Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தேவ்தத் படிக்கல்: எதிர்கால இந்திய துவக்க வீரர்?




இந்த தேவ்தத் படிக்கல் ஒரு தனித்துவமான கலவை - அதிரடியாக ஆடினாலும் கண்டமேனிக்கு சுற்றுவதாகத் தோன்றாது. இதனாலே அவர் சரளமாக / வேகமாக ஆடும் போது ‘இதோ இப்போ அவுட் ஆகிடுவான் பாரேன்’ எனத் தோன்றாது. ஐ.பி.எல்லில் வேறு பலர் அடித்தாடும் போது ஏதோ கடையில் இருந்து முட்டையை காகிதத்தில் பொதிந்து வீட்டுக்கு எடுத்து வரும் திகில் உணர்வு இருக்கும். ஆனால் படிக்கல் அதிரடியாக ஆடும் போது ‘இவன் அவுட் ஆவான்னு தோணலியே’ என்றே எனக்குத் தோன்றும். அவருக்கு கச்சிதமான தடுப்பாட்டமோ பழுதற்ற காலாட்டமோ இல்லை. அவர் கால்களை போதுமானபடி அசைப்பதே இல்லை. ஆனால் ஒரு தெளிவான திட்டமிடல், தெளிவு, temperament என சொல்வார்களே அந்த நிதானம் உள்ளது. 
கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும்: அவர் இரண்டு, மூன்று ஷாட்களைத் தான் பவுண்டரி, சிக்ஸர்களுக்காக அடிக்கிறார். வேறு ஷாட்கள் இல்லாமல் அல்ல, தன் அதிரடி ஆட்டத்தை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக. இது கோலியின் ஸ்டைல். அவர் எப்போது எப்படி ஆடுவார் என நாம் சுலபமாக கணிக்க முடியும். இந்த கணிக்கத்தக்க ஆட்டமே கோலி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கக் காரணம். படிக்கல்லும் அப்படித்தான். 

எனக்கு படிக்கல்லிடம் பிடித்த இன்னொரு விசயம் அந்த உயரமும் அதனால் அவருக்கு உள்ள அசாத்தியமான மட்டை வீச்சும் (reach). மற்றவர்களுக்கு நல்ல நீளமாக உள்ள பந்து இவருக்கு முழுநீளம். முன்னங்காலுக்கு வந்து அப்படியே நேராக தூக்கி அடித்தால் பந்து மைதானத்தை சுலபத்தில் கடந்து விடுகிறது. இதனாலே எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் முன்னாள் ஆஸ்திரேலிய துவக்க மட்டையாளர் மேத்யு ஹெய்டன் நினைவுக்கு வருகிறார்.

அடுத்து அவர் தனது பெரும்பாலான பெரிய ஷாட்டுகளை முன்னங்காலுக்கு சென்று நேராக அடிக்கிறார். இப்படி நடக்கும் போது வேக வீச்சாளர்கள் உயரப்பந்துகளைப் போடுவார்கள். பெங்களூரில் வளர்ந்த பெரும்பாலான மட்டையாளர்களைப் போல படிக்கல்லும் பின்னங்கால் ஷாட்டுகளை - pull and hook - நன்றாக ஆடுகிறார். 

அவர் எக்ஸ்டிரா கவரிலும் மிட்விக்கெட்டிலும் முழுநீளப்பந்துகளை அடிக்க முயல்வதில்லை. இதனாலே மெது பந்துகளுக்கு ஷார்ட் மிட்விக்கெட்டிலோ கவரிலோ கேட்ச் கொடுப்பதில்லை. சமநிலையை இழந்து எல்.பி.டபிள்யொ ஆவதில்லை. பந்தை இறுதி வரை கவனிப்பதன் சுலபத்தில் பவுல்ட் ஆவதில்லை. இதனாலே மூன்றாவது-நான்காவது ஸ்டம்பில் போகும் பந்தை விரட்ட முயன்று எட்ஜ் கொடுப்பதும் இல்லை.

ஹெய்டனைப் போல இவர் அதிகமாக ஸ்வீப் செய்வதில்லை, ஆனாலும் சுழல் பந்தை நன்றாகவே ஆடுகிறார்; ஆடுதளத்தைப் பொறுத்து என்ன ஷாட் என தீர்மானிக்கிறார் என நினைக்கிறேன். ஒன்று ரொம்ப முன்னுக்கு வந்து அடித்தாடுகிறார், அடுத்து உடனே பின்னுக்கு சென்று வெட்டியோ புல் செய்தோ ரன் எடுக்கிறார் - பழைய இங்கிலாந்து மட்டையாளர் அலிஸ்டெர் குக்கைப் போன்று. குக்கைப் போல படிக்கல்லின் முன்னங்கால் நேராகவே இருக்கும், பந்தின் திசைக்கு ஏற்ப அசையாது.    

படிக்கல்லின் பலவீனம் பந்து ஸ்விங் ஆகும் போது நான்காவது-ஐந்தாவது ஸ்டம்பில் விரட்டுகிற நீளத்தில் போட்டால் அவரால் கையாள முடியாது என்பது. அடுத்து, நின்று வரும் ஆடுதளத்தில் இவருக்கு சரியாக டைமிங் செய்ய முடியாமல் போகும் என்பது. ஆனாலும் போராடி 100 ஸ்டிரைக் ரேட்டில் முப்பது, நாற்பது ரன்கள் எடுத்து விடுவார்.

இந்திய ஒருநாள் அணியில் ஷிக்கர் தவனின் ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை படிக்கல் எடுத்துக் கொள்வார் எனத் தோன்றுகிறது. ப்ரித்வி ஷா இவரை விட திறமையாளர்; ஆனால் ஒப்பிடுகையில் நிதானமோ வடிவொழுங்கோ அவருடைய ஆட்டத்தில் இல்லை. ஷா மிக மட்டமான களத்தடுப்பாளர் வேறு. அதோடு இந்த வயதிலேயே அவ்வப்போது முட்டிப்பிரச்சனை வருகிறது. மேலும், இப்போதைக்கு படிக்கல்லுக்கு இணையான ஒரு நல்ல இடது கை துவக்க வீரர் வேறு யாரும் உள்ளதாகத் தோன்றவில்லை. இறுதியாக, அவர் பெங்களூர் ராயல்ஸ் அணியில் கோலியின் கீழ் ஆடுகிறார். பெங்களூர் அணியில் ஆடுவது இந்திய அணியில் நுழைய முதல் வாயில் என நமக்குத் தான் தெரியுமே!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...