முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணில் புரை விழுந்த உலகம்




கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு

உலகமே

கலங்கலான நீர்த்தொட்டிக்குள் இருந்து

ஒரு மீன் பார்ப்பதைப் போல இருக்கிறது


தான் போகும்

பாதைகளை அது

வாசனைகளால் மட்டுமே

வரையறுத்துக் கொண்டது


தரை, மிதியடி, நாற்காலி, முக்காலி, சக்கரநாற்காலி,

 வாஷிங்மெஷின், அலமாரி, 

நேராநேரத்துக்கு நிறைந்து அழைக்கும் சாப்பாட்டுக்கிண்ணம்,

 வாசல், வாசல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கதவு

இவ்வளவுக்கும் இடையில் நுணுக்கமாக

இழையும் பல பாதைகள்

நினைவின் வரைபடத்தால்

வரிசை வரிசையாக

செல்லும் எறும்புகளைப் போல

அதன் சிறிய பாதங்கள்

துல்லியமாக நடக்கின்றன


கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு

இந்த உலகமே

வாசனைகளும் சப்தங்களும் தான் என்றானது

அதற்கு எந்த வருத்தமும் இல்லை

அதை நெருக்கமாய் கவனிப்பவர்களுக்குக் கூட

அதன் உலகம் மாறிப்போனது

தெரியவில்லை


தினமும் காலையில் எழுந்ததும்

பால்கனிக் கதவை மூக்கால்

தொட்டுத்திறந்து

வெளிச்சமும் இதமான வெப்பமும் நிறைந்த

மூட்டமான உலகை

பார்வையிடுவது பழக்கத்தினாலே


கதவு திறக்கும் சப்தம்

உணவு சமிக்ஞைக்கான சப்தம்

வா போகலாம் எனும் சப்தம்

தன் பெயருக்கான சப்தம்

தொலைவில் ஏதோ ஒரு தெருமுக்கில் இருந்து

கூட்டுக்குரைப்பு

அண்மையில் ஏதோ ஒரு வீட்டிலிருந்து 

அழும் குழந்தை

வீட்டுக்குள் கடுமையாக

வாதிடும் இருவர்

தன் பெரிய தொங்கும் காதுகளால்

அது ஒவ்வொருவரையும்

ஒரு இடத்தில் வைத்திருக்கிறது

ஒருவேளை இடமாறி

இவர்கள் போனால் என்னாவது

என ஒரு பயம் அதற்கு உள்ளது

தினமும் எல்லாம் சரியாக 

அதனதன் இடத்தில் உள்ளதா

என சோதித்துக் கொள்கிறது


கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்

தனக்கு நேர்ந்த 

இரு அவமானங்களை

இங்கு பதிவு செய்ய விரும்புகிறது

ஒன்று, டிவிக்குள் ஓடும் 

குழப்பமான சலனங்களில் இருந்து

ஒரு பெரிய கரடி தோன்றியது -

அன்று வெகுநேரம் குலைத்த பின்

ஏதோ உறைக்க அது

மௌனமாகியது

மற்றொன்று, பிரியத்துக்குரியவர்

ஒரு பூங்காவின் மறுஎல்லையில் நின்றபடி

தன்னை அழைத்த போது

அதற்கு பெரியதொரு

கால வெற்றிடத்தில் இருந்து

தான் முதன்முதலாக வெளிப்பட்ட

நெகிழ்வான புழையின்

இருள் துளையில் இருந்து

தன் பெயரை

யாரோ அழைக்கும் சித்திரம் ஏற்பட்டது

“வா சீக்கிரம்”

அது திடுக்கிட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...