முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்கமாக இல்லையா?




இளையராஜாவுக்கு எதிராகப் பேசுவோரின் கோபத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதே நேரம் ரஜினியும் கமலும் ஓட்டுபிரிக்கும் அரசியலில் கடந்த ஆண்டு முழுக்க ஈடுபட்ட போது, பாஜகவின் நேரடி, மறைமுக பிரச்சார படைகளாக அவர்கள் செயல்பட்ட போது அவர்களும் விமர்சிக்கப்பட்டார்கள், ஆனால் எந்த பத்திரிகையாளரும் அரசியல்வாதியும்நீ”, “வா”, “போஎன ஒருமையில் அவர்களை அழைத்து சாடவில்லை. ஆனால் இளையராஜா என்றதும் சவுக்கு சங்கர், பத்திரிகையாளர் மணியில் இருந்து .வி.கி.எஸ் இளங்கோவன் வரை பொதுமேடை மாண்பின்றி அவரை ஒருமையில் அழைத்து ஏசுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது? கேட்டால்தார்மீகக் கோபம்”, “இது தான் தமிழக மேடைக் கலாச்சாரம்என சமாளிக்க வேண்டியது? நம்மிடையே எவ்வளவு சாக்கடைகள் ஓடுகின்றன என கண்டுகொண்ட தருணமாக இது அமைந்து விட்டது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.


மணியின் பேட்டி சற்று வேடிக்கையாகவே இருந்தது - “மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கு இளையராஜாவுக்கு அத்தனை உரிமைகளும் உண்டு. ஆனால் அவரை கடுமையாக விமர்சிக்க இந்த மாநில மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டுஎன்று திரும்பத் திரும்ப கூறுகிறார். இதில் ஏதாவது தர்க்கம் இருக்கிறதா? “அவனைக் கத்தியால் குத்துவதற்கு உனக்கு அத்தனை உரிமைகளும் உண்டு, ஆனால் அவனது ஆதரவாளர்களுக்கு உன்னையும் கத்தியால் குத்தவும் அத்தனை உரிமைகளும் உண்டுஎனக் கூறுவதைப் போலிருக்கிறது


ராஜா-மோடி சர்ச்சை ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் ஒட்டுமொத்தமாக ஒரு பைத்தியக்கார விடுதியாகி விட்டது என நினைக்கிறேன். ராஜா அந்த நூலுக்கு முன்னுரை வழங்கி இருக்கக் கூடாது தான், ஆனால் நமக்கு உடன்பாடில்லாத காரியத்தை அவர் செய்தால் அதற்கு எதிர்வினையாற்ற ஒரு முறைமை, நாகரிகம், கண்ணியம் வேண்டும்


இப்போது நடப்பது ராஜாவை யார் சொந்தம் கொண்டாடுவது எனும் பிரச்சனையே. அவர் எந்த சொந்த கருத்தையும் நமக்கு எதிராக கொண்டிருக்கக் கூடாது, அவரது நடத்தை மீது நமக்கு முழு கட்டுப்பாடும் வேண்டும், இல்லையென்றால் கடுமையாக சாடி அவரை அவமதிப்போம், கடும் சமூக அழுத்தத்தை செலுத்துவோம் என மிரட்டுகிறோம். யோசித்துப் பாருங்கள் - நமக்கு இணையாக நாம் கருதுபவர்களை இப்படி செய்வோமா? இல்லை. இதுவரை குழந்தைகள், பெண்களையே இப்படி நடத்துவது நமதுமரபு’. நாம் ஒருவரை நேசிக்கையில் அவர் நமக்கு இணையான தனிமனிதர் எனும் கோணத்திலே நேசிக்க வேண்டும். ஆனால் ராஜாவை அப்படி இணைவைக்க நாம் விரும்புவதே இல்லை. ஒன்று அவரை நமக்கு கீழாக எண்ணி காறித் துப்புகிறோம் அல்லது தலைக்கு மேல் தூக்கி வைத்து தெய்வமென கொண்டாடுகிறோம். இதை இரண்டையும் நாம் ராஜாவுக்கு மாறி மாறி செய்திருக்கிறோம். இரண்டையும் செய்வதன் நோக்கமே சமத்துவம் தர மாட்டோம் என்பதால் தானே? ஒரு பெண்ணை வேசி என்றும், தெய்வம் என்றும் ஒரே சமயம் அழைப்பது போலல்லவா இது? அவர் மீது இத்தனை உரிமைகளை நமக்கு தந்தது யார்? அவர் தந்தாரா? இல்லையே.


ராஜாவின் சாதியை அவருக்கான கவசமாக நான் இங்கு கொண்டு வருகிறேன் என நீங்கள் கருத வேண்டாம். அது என் நோக்கமல்ல. நாம் தாழ்வாக நினைக்கும் பலருக்கும் இதே நடைமுறையைத் தான் வைத்திருக்கிறோம் என்கிறேன். நாம் ஏற்றுக் கொள்ளாத அரசியலைக் கொண்ட எழுத்தாளர்களையும் இவ்வாறே நடத்துகிறோம். ஆனால் ஜெயலலிதாவை ஒருவரும் பேஸ்புக்கிலோ பேச்சாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊடகங்களிலோ ஒருமையில் பேசி கடந்த இரு பத்தாண்டுகளில் நான் கண்டதில்லை. ஆனால் பிற நடிகைகள் அப்படி பேசப்பட்டு பார்த்திருக்கிறேன். இந்த வித்தியாசம் தான் நமது பிரச்சனை என்கிறேன். நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வை விரும்பும் ஒரு மனம் இந்த சந்தர்பங்களில் எல்லாம் விழித்துக் கொள்கிறது. சாதியம் இதில் ஒரு பகுதி. சும்மா சும்மா சமூகநீதியை விரும்பும் மாநிலம் என கதறிக் கொண்டிருந்தால் போதாது, அதை நடைமுறையிலும் காட்ட வேண்டும்


 இந்த சர்ச்சையின் முடிவில் நாம் இழிவானவர்களாக எஞ்சியிருக்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...