முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்கமாக இல்லையா?




இளையராஜாவுக்கு எதிராகப் பேசுவோரின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரம் ரஜினியும் கமலும் ஓட்டுபிரிக்கும் அரசியலில் கடந்த ஆண்டு முழுக்க ஈடுபட்ட போது, பாஜகவின் நேரடி, மறைமுக பிரச்சார படைகளாக அவர்கள் செயல்பட்ட போது அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள், ஆனால் எந்த பத்திரிகையாளரும் அரசியல்வாதியும்நீ”, “வா”, “போஎன ஒருமையில் அவர்களை அழைத்து சாடவில்லை. ஆனால் இளையராஜா என்றதும் சவுக்கு சங்கர், பத்திரிகையாளர் மணியில் இருந்து .வி.கி.எஸ் இளங்கோவன் வரை பொதுமேடை மாண்பின்றி அவரை ஒருமையில் அழைத்து ஏசுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது? கேட்டால்தார்மீகக் கோபம்”, “இது தான் தமிழக மேடைக் கலாச்சாரம்என சமாளிக்க வேண்டியது? நம்மிடையே எவ்வளவு சாக்கடைகள் ஓடுகின்றன என கண்டுகொண்ட தருணமாக இது அமைந்து விட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.


மணியின் பேட்டி சற்று வேடிக்கையாகவே இருந்தது - “மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கு இளையராஜாவுக்கு அத்தனை உரிமைகளும் உண்டு. ஆனால் அவரை கடுமையாக விமர்சிக்க இந்த மாநில மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டுஎன்று திரும்பத் திரும்ப கூறுகிறார். இதில் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? “அவனைக் கத்தியால் குத்துவதற்கு உனக்கு அத்தனை உரிமைகளும் உண்டு, ஆனால் அவனது ஆதரவாளர்களுக்கு உன்னையும் கத்தியால் குத்தவும் அத்தனை உரிமைகளும் உண்டுஎனக் கூறுவதைப் போலிருக்கிறது


ராஜா-மோடி சர்ச்சை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரு பைத்தியக்கார விடுதியாகி விட்டது என நினைக்கிறேன். ராஜா அந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கக் கூடாது தான், ஆனால் நமக்கு உடன்பாடில்லாத காரியத்தை அவர் செய்தால் அதற்கு எதிர்வினையாற்ற ஒரு முறைமை, நாகரிகம், கண்ணியம் வேண்டும்


இப்போது நடப்பது ராஜாவை யார் சொந்தம் கொண்டாடுவது எனும் பிரச்சனையே. அவர் எந்த சொந்த கருத்தையும் நமக்கு எதிராக கொண்டிருக்கக் கூடாது, அவரது நடத்தை மீது நமக்கு முழு கட்டுப்பாடும் வேண்டும், இல்லையென்றால் கடுமையாக சாடி அவரை அவமதிப்போம், கடும் சமூக அழுத்தத்தை செலுத்துவோம் என மிரட்டுகிறோம். யோசித்துப் பாருங்கள் - நமக்கு இணையாக நாம் கருதுபவர்களை இப்படி செய்வோமா? இல்லை. இதுவரை குழந்தைகள், பெண்களையே இப்படி நடத்துவது நமதுமரபு’. நாம் ஒருவரை நேசிக்கையில் அவர் நமக்கு இணையான தனிமனிதர் எனும் கோணத்திலே நேசிக்க வேண்டும். ஆனால் ராஜாவை அப்படி இணைவைக்க நாம் விரும்புவதே இல்லை. ஒன்று அவரை நமக்கு கீழாக எண்ணி காறித் துப்புகிறோம் அல்லது தலைக்கு மேல் தூக்கி வைத்து தெய்வமென கொண்டாடுகிறோம். இதை இரண்டையும் நாம் ராஜாவுக்கு மாறி மாறி செய்திருக்கிறோம். இரண்டையும் செய்வதன் நோக்கமே சமத்துவம் தர மாட்டோம் என்பதால் தானே? ஒரு பெண்ணை வேசி என்றும், தெய்வம் என்றும் ஒரே சமயம் அழைப்பது போலல்லவா இது? அவர் மீது இத்தனை உரிமைகளை நமக்கு தந்தது யார்? அவர் தந்தாரா? இல்லையே.


ராஜாவின் சாதியை அவருக்கான கவசமாக நான் இங்கு கொண்டு வருகிறேன் என நீங்கள் கருத வேண்டாம். அது என் நோக்கமல்ல. நாம் தாழ்வாக நினைக்கும் பலருக்கும் இதே நடைமுறையைத் தான் வைத்திருக்கிறோம் என்கிறேன். நாம் ஏற்றுக் கொள்ளாத அரசியலைக் கொண்ட எழுத்தாளர்களையும் இவ்வாறே நடத்துகிறோம். ஆனால் ஜெயலலிதாவை ஒருவரும் பேஸ்புக்கிலோ பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களிலோ ஒருமையில் பேசி கடந்த இரு பத்தாண்டுகளில் நான் கண்டதில்லை. ஆனால் பிற நடிகைகள் அப்படி பேசப்பட்டு பார்த்திருக்கிறேன். இந்த வித்தியாசம் தான் நமது பிரச்சனை என்கிறேன். நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை விரும்பும் ஒரு மனம் இந்த சந்தர்பங்களில் எல்லாம் விழித்துக் கொள்கிறது. சாதியம் இதில் ஒரு பகுதி. சும்மா சும்மா சமூகநீதியை விரும்பும் மாநிலம் என கதறிக் கொண்டிருந்தால் போதாது, அதை நடைமுறையிலும் காட்ட வேண்டும்


 இந்த சர்ச்சையின் முடிவில் நாம் இழிவானவர்களாக எஞ்சியிருக்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.