Skip to main content

விராத் கோலியின் தொழில்நுட்ப பிரச்சனையும் அதற்கான தீர்வும்



விராத் கோலியின் கால் பாடத்தில் உள்ள ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றி இன்று சுனில் கவாஸ்கர் விளக்கினார். பந்து நான்காவது பந்தில் விழுகிறது. மட்டையாளன் இப்போது தன் பின்னங்காலை நடுக்குச்சியிலும் முன்னங்காலை off குச்சியிலும் வைத்து ஒன்று அப்பந்தை அது வைடாக செல்லும் பட்சத்தில் விட்டு விட வேண்டும் அல்லது நேராக வந்தால் விரட்ட வேண்டும். விராத் கோலியின் பின்னங்கால் off குச்சிக்கு போகிறது. முன்னங்கால் நான்காவது, சில நேரம், ஐந்தாவது குச்சிக்குக் கூடப் போகிறது. விளைவாக 7வது, 6வது குச்சியில் விழுந்து நேராக வரும் பந்தை கோலி தன் கைகளால் ஆட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார். இது ஏன் நடக்கிறது?


பந்து வெளிப்படும் போதே லைனை கணித்து பின்னங்கால் நடுக்குச்சிக்கு செல்லும் போது முன்னங்கால் off குச்சி எங்கிருக்கிறது என்பதை மட்டையாளனுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி விடுகிறது. அப்போது வெளியே செல்லும் பந்தை தடுப்பதோ விடுவதோ எளிதாகிறது. 7வது, 6வது குச்சியில் விழும் பந்து அப்போது ரொம்ப வைடாகத் தெரிகிறது. அப்பந்தை அடிக்காமல், அடித்து எட்ஜ் கொடுக்காமல் தப்பிக்கலாம். இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யும் கோலி தொறந்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதுவே கோலிக்கு நடந்தது.


கோலி மட்டுமல்ல, இதே தவறை ரஹானேவும் தொடர்ந்து செய்து அவுட்டாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வாலும் இந்த அபாயகரமான உத்தியை பயன்படுத்தி தோல்வி உற்றார். இதை வெற்றிகரமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் ஆஸி அணியின் ஸ்டீவின் ஸ்மித், அவருக்கு முன் தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவருக்கும் முன் மே.இ தீவுகளின் சந்தர்பால் ஆகியோர். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு அபாரமான சுயக்கட்டுப்பாடு இருந்தது. நான்காவது குச்சியில் விழும் பந்தையும் கால்பக்கமாகவே அடிக்க முயன்றார்கள். அப்பகுதியில் தான் அவர்களின் வலிமையும் இருந்தது. மேலும் இது அவர்களுக்கு இளமையில் இருந்தே இயல்பாக கைவந்த தொழில்நுட்பம். ஆனால் கோலி, ரஹானே போன்றோர் இதை தாமதமாக ஒரு நெருக்கடி நிலைமையில் கடன் வாங்க முயன்றவர்கள். என்ன நெருக்கடி?


கோலியின் கால்பாடமானது 2019இல் இருந்தே சற்று மாறி விட்டது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் அடித்தாட முயன்ற போதோ எப்படியோ இது நிகழ்ந்து விட்டது. ஆக வெளியே செல்லும் பந்துக்கு அவர் பின்னங்கால் சரிவர அசையாமல் போனது. வெறும் கைகளால் off பக்கமாக பந்தை விரட்ட முயன்றார். சில நேரங்களில் இது வெற்றி தந்தது, சில நேரங்களில் தோல்வியும். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் ஆக வாய்ப்புள்ள ஆடுதளங்களில் கோலி இந்த குறையை ஈடு செய்ய back and across எனும் இந்த off குச்சியில் பின்னங்காலை நகர்த்தும் உத்தியை பயன்படுத்த முயன்றார். அவருடைய நோக்கம் இல்லாத கால்பாடத்தை ஈடுகட்டுவது. ஆனால் இது எதிர்மறையான விளைவையே கோலிக்கு தந்துள்ளது. கோலியின் தாக்கத்தினால் என்னவோ இதை தம் ஆட்டத்திலும் முன்னெடுக்க முயன்ற மத்திய வரிசை மட்டையாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.

 

  இந்த கால்பாடத்தை கோலி இங்கிலாந்துக்கு எதிராக இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திருத்திக் கொள்ள முயன்றார். அதனாலே அவரால் off பக்கமாக சரளமாக ஆட முடிந்தது. ஆனால் சாம் கரன் பந்து வீச வந்ததும் முன்னங்காலை குறுக்க கொண்டு போய் எல்.பி.டபிள்யோ ஆகப் போய் தப்பித்தார். அது அவரது பழைய சந்தேகங்களை, பயங்களைக் கிளற, மீண்டும் back and across போனார். ரொம்ப வைடாகப் போன பந்தை ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுத்தார்.


ஆனால் கோலி நிறைய சிந்திக்க கூடிய மட்டையாளர். இந்த இன்னிங்ஸில் காணும் மாற்றத்தைக் கண்டால் அடுத்த டெஸ்டில் கட்டாயமாக கால்பாடத்தை சரி பண்ணி அரைசதம் அடிப்பார் என நம்பிக்கை ஏற்படுகிறது. அதிர்ஷடம் இருந்தால் சதம் கூட அடிக்கலாம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...