முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாய் வித் சித்ரா - எஸ்.ரா பேட்டி


கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய செண்டிமெண்ட், நிறைய சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள், அவதானிப்புகள் என கலவையான உரையாடல். 


எஸ்.ரா ரொம்ப கூர்மையான மனிதர். அதனாலே இலக்கியம், சினிமா குறித்த, குறிப்பாக narratology சார்ந்த அவரது அவதானிப்புகள் வெகுசிறப்பாக இருக்கும். ஆனால் தன் கட்டுரைகளில், உரைகளில் உணர்வுகளை


, சம்பவங்களை சித்தரித்த அளவுக்கு அவர் தன் அவதானிப்புகளை சொன்னதில்லை. சொல்லப் போனால் எஸ்.ரா எனும் தனிப்பட்ட மனிதரின் பார்வையை தவிர்த்து விட்டு எஸ்.ரா எனும் பயணி, எஸ்.ரா எனும் வாசகர், எஸ்.ரா எனும் கதைசொல்லி, எஸ்.ரா எனும் சினிமா ஆர்வலர் என பல்வேறு பாத்திரங்களாக மாறிப் பேசவே அவருக்கு ஆசை அதிகம். தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அந்த தனிமனிதர் சட்டென வெளிப்பட்டு தன் கருத்துக்களால், பார்வையால் நிறையவே அச்சரியப்படுத்துவார். 


ஒருமுறை - இந்த பேட்டியில் அவர் சொல்லுகிற - ஒரு ரூபா விசயத்தை தனிப்பேச்சில் குறிப்பிட்டார். நான் நீண்ட நாட்கள் அதை மறக்கவே இல்லை. இந்தியர்களின் பேச்சில், சிந்தனையில் இயல்பாகவே ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது என அவதானித்தார் அன்று. இன்னொரு முறை தான் கதை எழுத ஆரம்பித்த காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் சிறந்த கதைகளில் உள்ள வடிவத்தை உள்வாங்கி, சொற்களை எண்ணி, சொற்களின் அடுக்குமுறையை கவனித்த ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்ததாக சொன்னார். அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் ஒவ்வொரு சில மாதங்களும் திட்டமிட்டு குறிப்பிட்ட வகையான நூல்களைப் படிப்பது ஆச்சரியமூட்டும் மற்றொரு செயல். நான் ஒருமுறை அவருடைய வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த போது தன் நாட்காட்டியை காட்டி “நாளை 11 மணிக்கு அங்கு இருப்பேன், அடுத்த வாரம் அந்த நாள் இந்த வேலை பண்ணிக் கொண்டிருப்பேன்” என்று துல்லியமாக சொன்னார். தமிழில் எஸ்.ரா அளவுக்கு நாட்களை கச்சிதமாக திட்டமிட்டு கழிக்கிற மற்றொரு எழுத்தாளர் இல்லை எனத் தோன்றியது. என்னைப் போன்றவர்கள் நாளை காலை 10 மணிக்கு இதைச் செய்ய வேண்டும் என நாட்காட்டியில் குறித்து வைத்தால், மனம் “இதை கண்டிப்பா செய்யக் கூடாது” என பல்லைக்காட்டி இளித்துக் கொள்ளும். அடுத்தடுத்த நாட்களுக்கு இதையிதை செய்யலாம் என திட்டமிட்டால் நாட்காட்டி இருப்பதே மறந்து போகும். அன்று எஸ்.ரா பேசுவதை ஒரு குழந்தை ராணுவ வீரனைப் பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். 


இப்பேட்டியில் சித்ரா லஷ்மண் சுஜாதாவைப் பற்றி கேட்கிறார். அதற்கு எஸ்.ரா தனக்கு சுஜாதா மீது ஆரம்பத்தில் இருந்தே பெரிய ஈடுபாடோ வியப்போ இல்லை, அவருடைய சிறுகதைகளையும், கட்டுரைகளையுமே பொருட்படுத்தி ஓரளவு படித்திருக்கிறேன் எனச் சொல்கிறேன். ஆனால் பதிலை முடிக்கும் போது சுஜாதாவின் சிறந்த 100 படைப்புகளைத் தொகுத்து ஒரு நூலாக பிரசுரித்திருக்கிறேன் என்கிறார் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு. நான் அந்த நூலைப் படித்திருக்கிறேன் - அது முழுக்க சுஜாதாவை போற்றும் ஒரு எழுத்தாளர் மிகுந்த கவனத்துடன் தொகுத்ததைப் போன்றே இருக்கும். எந்த நூல் என்றாலும் தன் விருப்புவெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அது தன் வாழ்நாள் பணி என்பதைப் போல செய்யும் இயல்பு எஸ்.ராவுக்கு உண்டு. அவரை நம்பி ஒரு ஏவுகணையைக் கூட ஒப்படைக்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல அதை வானில் ஏவி விட்டு தான் மறுகாரியம் பார்ப்பார்.


பேட்டியில் நான் ரசித்த மற்றோரிடம் எஸ்.ரா திரைக்கதையை, அதன் நுணுக்கங்களை எளிமையாக விளக்கும் பகுதி. மற்றொன்று சென்னையில் காசில்லாமல் திரிந்த போது பாலத்தின் கீழ் தூங்கிய, நண்பர்களின் அறைகளில் தற்காலிகமாக தங்கிய தினங்களைப் பற்றி நினைவுகூருவது. அதில் அவர் சொல்லும் குப்பைத்தொட்டி சம்பவம் புக்காவஸ்கியின் Ham on Rye நாவலை நினைவுபடுத்தியது.


  பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...