முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - சில கேள்விகளும் பதில்களும்



என்னுடைய “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” நாவல் குறித்து உங்களுக்கு எழக் கூடிய சில கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களை கீழே தருகிறேன்:


1) இது எம்மாதிரியான நாவல்?


இது ஒரு துப்பறியும் நாவல். பின்நவீன பாணியில் (வாசிப்புக்கு முடிந்தவரை இடைஞ்சல் இல்லாமல் சரளமாக) எழுத முயன்றிருக்கிறேன்.


2) இது துப்பறியும் நாவலா? இலக்கிய நாவலா?


 இந்நாவலின் உள்ளே நீங்கள் பயணிக்கும் போது அதற்கு வெளியே உள்ள கதைத்தளத்துக்கு அப்பால் இது மனிதனின் தன்னிலையானது எப்படியானது, நம்மை அறிவதில் நமக்குள்ள போராட்டம் என்ன என்பதைப் பற்றியும் பேசி இருக்கிறேன். ஆக இது வெறுமனே ஒரு மேலோட்டமான துப்பறியும் நாவல் அல்ல. என்னதான் ஒரு வெகுஜன வடிவத்தில் சங்கதிகளைக் கொண்டு சுவாரஸ்யமான கதையை இது சொன்னாலும், சற்று கவனித்து ஆழமாக படிக்க வேண்டிய இலக்கிய பிரதியாகவே இந்நாவல் இருக்கும்.


3) இது உண்மைச் சம்பவத்தின அடிப்படையில் எழுதப்படதா?


எல்லா துப்பறியும் நாவல்களிலும் பிரசித்தமான நிஜ வழக்குகளின் சாயல் இருக்கும். இந்நாவலிலும் அது உண்டு. ஆனால் இது ஒரு நிஜமாக நடந்த வழக்கை ஆவணப்படுத்தும் முயற்சி அல்ல. மாறாக, நிஜத்தில் வெளிவராத உண்மைகளை என் கற்பனையைக் கொண்டு இந்நாவலில் வெளிச்சம் போட்டுக் கோட்ட, ஊடுருவிப் பயணிக்க முயன்றிருக்கிறேன். அதனால், என்னதான் அண்மையில் நடந்த ஒரு குற்ற வழக்கை இது நினைவுபடுத்தினாலும், இதை ஒரு கற்பனையான படைப்பாக வாசிப்பதே ஒரு நாவலாக இதற்கு நியாயம் சேர்க்கும்.


மற்றபடி முடித்து வைக்கப்பட்டும் இன்னும் முடிவுறாமல் சர்ச்சைகளில் சிக்கி பல திசைகளிலாய் கொழுந்து விட்டெரியும் சில வழக்குகளை இந்நாவல் நினைவுபடுத்தக் கூடாது, இதன் மூலம் யாரையும் புண்படுத்தவும் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் என் கை நான் சொல்வதையே கேட்காதே! என்ன செய்ய? 


4) இது துப்பறியும் நாவலா அல்லது பேய்க்கதையா?


இரண்டையும் கலந்த ஒரு வடிவத்தை பரிசோதனை செய்து பார்த்திருக்கிறேன். நாம் இத்தகைய கலவை வடிவத்தை வெகுஜன துப்பறியும் படங்களில் அதிகமாக பார்த்திருக்கிறோம். நான் அதை இலக்கிய வடிவில் முயன்றிருக்கிறேன். அதுவும் அச்சுறுத்தும் பேயாக இல்லாமல் அன்பான அழகான பேயாக காட்ட நினைத்தேன். பஷீரின் “நீல வெளிச்சத்தின்” பாணியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...