முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(மன அழுத்தம் கொண்ட) அன்னையரிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது!


மனப்பிரச்சனை உள்ள தாய்மார் குழந்தைகளை கவனிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள் தமது மன அழுத்தத்துக்கு குழந்தையை இலக்காக்கி கவனிக்காமல் சாப்பாடு கொடுக்காமல், குளிக்க வைக்காமல் விடுவது ஒரு வகை என்றால், அடித்து துன்புறுத்துவது மற்றொரு வகை. அடுத்து இவர்கள் சுயவதையிலும் ஈடுபடுவார்கள். தமது மன அழுத்தத்திற்கு புற உலகமே - கணவர், குழந்தைகள் - காரணம் என எண்ணி, அதற்கு தீர்வு இவர்களை ஒழிப்பதே என நம்பத் தொடங்குவர். தமது கடுங்கோபத்துக்கு வடிகாலாக குழந்தைகளை அடித்து சிதைப்பது, இப்போதெல்லாம் அதை காணொலியாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பிக் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் காரியங்கள். அந்த காணொலி ஆதாரத்தை வைத்து தான் இந்த பெண்ணிடம் இருந்து தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார்.

மீண்டும் சொல்கிறேன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அன்னையர் குழந்தைகளை வளர்க்கும் தகுதி அற்றவர்கள். ஆனால் இதைப் போன்ற கொடூரங்கள் நிகழும் வரை சட்டமோ சமூகமோ இதை வலியுறுத்துவதோ தடுப்பதோ இல்லை. இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது!

இன்னும் எத்தனைக் காலம் தான் குழந்தைகளை வளர்க்கும் ஆற்றலோ தகுதியோ ஆண்களுக்கு இல்லை, பெண்களுக்கு மட்டுமே உண்டு என நாம் (நீதிமன்றம், ஊடகங்கள்) சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்? அதற்குப் பதிலாக யாருக்கு மன ஆரோக்கியம், பக்குவம் உள்ளது என ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பெண்ணாக பிறப்பதாலே தாய்மை தோன்றுவதில்லை. தாய்மை என்பது சில குறிப்பிட்ட சந்தப்ப சூழல்களில், குறிப்பிட்ட உடல், மன நிலைகளின், குடும்ப, சமூக கலாச்சார பின்னணியில் தோன்றுவது. சிறிய பிறழ்வு இருந்தாலே தாய்மை மறைந்து கொலைகார சுபாவம் வளர்ந்து விடும். இன்று வேலை, சமூகவலைதளம், புற அழுத்தம் என பல காரணங்களால் பெண்கள் அதிகமாக மனநோய்க்கு - மன அழுத்தத்துக்கு - ஆளாகிறார்கள். குறிப்பாக, மகப்பேறுக்கு பின்பான ஹார்மோன் மாற்றங்களால் அவர்கள் கடும் கோபமும், வெறுப்பும் கொண்டவர்களாக மாறுகிறார்கள் - முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலையில் எரியும் வீட்டைப் போல இருக்கிறார்கள். சிலருக்கு இந்த ஹார்மோன் மாற்றங்களின் நீட்சியாக கடும் மன அழுத்தம் வருவதுண்டு. முந்தைய கூட்டுக் குடும்ப அமைப்பில் குழந்தைகளை சமாளிக்க, கவனிக்க நிறைய உறவினர்கள் உதவினார்கள் என்பதால் இப்பெண்கள் அன்று ஓரளவுக்கு சமாளித்து தம் அழுத்தங்கள், மனமூட்டங்களில் இருந்து மெல்ல மீண்டு வந்தனர். ஆனால் இன்றைய தனித்த குடும்பங்களில் அவர்களுடைய வெறுப்பின் ஒரே இலக்காக கணவனும் குழந்தையும் மாறி விடுகிறார்கள். அதனாலே குழந்தை பிறந்த இரு வருடங்களுக்குள் நிறைய விவாகரத்துகள் நிகழ்கின்றன. 

இதற்கு ஒரு தீர்வு உண்டு: மனநல மருத்துவர்கள் தம்மிடம் வரும் பெண் நோயாளிகளில் சிறு குழந்தைகள் உள்ளவர்களைப் பற்றி அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து விட வேண்டும். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வரவில்லை என்றாலோ மன அழுத்தம் துவக்க நிலையில் இருந்து தீவிரமானதாக, மனச்சிதைவாக உருமாறுகிறது எனத் தெரிந்தாலோ உடனடியாக காவல் நிலையம் மூலம் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். விவாகரத்து வழக்குகளின் போதும் மனப்பிரச்சனை உள்ள தாய்மாருக்கு கஸ்டடி உரிமை கொடுக்கக் கூடாது.
நம் அரசும் நீதித்துறையும் விழித்துக் கொள்ளாதவரை இத்தகைய கொடுமைகள் நடந்தபடித்தான் இருக்கும்! என்னவொரு துயரம்.

இது சார்ந்து எனக்கு சில தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன. ஒருநாள் அவற்றை ஒரு நாவலில் சித்தரிப்பேன்.

 இனி குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் இக்காட்சி தான் என் மனதில் எழுதும். நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவேன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.