர் வரை தான் நின்றாக வேண்டும் எனும் முடிவுடன் ஆடுவது - ஒரு காரணம். டெஸ்ட் போட்டியில் தன் இடத்தை இழந்த பின் ராகுல் உள்ளூர் 50 ஓவர் + டி-20 போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்திய அணியிலேயே ஆடாமல் அலங்காரப் பொருளாக இருந்தது அவரது ஆட்ட சரளத்தை, தன்னம்பிக்கையை பாதித்துள்ளது.


ஷிக்கர் தவனைப் பொறுத்தமட்டில் அவர் உலகக்கோப்பைகளில் அட்டகாசமாக ஆடக் கூடியவர் என்பதால் மூன்றாவது துவக்க வீரராக அவரை எடுப்பது நல்ல முடிவாக இருக்கும். சஹல் சரியான உடற்தகுதியுடன் இல்லை என நினைக்கிறேன். இந்த கொரோனா லாக் டவுனும் அவருடைய ஆட்டநிலையை மிக மோசமாக பாதித்துள்ளது. ஜடேஜா திரும்ப வந்தால் அவர் சாஹலின் இடத்தை பறித்துக் கொள்ளக் கூடும். அதனால் இப்போதே சாஹலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ராகுல் சஹருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். புவனேஷ்வரின் இன்றைய பந்து வீச்சும் வெகுவாக கவர்ந்தது. வரப் போகும் டி-20 உலகக்கோப்பையில் அவரும் நடராஜனும் இணைந்து இறுதி 4 ஓவர்களில் யார்க்கர் வீசுவதைப் பார்க்க கண்கொள்ளா கடையாக இருக்கும். 


இந்திய அணியின் களத்தடுப்பு மிக மோசமாக் இருந்தது - என்னுடைய கணக்குப்படி 29 ஓட்டங்களையாவது இதனால் உபரியாக அளித்தார்கள். ஆனால் இங்கிலாந்தின் மோசமான ஆட்டம், இஷான், கோலி, பண்டின் சிறப்பான மட்டையாட்டம் காரணமாக இது இந்திய அணியை பெரிதும் பாதிக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.