முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்பியார்



நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது. ஏனென்றால் அது தனித்துவமானதுதனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார். அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்துஜெண்டில்மேன்வரை கவனிக்கையில் புரிகிறது. எம்.ஜி.ஆர் தனதுநான் ஏன் பிறந்தேன்?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை.


  1. நம்பியார் நாடக மேடையிலோ, படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை, மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார். இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார். இது ஏன் என்று யோசித்தேன். எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான். இன்று காலையில் என்னுடைய நாய் சட்டென தலையை முழுமையாக என்னை நோக்கித் திருப்பி கொட்டாவி விட்டது போது புரிந்தது - அப்படி முழுமையாக 180 கோணத்தில் உடலைத் திருப்பிப் பார்ப்பது மிருகங்களின் குணம். ஒரு புலி நம்மை நேராகப் பார்ப்பதை விட சட்டெனத் திரும்பி அவ்வாறு நோக்கினால் அதிர்ந்து உறைந்து போவோம். நம்பியார் மெதுவாக இடுப்பில் இருந்து திரும்பி நோக்கும் போதெல்லாம் நம் உபமனத்துக்கு ஒரு இரைகொல்லியைப் போல தொனிக்கிறார். இதைத் தெரிந்தோ தெரியாமலோ அவர் பண்ணிப் பார்த்து தன் பாணியாக வளர்த்திருக்கலாம். இந்த பாணியை பின்னர் சிறப்பாக பயன்படுத்திய நவீன நடிகர் ரஜினிகாந்த். . ராமசாமி சொல்வதைப் போல ரஜினியும் விலங்குகளின் உடல்மொழியை தன் உடல்மொழியில் கொணர்ந்து நடிக்கிறவரே.
  2. நம்பியாரால் சட்டென தன் குரலை மென்மையில் இருந்து கடுமையான ஒன்றாக மாற்றி பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். .தா., “ஜெண்டில்மேன்படத்தில் நம்பியார் ஒரு மென்மையான, கனிவாக நபராக தன் குரலைக் கொண்டே நடித்துதோற்றமளிப்பார்’. ஆனால்எங்க வீட்டுப் பிள்ளையில்அவரது குரலின் கடுமை வேறாக இருக்கும். இந்த பாணியை அந்த கால நாடக, சினிமா நடிகர்கள் பின்பற்ற முயன்றனர், ஆனால் யாராலும் நம்பியார் அளவுக்கு குரலின் கடுமையை, அளவை சரளமாக மாற்றி மனவியல்பை வெளிப்படுத்த முடியவில்லை என்கிறார் எம்.ஜி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...