முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்கானிஸ்தான் குறித்த கவலைகள்



அப்கானிஸ்தான்-தாலிபான் பிரச்சனை முழுக்க அம்மக்களின் வரலாறு, உள்நாட்டுச்சிக்கல்கள், அமெரிக்கா, சோவியத் காலனிய ஆதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை, முன்னேற்றத்துக்கும் பழமைக்கும் இடையில் எங்கே போவதெனத் தெரியாத பழங்குடி இனங்கள் சம்மந்தப்பட்டவை. அதை இந்திய சூழலுடன் பொருத்துவதோ, அதை வைத்து பாஜகவை பகடி செய்வதோ, இந்திய இஸ்லாமியர்களுக்கு ஊமைக்குத்து விடுவதோ எல்லாம் அபத்தங்கள். இந்தியா இப்போது வெளியுறவுத்துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி அப்கானிஸ்தானை நமக்கு சாதகமாக கையாள வேண்டும் என பரிந்துரைப்பதும் தவறானது - இன்னொரு மக்களின், தேசியத்தின் நெருக்கடியை, குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து உள்ளே நுழைவது கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிவது போல ஆகி விடும். அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாய் அப்கானிஸ்தானை கைப்பிடிக்குள் ராணுவத்தின் மூலம் வைத்திருந்ததால் அந்நாட்டு ஆயுத வியாபாரிகள், கார்ப்பரேட்டுகளைத் தவிர அந்த சாமான்ய அமெரிக்கர்கள் எந்த பயனும் பெறவில்லை. இத்தனை லட்சம் மக்களை டுரோன்களால் போட்டுத்தள்ளியதிலோ, இப்போது அவர்களை தவிக்க விட்டு அலட்சியமாக வெளியேறியதாலோ அமெரிக்கா உண்மையால் எந்த உருப்படியான லாபத்தையும் தார்மீக ரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ பெறவில்லை. இப்போது நடந்து கொண்டிருப்பவை இந்திய பிரிவினையின் போது அப்போதைய பிரிட்டிஷ் அரசு மக்களின் பாதுகாப்பையும் பெருங்கூட்டமாக மக்கள் புலம்பெயர்வதை ஒருங்கிணைப்பதை தம் பொறுப்பல்ல என கைமலர்த்தி விட்டு சென்றதை, அதன் விளைவாக பல லட்சம் பேர் கொல்லப்பட்டதை, உயிரிழந்ததை ஓரளவு நினைவுபடுத்துகிறது.


அப்கானிஸ்தானில் இப்போது நடப்பது ஒரு மிகப்பெரும் அவலமே. மக்கள் விமானத்தில் தொற்றிக்கொண்டு பாதி வானத்தில் இருந்து விழுவதைக் காண கண்ணீர் வருகிறது. விமானத்தைத் துரத்திக் கொண்டும் ஓடும் மக்களின் பரிதாபகர காட்சியையும் ஒரு அமைதியான நாகரிகமான சூழலில் இருந்து பார்க்கிறவரால் ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் அப்கானிஸ்தான் ஒருநாள் தன்னையே சீரமைத்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன். தாலிபான்கள் மூர்க்கத்தையும், வலிமையையும் இழந்து, அதிகாரத்தையும் மக்களிடம் திரும்பக் கொடுக்கும் நாள் நிச்சயமாக வரும். அதை அம்மக்களே செய்ய முடியும். நாம் அல்ல. அதைப் பற்றி அவர்களே சிந்திக்கவும் தவிக்கவும் வேண்டும். நாம் அல்ல. 


நமது ஜனநாயகத்தை எப்படி பாதுகாப்பது என்று நாம் கவலைப்படுவோம். இப்போதுள்ள மதவாத ஆட்சி ஒன்றியத்தில் தொடரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் நாம் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றபடியே இருக்கிறோம். பல்லாயிரம் விவசாயிகளிடம், எதிர்க்கட்சிகளிடம், பல கோடி சிறுபான்மையினரிடம் எந்த உரையாடலையும் வைத்துக் கொள்ள விரும்பாத ஒரு முரட்டு, ஜனநாயக விரோத அரசை நாம் தலைவணங்கி கொண்டாடுகறோம். சொந்த தேவைக்காக பல லட்சம் கோடிகள் வரிப்பணத்தை தன் எதிரிகளையும் நண்பர்களையும் ஒற்றறிய செலவிட்ட ஒரு அரசை பெருவாரியான மக்கள் எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறோம். இதற்கும் தமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள். பெட்ரோல் விலை அம்பானிகளின் லாபம் பல்லாயிரம் மடங்கு பெருகும் நோக்கில், அரசின் கஜானாவை நிரப்பும் நோக்கில் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் இதை ஏதோ வானிலை செய்தி போல எடுத்துக் கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என வானத்தைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நாம் ஜனநாயக உரிமைகளோ வாக்களிக்கும் அதிகாரமோ தேவையில்லாத ஒரு மக்கள் கூட்டமென நம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் முதலில் நம்மைப் பற்றி கவலைப்படுவோம். அப்கானிஸ்தானையும் உகாண்டாவையும் அந்நாட்டு மக்கள் கவனித்துக் கொள்ளட்டும்.

 ஒரு ஜனநாயக நவீன தேசமாக நாம் என்னவாக விரும்பினோம், என்னவாக விரும்புகிறோம், இப்போது எங்கிருக்கிறோம் என நம்மை நமக்குள்ளே ஒப்பிடுவது தான் சரி.

 அதை விட்டு விட்டு பாஜகவும் தாலிபான்களும் ஒன்றா இல்லையா என்றெல்லாம் குடுமிப்பிடி இடுவது என்னவொரு பாசாங்கு. அந்த ஒப்பீடே அவசியமற்றது. உண்மை என்னவென்றால் நமது நவீனத்துக்கு முந்தைய அரசியல், ஜனநாயகமற்ற பாசிச ஆட்சி அமைப்பு குறித்த நமது அவமான உணர்வை மறைக்க “அந்தோ அப்கானிஸ்தானின் நிலையைப் பாரீர்” என ஆவேசப்பட்டுக் கொள்கிறோம். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு - அடுத்தவன் துர்மணத்தை விமர்சிக்கும் முன் சொந்த குண்டியை மணந்து பார்த்து விட வேண்டும். நாம் நம்முடையதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வோம், அவர்கள் அவர்களுடைய பார்த்துக் கொள்வார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...