முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - சில கேள்விகளும் பதில்களும்



என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” நாவல் குறித்து உங்களுக்கு எழக் கூடிய சில கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை கீழே தருகிறேன்:


1) இது எம்மாதிரியான நாவல்?


இது ஒரு துப்பறியும் நாவல். பின்நவீன பாணியில் (வாசிப்புக்கு முடிந்தவரை இடைஞ்சல் இல்லாமல் சரளமாக) எழுத முயன்றிருக்கிறேன்.


2) இது துப்பறியும் நாவலா? இலக்கிய நாவலா?


 இந்நாவலின் உள்ளே நீங்கள் பயணிக்கும் போது அதற்கு வெளியே உள்ள கதைத்தளத்துக்கு அப்பால் இது மனிதனின் தன்னிலையானது எப்படியானது, நம்மை அறிவதில் நமக்குள்ள போராட்டம் என்ன என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறேன். ஆக இது வெறுமனே ஒரு மேலோட்டமான துப்பறியும் நாவல் அல்ல. என்னதான் ஒரு வெகுஜன வடிவத்தில் சங்கதிகளைக் கொண்டு சுவாரஸ்யமான கதையை இது சொன்னாலும், சற்று கவனித்து ஆழமாக படிக்க வேண்டிய இலக்கிய பிரதியாகவே இந்நாவல் இருக்கும்.


3) இது உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் எழுதப்படதா?


எல்லா துப்பறியும் நாவல்களிலும் பிரசித்தமான நிஜ வழக்குகளின் சாயல் இருக்கும். இந்நாவலிலும் அது உண்டு. ஆனால் இது ஒரு நிஜமாக நடந்த வழக்கை ஆவணப்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, நிஜத்தில் வெளிவராத உண்மைகளை என் கற்பனையைக் கொண்டு இந்நாவலில் வெளிச்சம் போட்டுக் கோட்ட, ஊடுருவிப் பயணிக்க முயன்றிருக்கிறேன். அதனால், என்னதான் அண்மையில் நடந்த ஒரு குற்ற வழக்கை இது நினைவுபடுத்தினாலும், இதை ஒரு கற்பனையான படைப்பாக வாசிப்பதே ஒரு நாவலாக இதற்கு நியாயம் சேர்க்கும்.


மற்றபடி முடித்து வைக்கப்பட்டும் இன்னும் முடிவுறாமல் சர்ச்சைகளில் சிக்கி பல திசைகளிலாய் கொழுந்து விட்டெரியும் சில வழக்குகளை இந்நாவல் நினைவுபடுத்தக் கூடாது, இதன் மூலம் யாரையும் புண்படுத்தவும் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் என் கை நான் சொல்வதையே கேட்காதே! என்ன செய்ய? 


4) இது துப்பறியும் நாவலா அல்லது பேய்க்கதையா?


இரண்டையும் கலந்த ஒரு வடிவத்தை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறேன். நாம் இத்தகைய கலவை வடிவத்தை வெகுஜன துப்பறியும் படங்களில் அதிகமாக பார்த்திருக்கிறோம். நான் அதை இலக்கிய வடிவில் முயன்றிருக்கிறேன். அதுவும் அச்சுறுத்தும் பேயாக இல்லாமல் அன்பான அழகான பேயாக காட்ட நினைத்தேன். பஷீரின் “நீல வெளிச்சத்தின்” பாணியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.