முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியின் அதிர்ச்சி முடிவும் அடுத்தது யாரெனும் கேள்வியும்

விராத் கோலி ஒரு மகத்தான டெஸ்ட் தலைவர். டெஸ்ட் அணித்தலைமையில் இருந்து விலகுவதாக அவர் எடுத்திருக்கிற இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது! ஒரு விதத்தில் இதற்கு ஜெய் ஷா உள்ளிட்ட மோசமான நிர்வாகிகள் தாம் பொறுப்பேற்க வேண்டும்.

கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என நான் நம்பவில்லை ஆகையால் அடுத்த தலைவர் யாரென தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். ரோஹித் அடிக்கடி காயம்பெற்று காணாமல் போய் விடுவதால் அவரை அனைத்து வடிவங்களுக்கும் தலைவராக்குவது சமயோஜிதமான முடிவு அல்ல. 

அதே நேரம் கெ.எல் ராகுலின் அணித்தலைமையும் என்க்குப் பிடிக்கவில்லை. ராகுல் இன்ஸமாம் உல் ஹக்கைப் போன்றவர். சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இயல்பான தலைமைப் பண்போ, நடைமுறை புத்திசாலித்தனமோ அனைவரிடமும் நன்றாகப் பேசி உற்சாகப்படுத்தும் இயல்பு கொண்டவரோ அல்ல. அவர் திட்டமிடுதலில் மக்கு என்பதை ஐ.பி.எல்லில் கண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் தலைமை ஏற்ற போது அவருக்கு அணியை தன் சொல்லுக்கு ஏற்ப வழிநடத்தும் ஆளுமையோ சந்தர்பத்துக்கு ஏற்ப யுக்தி வகுக்கும் தந்திரமோ இல்லை எனக் கண்டோம். அவருடைய தலைமை ஸ்டைல் இங்கிலாந்தின் ரூட்டைப் போன்றது. ரூட் எவ்வளவு மட்டமான தலைவர் என நமக்குத் தெரியும். ஒரு தலைவர் தோல்வியை தவிர்க்க நினைக்கலாம், ஆனால் சதா தோல்வியை எண்ணி பயந்தபடி களத்தடுப்பை அமைப்பது மோசமானது. ராகுலை நம்பி அணியை ஒப்படைப்பது நிம்மி அக்காவை நிதியமைச்சராக்கியதைப் போன்றது. 

ராகுலை மறந்து விட்டு ரிஷப் பண்டை ஒருநாள் வடிவில் துணைத் தலைவராக்க வேண்டும். ரிஷப் வியூகம் வகுப்பதில் திறமையானவர் அல்ல, ஆனால் அணியிடம் சரியாக தன் முடிவுகளைக் கொண்டு சென்று அனைவரிடமும் கலகலப்பாக பழகி உற்சாகப்படுத்த அறிந்தவர். ராகுல் ஒரு introvert என்றால் ரிஷப் ஒரு extrovert. தலைவர்களைப் பொறுத்தமட்டில் extrovertகளே தோதானவர்கள்.

டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினையோ பும்ராவையோ தலைவராக்கலாம். இருவரில் அஷ்வினே மேலானவர் என்றாலும் அணிக்குள் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவிருக்கும் எனத் தெரியவில்லை. பொதுவாகவே தமிழர்களை இந்திய அணி நேசிப்பதில்லை. அதுவும் வாயாடித் தமிழர்களை. மற்றொரு சிக்கல் அஷ்வினால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆட முடியும் என்பது.

ரோஹித் இப்போதைக்கு ஒருநாள் வடிவில் மட்டும் தலைமை தாங்கி சாதிக்கும் பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் அவர் குறைவாக ஆடி ஒருநாள் வடிவில் அதிகம் ஆட வைத்தால், அவரது உடற்தகுதி மேம்படும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...