Skip to main content

ஒரு விருப்பம்


உலகில் நான் கடுமையாக வெறுக்கக் கூடியது மோசமான வேலையோ, காதல் முறிவோ, வியாதியோ, மரணமோ அல்ல. அது பயணம்.

 ஏனென்றால் என்னிடம் கார் இல்லை. நான் சென்னைக்கோ அதைப் போன்ற பிற இடங்களுக்கோ பயணத்திற்கு பேருந்துகளையே நம்பி இருக்கிறேன். ரயில் நிலையம் என் வீட்டில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறது. அதில் டிக்கெட் எடுப்பதற்கும் நீண்ட  நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டும். அப்படியே கிடைத்து விட்டாலும் ரயில் நிலையத்தில் நிறைய சிரமப்படே என் வண்டி நிற்கும் இடத்திற்கு நான் போக முடியும். அந்த வழியில் படிக்கடுகள் உள்ளிட்ட பல தடைகள் இருக்கும். விமானம் என்றால் அதன் கட்டணத்திலே என் பாதி சம்பளம் போய் விடும் என்பதால் சாத்தியமில்லை.


 இந்த பேருந்துகள் விசித்திரமாக அமைக்கப்பட்டவை - பெரிய உயரமான படிக்கட்டுகளைக் கொண்டவை. என்னால் ஒரு எட்டில் ஒரு படிக்கட்டில் ஏற முடியாது. நான் பெரும்பாலும் உட்கார்ந்து உட்கார்ந்து ஊர்ந்து தான் ஏற வேண்டும். அதுவும் படிக்கட்டு முடிந்து பேருந்தின் உள்வாயில் இருக்கிறதே அப்பகுதியை சற்று வளைவாக குறுகலாக வைத்திருக்கிறார்கள். அங்கு நான் ஒரு காலில் நின்று ஒரு கையால் பேருந்தின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி நின்று தொங்கியபடி சாகசம் புரிந்து தான் ஏற முடியும். இது நடக்கையில் பேருந்து வேறு அசைந்தபடி இருக்குமா என விழுந்து இன்னொரு காலும் உடைந்திடுமா என பயமாக இருக்கும். இவ்வளவு முடிந்து உள்ளே போனால் ஸ்லீப்பர் படுக்கைகள் தாழ்வாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் இடையே அந்த இடத்தை அடைந்து உட்காருமுன் உயிர் போய் உயிர் வருவது போலிருக்கும். இறங்குவது இதை ஒத்த சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் உணவுக்காகவும் சிறுநீர் கழிப்பதற்கும் நிறுத்தும் போது நான் இறங்க மாட்டேன். மூத்திரத்தையும் பிற அவதிகளையும் பொறுத்துக் கொண்டு கிடப்பேன்.


 ஒருநாள் விடிகாலையில் நான் தனியாக சென்னைக்கு வர நேர்ந்தது. அன்று எனக்கு ரத்த சர்க்கரை அளவுக்கு ஐம்பதுக்கு கீழே குறைந்து விட்டது. பேருந்துக்காரர்கள்உங்க இடம் வந்திருச்சுஎன எழுப்பி விட்ட போது நான் hypoglycaemia ஏற்படுத்திய அரை-பிரக்ஞையில் இருந்தேன். ஒன்றுமே புரியாமல் அதே போல ஊர்ந்து சிரமப்பட்டு இறங்கி என் காலிப்பரின் முட்டியில் உள்ள லாக்கைப் போடும் போது கவனமற்று இருந்து விட்டேன். நான் சில அடிகள் தான் நடந்திருப்பேன். என் காலிப்பர் உடைந்து விட்டது. ஒரு வாடித் தளர்ந்த மாலையில் இருந்து காய்ந்த மலர்கள் உதிர்வதைப் போல நான் குலைந்து விழுந்து போனேன். என் காலிப்பரின் கம்பிகள் முடிச்சுப் போட்ட கயிறைப் போல நெளிந்து கிடக்கிறது. அதில் இருந்து என் காலை விடுவிக்கவும் சிரமப்பட்டேன். நல்ல வேளை அன்று என்னை அழைத்துப் போக எழுத்தாளர் தமயந்தியும் நண்பர்கள் தினேஷும் வளனும் இருந்தார்கள். அதனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அப்படியே சாலையில் கிடந்திருப்பேன். நல்லவேளை, அன்று என் கால் உடைய வில்லை. என்னைப் போன்றோருக்கு எலும்புகள் osteoporatic ஆக இருக்கும் என்பதால் சிறிய கீறல் விழுந்தாலே குணமாக ஆறு மாதங்கள் ஆகும், உடைந்தால் ஒரு வருடத்திற்கு மேல் நான் படுத்த படுக்கைதான், என் எல்லா வேலைகளும் முடங்கிப் போகும்.


போராட்டம் இத்துடன் முடிவதில்லை. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நான் பல வாகனங்களில் ஏறி இறங்கியாக வேண்டும். தங்கும் இடங்களில் உள்ள படிக்கட்டுகளில் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். இன்னொரு பிரச்சனை ஒரு முறை நெடிய பயணம் மேற்கொண்டால் அதன் மோசமான தாக்கம் என் உடல்நிலையில் இருந்து மறைய ஐந்து நாட்களாவது பிடிக்கிறது என்பது. இதனால் நான் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் வேலையும் நின்று போகிறது.


 இந்த விவாகரத்து வழக்கு ஆரம்பித்த பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் நான் இந்த அவலங்களை அனுபவித்து வருகிறேன். இதில் என்ன கொடுமை என்றால் இதை நான் யாரிடம் நேரில் கூறினாலும் அவர்களுக்கு என் பிரச்சனை சுத்தமாகப் புரியவில்லை என்பது. மக்களிடம் இன்று வெகுவாக அடுத்தவர் துன்பத்தை தமதாக உணரும் empathy எனும் திறன் குறைந்து வருகிறது. “தான் தான்என மக்கள் சுயஆட்கொள்ளலில் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் எதைப் பற்றியும் யோசிக்க முடியாதபடி வேலை அழுத்தத்தில் இருக்கிறார்கள் அல்லது அடுத்தவர்களுடைய இன்பங்களில் மட்டுமே பங்குபெற வேண்டும், துன்பங்களில் அல்ல எனும் மனநிலையில் இருக்கிறார்கள். என்னுடைய அம்மாவிடம் ஒருமுறை இந்த அவதிகளைப் பற்றி நான் கூறிய போது அவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என சுத்தமாகப் புரியவில்லை. ஒரு துளி கண்ணீர் இல்லை, வருத்தம் இல்லை, அவருக்கே இல்லை என்றால் நான் வேறு யாரிடம் எதிர்பார்க்க முடியும்? நியாயமாக வழக்காடு மன்றங்கள் என்னைப் போன்ற ஒருவரை ஒவ்வொரு முறையும் பஸ்ஸைப் பிடிந்து உருண்டு புரண்டு எப்பாடு பட்டேனும் வந்து முகம் காட்டு என்று கேட்கக் கூடாது. இணையவழி ஆஜராக வசதியை அனுமதிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஊனமுற்றோரிடத்து கரிசனம் கொண்ட சட்டம் இல்லை. ரெண்டு கையும் காலும் இல்லாவிட்டாலும் நீங்க சட்டத்தின் முன்சமம்அல்லவா?



 ஆனால் வாசிக்கையில் உங்களுக்கு நிச்சயம் எனது அனுபவம் கடத்தப்படும் என நம்புகிறேன், அதனாலே எழுதுகிறேன்.


என்னுடைய விருப்பமெல்லாம் ஒன்று தான் - என்னை இப்படி வருடக்கணக்காக சித்திரவதைக்கு ஆட்படுத்துகிறவர்களுக்கு கடும் துன்பங்கள், இழப்புகள் ஒருநாள் வர வேண்டும், அதை நான் பார்க்க வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...