முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(மன அழுத்தம் கொண்ட) அன்னையரிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது!


மனப்பிரச்சனை உள்ள தாய்மார் குழந்தைகளை கவனிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள் தமது மன அழுத்தத்துக்கு குழந்தையை இலக்காக்கி கவனிக்காமல் சாப்பாடு கொடுக்காமல், குளிக்க வைக்காமல் விடுவது ஒரு வகை என்றால், அடித்து துன்புறுத்துவது மற்றொரு வகை. அடுத்து இவர்கள் சுயவதையிலும் ஈடுபடுவார்கள். தமது மன அழுத்தத்திற்கு புற உலகமே - கணவர், குழந்தைகள் - காரணம் என எண்ணி, அதற்கு தீர்வு இவர்களை ஒழிப்பதே என நம்பத் தொடங்குவர். தமது கடுங்கோபத்துக்கு வடிகாலாக குழந்தைகளை அடித்து சிதைப்பது, இப்போதெல்லாம் அதை காணொலியாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பிக் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் காரியங்கள். அந்த காணொலி ஆதாரத்தை வைத்து தான் இந்த பெண்ணிடம் இருந்து தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார்.

மீண்டும் சொல்கிறேன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அன்னையர் குழந்தைகளை வளர்க்கும் தகுதி அற்றவர்கள். ஆனால் இதைப் போன்ற கொடூரங்கள் நிகழும் வரை சட்டமோ சமூகமோ இதை வலியுறுத்துவதோ தடுப்பதோ இல்லை. இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது!

இன்னும் எத்தனைக் காலம் தான் குழந்தைகளை வளர்க்கும் ஆற்றலோ தகுதியோ ஆண்களுக்கு இல்லை, பெண்களுக்கு மட்டுமே உண்டு என நாம் (நீதிமன்றம், ஊடகங்கள்) சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? அதற்குப் பதிலாக யாருக்கு மன ஆரோக்கியம், பக்குவம் உள்ளது என ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பெண்ணாக பிறப்பதாலே தாய்மை தோன்றுவதில்லை. தாய்மை என்பது சில குறிப்பிட்ட சந்தப்ப சூழல்களில், குறிப்பிட்ட உடல், மன நிலைகளின், குடும்ப, சமூக கலாச்சார பின்னணியில் தோன்றுவது. சிறிய பிறழ்வு இருந்தாலே தாய்மை மறைந்து கொலைகார சுபாவம் வளர்ந்து விடும். இன்று வேலை, சமூகவலைதளம், புற அழுத்தம் என பல காரணங்களால் பெண்கள் அதிகமாக மனநோய்க்கு - மன அழுத்தத்துக்கு - ஆளாகிறார்கள். குறிப்பாக, மகப்பேறுக்கு பின்பான ஹார்மோன் மாற்றங்களால் அவர்கள் கடும் கோபமும், வெறுப்பும் கொண்டவர்களாக மாறுகிறார்கள் - முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலையில் எரியும் வீட்டைப் போல இருக்கிறார்கள். சிலருக்கு இந்த ஹார்மோன் மாற்றங்களின் நீட்சியாக கடும் மன அழுத்தம் வருவதுண்டு. முந்தைய கூட்டுக் குடும்ப அமைப்பில் குழந்தைகளை சமாளிக்க, கவனிக்க நிறைய உறவினர்கள் உதவினார்கள் என்பதால் இப்பெண்கள் அன்று ஓரளவுக்கு சமாளித்து தம் அழுத்தங்கள், மனமூட்டங்களில் இருந்து மெல்ல மீண்டு வந்தனர். ஆனால் இன்றைய தனித்த குடும்பங்களில் அவர்களுடைய வெறுப்பின் ஒரே இலக்காக கணவனும் குழந்தையும் மாறி விடுகிறார்கள். அதனாலே குழந்தை பிறந்த இரு வருடங்களுக்குள் நிறைய விவாகரத்துகள் நிகழ்கின்றன. 

இதற்கு ஒரு தீர்வு உண்டு: மனநல மருத்துவர்கள் தம்மிடம் வரும் பெண் நோயாளிகளில் சிறு குழந்தைகள் உள்ளவர்களைப் பற்றி அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வரவில்லை என்றாலோ மன அழுத்தம் துவக்க நிலையில் இருந்து தீவிரமானதாக, மனச்சிதைவாக உருமாறுகிறது எனத் தெரிந்தாலோ உடனடியாக காவல் நிலையம் மூலம் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். விவாகரத்து வழக்குகளின் போதும் மனப்பிரச்சனை உள்ள தாய்மாருக்கு கஸ்டடி உரிமை கொடுக்கக் கூடாது.
நம் அரசும் நீதித்துறையும் விழித்துக் கொள்ளாதவரை இத்தகைய கொடுமைகள் நடந்தபடித்தான் இருக்கும்! என்னவொரு துயரம்.

இது சார்ந்து எனக்கு சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. ஒருநாள் அவற்றை ஒரு நாவலில் சித்தரிப்பேன்.

 இனி குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் இக்காட்சி தான் என் மனதில் எழுதும். நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவேன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...