முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - இங்கிலாந்து டி-20 தொடர்





முதலாவது டி-20 போட்டியில் ஆடுதளத்தின் மெத்தனமான மிகை துள்ளல் இந்திய மட்டையாளர்களை குப்புற விழ வைத்தது என்றால் இரண்டாவது போட்டியில் குறைவான துள்ளல் கொண்ட, மேம்பட்ட ஆடுதளம் இந்திய அணிக்கு சிறப்பாக மட்டையாட உதவியது. முதல் போட்டியில் சிறந்த திட்டத்துடன் வந்த இங்கிலாந்து அணி செயல்திட்டத்தை பொறுத்தமட்டில் இப்போட்டியில் சொதப்பியது. குறிப்பாக 2-3 ஓவர்களில் அடில் ரஷீத்தை கோலிக்கு எதிராக பந்து வீச வைக்காதது முக்கியமான தவறாகியது. இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள் - எந்த நீளத்தில் வீசுவது? குறைநீளமா அல்லது முழுநீளமா? வேகமாகவே மெதுவாகவா? சரியான பந்து விரட்டுகிற நீளத்தில் கட்டர்கள் போடுவதே. அவர்கள் இது குறித்து ஒரு முடிவுக்கு வருமுன்பு இஷான் கிஷனும், ரிஷப் பண்டும் அடித்து காலி பண்ணி விட்டார்கள். 


துவக்க வீரர்களைப் பொறுத்தமட்டில் ரோஹித்தும், இஷானும் சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ராகுல் ஒரு சிறந்த மட்டையாளர் என்றாலும் டி-20யில் அவர் அநியாயத்துக்கு பொறுமையாக ஆடுவதாக எனக்கு ஒரு வருத்தமுண்டு. ஐ.பி.எல்லில் அவருடைய அணி தொடர்ந்து சொதப்புவதற்கு இந்த எதிர்மறை மட்டையாட்டம் - 18வது ஓவர் வரை தான் நின்றாக வேண்டும் எனும் முடிவுடன் ஆடுவது - ஒரு காரணம். டெஸ்ட் போட்டியில் தன் இடத்தை இழந்த பின் ராகுல் உள்ளூர் 50 ஓவர் + டி-20 போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் இந்திய அணியிலேயே ஆடாமல் அலங்காரப் பொருளாக இருந்தது அவரது ஆட்ட சரளத்தை, தன்னம்பிக்கையை பாதித்துள்ளது.


ஷிக்கர் தவனைப் பொறுத்தமட்டில் அவர் உலகக்கோப்பைகளில் அட்டகாசமாக ஆடக் கூடியவர் என்பதால் மூன்றாவது துவக்க வீரராக அவரை எடுப்பது நல்ல முடிவாக இருக்கும். சஹல் சரியான உடற்தகுதியுடன் இல்லை என நினைக்கிறேன். இந்த கொரோனா லாக் டவுனும் அவருடைய ஆட்டநிலையை மிக மோசமாக பாதித்துள்ளது. ஜடேஜா திரும்ப வந்தால் அவர் சாஹலின் இடத்தை பறித்துக் கொள்ளக் கூடும். அதனால் இப்போதே சாஹலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ராகுல் சஹருக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம். புவனேஷ்வரின் இன்றைய பந்து வீச்சும் வெகுவாக கவர்ந்தது. வரப் போகும் டி-20 உலகக்கோப்பையில் அவரும் நடராஜனும் இணைந்து இறுதி 4 ஓவர்களில் யார்க்கர் வீசுவதைப் பார்க்க கண்கொள்ளா கடையாக இருக்கும். 


இந்திய அணியின் களத்தடுப்பு மிக மோசமாக் இருந்தது - என்னுடைய கணக்குப்படி 29 ஓட்டங்களையாவது இதனால் உபரியாக அளித்தார்கள். ஆனால் இங்கிலாந்தின் மோசமான ஆட்டம், இஷான், கோலி, பண்டின் சிறப்பான மட்டையாட்டம் காரணமாக இது இந்திய அணியை பெரிதும் பாதிக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...