முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம்பியார்



நம்பியாரின் உடல்மொழியும் குரலும் மிகிக்றி கலைஞர்களால் அவ்வப்போது பகடி செய்யப்படுவது. ஏனென்றால் அது தனித்துவமானதுதனது பாணியை திரும்பத் திரும்ப போலச்செய்து தேய்வழக்காக்கினார். அதே நேரம் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை அவரது கறுப்பு காலத்துப் படங்களில் இருந்துஜெண்டில்மேன்வரை கவனிக்கையில் புரிகிறது. எம்.ஜி.ஆர் தனதுநான் ஏன் பிறந்தேன்?” நூலின் இரண்டாம் பாகத்தில் நம்பியார் பற்றி சில சுவாரஸ்யமான கதைகளை பகிர்ந்து கொள்கிறார். அவற்றில் இரண்டு அவதானிப்புகள் முக்கியமானவை.


  1. நம்பியார் நாடக மேடையிலோ, படக்காட்சியிலோ ஒரு பாத்திரத்தைத் திரும்பி நோக்கும் போது கழுத்தை மட்டும் திருப்புவதில்லை, மொத்த உடலையும் இடுப்பில் இருந்து திருப்பிப் பார்ப்பார். இது வேறு நடிகர்கள் செய்யாதது என்பதுடன் இது அவரது பாத்திரத்தின் தீமையான இயல்பை சித்தரிக்க உதவியது என்கிறார். இது ஏன் என்று யோசித்தேன். எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் சொல்வதில் உண்மையும் உண்டு தான். இன்று காலையில் என்னுடைய நாய் சட்டென தலையை முழுமையாக என்னை நோக்கித் திருப்பி கொட்டாவி விட்டது போது புரிந்தது - அப்படி முழுமையாக 180 கோணத்தில் உடலைத் திருப்பிப் பார்ப்பது மிருகங்களின் குணம். ஒரு புலி நம்மை நேராகப் பார்ப்பதை விட சட்டெனத் திரும்பி அவ்வாறு நோக்கினால் அதிர்ந்து உறைந்து போவோம். நம்பியார் மெதுவாக இடுப்பில் இருந்து திரும்பி நோக்கும் போதெல்லாம் நம் உபமனத்துக்கு ஒரு இரைகொல்லியைப் போல தொனிக்கிறார். இதைத் தெரிந்தோ தெரியாமலோ அவர் பண்ணிப் பார்த்து தன் பாணியாக வளர்த்திருக்கலாம். இந்த பாணியை பின்னர் சிறப்பாக பயன்படுத்திய நவீன நடிகர் ரஜினிகாந்த். . ராமசாமி சொல்வதைப் போல ரஜினியும் விலங்குகளின் உடல்மொழியை தன் உடல்மொழியில் கொணர்ந்து நடிக்கிறவரே.
  2. நம்பியாரால் சட்டென தன் குரலை மென்மையில் இருந்து கடுமையான ஒன்றாக மாற்றி பார்வையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் எம்.ஜி.ஆர். .தா., “ஜெண்டில்மேன்படத்தில் நம்பியார் ஒரு மென்மையான, கனிவாக நபராக தன் குரலைக் கொண்டே நடித்துதோற்றமளிப்பார்’. ஆனால்எங்க வீட்டுப் பிள்ளையில்அவரது குரலின் கடுமை வேறாக இருக்கும். இந்த பாணியை அந்த கால நாடக, சினிமா நடிகர்கள் பின்பற்ற முயன்றனர், ஆனால் யாராலும் நம்பியார் அளவுக்கு குரலின் கடுமையை, அளவை சரளமாக மாற்றி மனவியல்பை வெளிப்படுத்த முடியவில்லை என்கிறார் எம்.ஜி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...