முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்பியார்



நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது. ஏனென்றால் அது தனித்துவமானதுதனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார். அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்துஜெண்டில்மேன்வரை கவனிக்கையில் புரிகிறது. எம்.ஜி.ஆர் தனதுநான் ஏன் பிறந்தேன்?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை.


  1. நம்பியார் நாடக மேடையிலோ, படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை, மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார். இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார். இது ஏன் என்று யோசித்தேன். எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான். இன்று காலையில் என்னுடைய நாய் சட்டென தலையை முழுமையாக என்னை நோக்கித் திருப்பி கொட்டாவி விட்டது போது புரிந்தது - அப்படி முழுமையாக 180 கோணத்தில் உடலைத் திருப்பிப் பார்ப்பது மிருகங்களின் குணம். ஒரு புலி நம்மை நேராகப் பார்ப்பதை விட சட்டெனத் திரும்பி அவ்வாறு நோக்கினால் அதிர்ந்து உறைந்து போவோம். நம்பியார் மெதுவாக இடுப்பில் இருந்து திரும்பி நோக்கும் போதெல்லாம் நம் உபமனத்துக்கு ஒரு இரைகொல்லியைப் போல தொனிக்கிறார். இதைத் தெரிந்தோ தெரியாமலோ அவர் பண்ணிப் பார்த்து தன் பாணியாக வளர்த்திருக்கலாம். இந்த பாணியை பின்னர் சிறப்பாக பயன்படுத்திய நவீன நடிகர் ரஜினிகாந்த். . ராமசாமி சொல்வதைப் போல ரஜினியும் விலங்குகளின் உடல்மொழியை தன் உடல்மொழியில் கொணர்ந்து நடிக்கிறவரே.
  2. நம்பியாரால் சட்டென தன் குரலை மென்மையில் இருந்து கடுமையான ஒன்றாக மாற்றி பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். .தா., “ஜெண்டில்மேன்படத்தில் நம்பியார் ஒரு மென்மையான, கனிவாக நபராக தன் குரலைக் கொண்டே நடித்துதோற்றமளிப்பார்’. ஆனால்எங்க வீட்டுப் பிள்ளையில்அவரது குரலின் கடுமை வேறாக இருக்கும். இந்த பாணியை அந்த கால நாடக, சினிமா நடிகர்கள் பின்பற்ற முயன்றனர், ஆனால் யாராலும் நம்பியார் அளவுக்கு குரலின் கடுமையை, அளவை சரளமாக மாற்றி மனவியல்பை வெளிப்படுத்த முடியவில்லை என்கிறார் எம்.ஜி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.