முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலியின் தொழில்நுட்ப பிரச்சனையும் அதற்கான தீர்வும்



விராத் கோலியின் கால் பாடத்தில் உள்ள ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றி இன்று சுனில் கவாஸ்கர் விளக்கினார். பந்து நான்காவது பந்தில் விழுகிறது. மட்டையாளன் இப்போது தன் பின்னங்காலை நடுக்குச்சியிலும் முன்னங்காலை off குச்சியிலும் வைத்து ஒன்று அப்பந்தை அது வைடாக செல்லும் பட்சத்தில் விட்டு விட வேண்டும் அல்லது நேராக வந்தால் விரட்ட வேண்டும். விராத் கோலியின் பின்னங்கால் off குச்சிக்கு போகிறது. முன்னங்கால் நான்காவது, சில நேரம், ஐந்தாவது குச்சிக்குக் கூடப் போகிறது. விளைவாக 7வது, 6வது குச்சியில் விழுந்து நேராக வரும் பந்தை கோலி தன் கைகளால் ஆட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார். இது ஏன் நடக்கிறது?


பந்து வெளிப்படும் போதே லைனை கணித்து பின்னங்கால் நடுக்குச்சிக்கு செல்லும் போது முன்னங்கால் off குச்சி எங்கிருக்கிறது என்பதை மட்டையாளனுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி விடுகிறது. அப்போது வெளியே செல்லும் பந்தை தடுப்பதோ விடுவதோ எளிதாகிறது. 7வது, 6வது குச்சியில் விழும் பந்து அப்போது ரொம்ப வைடாகத் தெரிகிறது. அப்பந்தை அடிக்காமல், அடித்து எட்ஜ் கொடுக்காமல் தப்பிக்கலாம். இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யும் கோலி தொறந்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதுவே கோலிக்கு நடந்தது.


கோலி மட்டுமல்ல, இதே தவறை ரஹானேவும் தொடர்ந்து செய்து அவுட்டாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் மயங்க் அகர்வாலும் இந்த அபாயகரமான உத்தியை பயன்படுத்தி தோல்வி உற்றார். இதை வெற்றிகரமாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் ஆஸி அணியின் ஸ்டீவின் ஸ்மித், அவருக்கு முன் தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவருக்கும் முன் மே.இ தீவுகளின் சந்தர்பால் ஆகியோர். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் இவர்களுக்கு அபாரமான சுயக்கட்டுப்பாடு இருந்தது. நான்காவது குச்சியில் விழும் பந்தையும் கால்பக்கமாகவே அடிக்க முயன்றார்கள். அப்பகுதியில் தான் அவர்களின் வலிமையும் இருந்தது. மேலும் இது அவர்களுக்கு இளமையில் இருந்தே இயல்பாக கைவந்த தொழில்நுட்பம். ஆனால் கோலி, ரஹானே போன்றோர் இதை தாமதமாக ஒரு நெருக்கடி நிலைமையில் கடன் வாங்க முயன்றவர்கள். என்ன நெருக்கடி?


கோலியின் கால்பாடமானது 2019இல் இருந்தே சற்று மாறி விட்டது. அவர் ஒருநாள், டி-20 போட்டிகளில் அடித்தாட முயன்ற போதோ எப்படியோ இது நிகழ்ந்து விட்டது. ஆக வெளியே செல்லும் பந்துக்கு அவர் பின்னங்கால் சரிவர அசையாமல் போனது. வெறும் கைகளால் off பக்கமாக பந்தை விரட்ட முயன்றார். சில நேரங்களில் இது வெற்றி தந்தது, சில நேரங்களில் தோல்வியும். டெஸ்ட் போட்டிகளில் ஸ்விங் ஆக வாய்ப்புள்ள ஆடுதளங்களில் கோலி இந்த குறையை ஈடு செய்ய back and across எனும் இந்த off குச்சியில் பின்னங்காலை நகர்த்தும் உத்தியை பயன்படுத்த முயன்றார். அவருடைய நோக்கம் இல்லாத கால்பாடத்தை ஈடுகட்டுவது. ஆனால் இது எதிர்மறையான விளைவையே கோலிக்கு தந்துள்ளது. கோலியின் தாக்கத்தினால் என்னவோ இதை தம் ஆட்டத்திலும் முன்னெடுக்க முயன்ற மத்திய வரிசை மட்டையாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.

 

  இந்த கால்பாடத்தை கோலி இங்கிலாந்துக்கு எதிராக இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் திருத்திக் கொள்ள முயன்றார். அதனாலே அவரால் off பக்கமாக சரளமாக ஆட முடிந்தது. ஆனால் சாம் கரன் பந்து வீச வந்ததும் முன்னங்காலை குறுக்க கொண்டு போய் எல்.பி.டபிள்யோ ஆகப் போய் தப்பித்தார். அது அவரது பழைய சந்தேகங்களை, பயங்களைக் கிளற, மீண்டும் back and across போனார். ரொம்ப வைடாகப் போன பந்தை ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுத்தார்.


ஆனால் கோலி நிறைய சிந்திக்க கூடிய மட்டையாளர். இந்த இன்னிங்ஸில் காணும் மாற்றத்தைக் கண்டால் அடுத்த டெஸ்டில் கட்டாயமாக கால்பாடத்தை சரி பண்ணி அரைசதம் அடிப்பார் என நம்பிக்கை ஏற்படுகிறது. அதிர்ஷடம் இருந்தால் சதம் கூட அடிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...