முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலியின் தொழில்நுட்ப பிரச்சனையும் அதற்கான தீர்வும்



விராத் கோலியின் கால் பாடத்தில் உள்ள ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றி இன்று சுனில் கவாஸ்கர் விளக்கினார். பந்து நான்காவது பந்தில் விழுகிறது. மட்டையாளன் இப்போது தன் பின்னங்காலை நடுக்குச்சியிலும் முன்னங்காலை off குச்சியிலும் வைத்து ஒன்று அப்பந்தை அது வைடாக செல்லும் பட்சத்தில் விட்டு விட வேண்டும் அல்லது நேராக வந்தால் விரட்ட வேண்டும். விராத் கோலியின் பின்னங்கால் off குச்சிக்கு போகிறது. முன்னங்கால் நான்காவது, சில நேரம், ஐந்தாவது குச்சிக்குக் கூடப் போகிறது. விளைவாக 7வது, 6வது குச்சியில் விழுந்து நேராக வரும் பந்தை கோலி தன் கைகளால் ஆட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார். இது ஏன் நடக்கிறது?


பந்து வெளிப்படும் போதே லைனை கணித்து பின்னங்கால் நடுக்குச்சிக்கு செல்லும் போது முன்னங்கால் off குச்சி எங்கிருக்கிறது என்பதை மட்டையாளனுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி விடுகிறது. அப்போது வெளியே செல்லும் பந்தை தடுப்பதோ விடுவதோ எளிதாகிறது. 7வது, 6வது குச்சியில் விழும் பந்து அப்போது ரொம்ப வைடாகத் தெரிகிறது. அப்பந்தை அடிக்காமல், அடித்து எட்ஜ் கொடுக்காமல் தப்பிக்கலாம். இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யும் கோலி தொறந்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதுவே கோலிக்கு நடந்தது.


கோலி மட்டுமல்ல, இதே தவறை ரஹானேவும் தொடர்ந்து செய்து அவுட்டாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வாலும் இந்த அபாயகரமான உத்தியை பயன்படுத்தி தோல்வி உற்றார். இதை வெற்றிகரமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் ஆஸி அணியின் ஸ்டீவின் ஸ்மித், அவருக்கு முன் தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவருக்கும் முன் மே.இ தீவுகளின் சந்தர்பால் ஆகியோர். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு அபாரமான சுயக்கட்டுப்பாடு இருந்தது. நான்காவது குச்சியில் விழும் பந்தையும் கால்பக்கமாகவே அடிக்க முயன்றார்கள். அப்பகுதியில் தான் அவர்களின் வலிமையும் இருந்தது. மேலும் இது அவர்களுக்கு இளமையில் இருந்தே இயல்பாக கைவந்த தொழில்நுட்பம். ஆனால் கோலி, ரஹானே போன்றோர் இதை தாமதமாக ஒரு நெருக்கடி நிலைமையில் கடன் வாங்க முயன்றவர்கள். என்ன நெருக்கடி?


கோலியின் கால்பாடமானது 2019இல் இருந்தே சற்று மாறி விட்டது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் அடித்தாட முயன்ற போதோ எப்படியோ இது நிகழ்ந்து விட்டது. ஆக வெளியே செல்லும் பந்துக்கு அவர் பின்னங்கால் சரிவர அசையாமல் போனது. வெறும் கைகளால் off பக்கமாக பந்தை விரட்ட முயன்றார். சில நேரங்களில் இது வெற்றி தந்தது, சில நேரங்களில் தோல்வியும். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் ஆக வாய்ப்புள்ள ஆடுதளங்களில் கோலி இந்த குறையை ஈடு செய்ய back and across எனும் இந்த off குச்சியில் பின்னங்காலை நகர்த்தும் உத்தியை பயன்படுத்த முயன்றார். அவருடைய நோக்கம் இல்லாத கால்பாடத்தை ஈடுகட்டுவது. ஆனால் இது எதிர்மறையான விளைவையே கோலிக்கு தந்துள்ளது. கோலியின் தாக்கத்தினால் என்னவோ இதை தம் ஆட்டத்திலும் முன்னெடுக்க முயன்ற மத்திய வரிசை மட்டையாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.

 

  இந்த கால்பாடத்தை கோலி இங்கிலாந்துக்கு எதிராக இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திருத்திக் கொள்ள முயன்றார். அதனாலே அவரால் off பக்கமாக சரளமாக ஆட முடிந்தது. ஆனால் சாம் கரன் பந்து வீச வந்ததும் முன்னங்காலை குறுக்க கொண்டு போய் எல்.பி.டபிள்யோ ஆகப் போய் தப்பித்தார். அது அவரது பழைய சந்தேகங்களை, பயங்களைக் கிளற, மீண்டும் back and across போனார். ரொம்ப வைடாகப் போன பந்தை ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுத்தார்.


ஆனால் கோலி நிறைய சிந்திக்க கூடிய மட்டையாளர். இந்த இன்னிங்ஸில் காணும் மாற்றத்தைக் கண்டால் அடுத்த டெஸ்டில் கட்டாயமாக கால்பாடத்தை சரி பண்ணி அரைசதம் அடிப்பார் என நம்பிக்கை ஏற்படுகிறது. அதிர்ஷடம் இருந்தால் சதம் கூட அடிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.