Skip to main content

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!



இந்த ஆண்டு எனக்கு சற்று கூடுதல் தெளிவு மனிதர்களைப் பற்றி கிடைத்திருக்கிறது. அது என் வாசிப்பிலும் அனுபவத்திலும் இருந்து கிட்டியது.


 நாமே தேடிச் செல்லாவிட்டாலும் துன்பம் வரும் போது கூடவே உதவிக்கு நண்பர்களும் வருவார்கள் எனும் இதமான நம்பிக்கையும் கிடைத்தது. 


பெங்களூருக்கு வந்த பிறகு பலவிதமான நண்பர்களை, வாசகர்களை, மனிதர்களை சந்தித்து அளவளாவுவது வெகுவாக குறைந்து போனாலும் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பாக தத்துவத்திலும் இலக்கியத்திலும். அந்த விதத்தில் மகிழ்ச்சி. புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது எப்போதும் தித்திப்பானது அல்லவா! கூடவே ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக பகுப்பாய்வு செய்ய தத்துவ வாசிப்பு உதவியுள்ளது. இலக்கியத்தில் ஐரோப்பிய, அமெரிக்க, பின்நவீன இலக்கியம் நோக்கி கவனத்தை செலுத்தினேன். இதை அடுத்து, கதைத்தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வாசித்தேன், சிந்தித்தேன்; இயன்றால் அடுத்த வருடத்திற்குள் நாவல், திரைக்கதை ஆகிய வடிவங்களின் கதைத்தொழில் நுட்பத்தை விளக்குகிற புத்தகங்களை எழுதுவேன். அதே போல 2022-23 ஆண்டுகளில், அமெரிக்க பல்கலைகளில் உள்ள BFA in Creative Writing பாணியில் நாவல், சிறுகதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதப் பயிற்சியளிக்கும் பாடத்திட்டங்களை உருவாக்கி (கல்லூரியில்) கற்பிக்கும் திட்டமும் உள்ளது.


 இதுவரை உணர்ச்சிகரமாகவும், கருத்து, மனவோட்டம் சார்ந்தும் மட்டுமே கதைகளைப் பார்த்து வந்த எனக்கு இப்படி புறவயமாக பார்ப்பது, பரிசீலிப்பது ஜாலியாக இருக்கிறது. கதைகளை வடிவம் சார்ந்து புரிந்து கொள்ளும், திட்டமிடும் திறனை இது எனக்கு அளித்துள்ளது. நான் எழுதிக் கைவிட்ட நாவல்களில் செய்த தவறுகள் என்ன, எழுதி வரும் நாவலில் செய்ய வேண்டிய திருத்தங்கள் என்னவென யோசிக்கிற பக்குவம் கிடைத்திருக்கிறது.


பெங்களூருக்கு வந்த பின்னர் முன்பை விட அதிகமாக எழுதி இருக்கிறேன். விசித்திரமாக, வாழ்க்கையில் குறைவான மகிழ்ச்சியுடன், அதிருப்தியுடன், அதிக தனிமையில் இருந்தாலும் என் வாசிப்பு, எழுத்து செயல்பாடுகள் மேம்பட்டிருக்கின்றன.


இந்த வருடம் லாக் டவுன் காரணமாகவும், உடலை கவனிப்பதில் அக்கறை காட்டாததாலும் நிறைய எடை போட்டு விட்டேன். இப்போது எழுதி வரும் நாவலை முடித்து விட்டு உடலை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். 


இந்த வருட துவக்கத்தில் வாழ்வதில் சற்றும் அக்கறை இல்லாமல் இருந்தேன். எழுத்து மட்டுமே என்னை தொடர்ந்து செலுத்தியது. அந்த அவநம்பிக்கை சட்டென ஒரு நாள் போய் விட்டது. நம்பிக்கைகளின் ஊற்று பெருகியது. எல்லாம் ஷண நேரத்தில் தோன்றி மறைவது எனக் கற்றுக் கொண்டேன். அந்தந்த நேரத்தில் எப்படி ஒன்றிருக்கிறதோ அதைத் தாண்டி அதற்கு மதிப்போ நீடிக்கிற தன்மையோ இல்லை எனப் புரிந்து கொண்டேன். சுதந்திரம் என்பது அன்றன்றைக்குள், அந்தந்த மணிப்பொழுதுகளுக்குள் புழங்குவது மட்டுமே.


எதிர்காலம் குறித்து கனவு காணலாம். ஆனால் அது ஒரு கிளுகிளுப்பாக ஆறுதலுக்காக மட்டுமே. நம்மால் செய்ய முடிவதெல்லாம் அன்றாடத்தை அர்த்தபூர்வமாக வைத்துக் கொள்வது மட்டுமே. அதுவே நாமும் நம்மைச் சுற்றியுள்ளோரும் சமூகமும் உருவாக்கித் தரும் சட்டகத்தினுள் இருந்தபடி, தரப்பட்ட பாத்திரத்துக்குள் சரியாக நடித்தபடி மட்டுமே சாத்தியம்.


 இந்த உலகம் ஒரு மிகப்பெரிய புனைவு என்றால் அதனுள் சின்னச் சின்ன கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்து சரிவர பொருந்திக் கொள்வது மட்டுமே நம்மால் செய்ய முடிந்தது. அப்போதும் கதை என்ன, அதன் அமைப்பு, போக்கு, எந்த கடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொண்டு இயங்கினால், நமதான ஒரு அர்த்தத்தை அதற்கு கொடுக்கவும் முடிந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட நடிப்பவரோ காட்சியை அமைப்பவரோ சொதப்பினால் கூட நாம் மேடைக்கு வெளியே தூக்கி வீசப்படுவோம். அப்போது மற்றொரு கதையை நாடிச் சென்று விட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு உட்பட்ட நிகழ்த்து கலை எனும் புரிதல் அவசியம் என நினைக்கிறேன். 

இதைத் தாண்டி எவருக்கும், எதற்கும் மதிப்பில்லை.

இது நான் கண்டடைந்த மற்றொரு புரிதல். 


வரும் ஆண்டும் நமக்கு சிறப்பாக அமையட்டும். கொண்டாடுவோம்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...