Skip to main content

குஜராத் அணி எப்படி வென்றது?


இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் ஆடுதளம், சூழலை தவறாக கணித்து, 190-200 அடிக்கும் நோக்கில் முதல் 7-15 ஓவர்களில் ஆடியது தான். 

இதற்கு தலைவர் சஞ்சு தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் மில்லருடன் இணைந்து 15வது ஓவர் வரை சராசரியாக ஓவருக்கு 7-8 ரன்கள் அடித்திருந்தால் போதும். 110-115 வந்திருப்பார்கள். அங்கிருந்து 165-170 அடிப்பது சாத்தியமாகி இருக்கும். அது இந்த ஆடுதளத்தில் ஒரு நல்ல ஸ்கோரே. பின்னர் குஜராத் அணியினர் பேசும் போது 150க்குள் ராஜஸ்தானைக் கட்டுப்படுத்தவே விரும்பினோம், போனஸாக 130க்கு விழுந்து விட்டார்கள் என்றனர். இது அவர்கள் ஆட்டச்சூழலை சரியாக கணித்தார்கள். ஆனால் ராஜஸ்தானோ 190 வேண்டும் என தவறாக எதிர்பார்த்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த தேவையற்ற எதிர்பார்ப்பே அவர்கள் மீது அழுத்தத்தை உண்டு பண்ணியதே சஞ்சு, மில்லர், ஹெட்மெயரின் விக்கெட்டுகள் விழக் காரணமாகியது. 

இவ்வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய அணிகள் செய்த தவறு ஆழமாக மட்டையாடி 17வது ஓவரில் 2-3 விக்கெட்டுகளுக்கு மேல் எதிரணிக்கு கொடுக்காமல் இருப்பதே. பெரும்பாலான அணிகள் 12-16வது ஓவருக்குள் தேவையில்லாமல் 20 ரன் ஓவர்களை நாடி 3-4 விக்கெட்டுகளை சராசரியாக இழந்து பல வெல்ல வேண்டிய போட்டிகளை இழந்தன. அத்தவறை குறைவாக செய்த அணி குஜராத் மட்டுமே. இறுதி ஓவர் வரை மில்லர், ஹர்த்திக், திவாட்டியா போன்றவர்கள் பொறுமையாக, தன்னம்பிக்கையுடன் நின்றாடி வென்றளித்தார்கள். இன்று அவர்கள் முதலில் மட்டையாடி இருந்தாலும் அதைச் செய்திருப்பார்கள். 

கடைசியில் முன் யோசனை, திட்டமிடல், ஆட்டச்சூழலை கணித்தாடிய குஜராத்தே வென்றது. அவசரக் குடுக்கை அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் - பட்லர் கைவிட்ட நிலையில் - தோற்றது. இதில் பிற அணிகளுக்கு ஒரு முக்கிய பாடம் உள்ளது: 20 ஓவர்களை ஆடுவது 1-6 இல் வரும் மட்டையாளர்களின் பணி. அவர்கள் 3, 4 ஜோடிகளாக தம்மைப் பிரித்துக் கொண்டு 20 ஓவர்களும் ஆட வேண்டும். ஒரு இவரில் 8-10 ரன்கள் வந்தால் போதும் என கடைசி இரு பந்துகளில் ஒற்றை ரன்களுக்கு ஓட வேண்டும். இறுதி 5 ஓவர்களில் 50-60 ரன்களுக்கு மேலும் அடிக்க முடியும்.  சற்று சிரமமான ஆடுதளங்களில் இதுவே சரியான அணுகுமுறை. தட்டையான ஆடுதளங்களில் இதே பாணியில் ஆடினால் கடைசி 5 ஓவர்களில் 80 கூட அடிக்கலாம். 220 இலக்கு கிடைக்கும். ராஜஸ்தான், பேங்களூர், தில்லி போன்ற பல அணிகள் இத்தவறை செய்து, batting deep பண்ணாமல் சொதப்பினார்கள், கடைசி சில ஓவர்களை பந்து வீச்சாளர்களை ஆட விட்டார்கள். குஜராத்தைத் தவிர.

அதனாலே குஜராத் இக்கோப்பைக்கு ஒரே தகுதியான அணி! மற்ற அணிகள் இதை 10 ஓவர் போட்டியாகக் கருதி ராட்டினம் சுற்ற, குஜராத் 20 ஓவர்களையும் கணிசமாகப் பயன்படுத்தியது. அது தான் வித்தியாசம்!

என்னதான் ராஜஸ்தான், சன் ரைசர்ஸ், பெங்களூர்  போன்ற அணிகளிடம் வலுவான பந்து வீச்சு இருந்தாலும் அவர்களால் கோப்பையை அடிக்க முடியவில்லை. குஜராத்திடமும் நல்ல பந்து வீச்சு இருந்தது. ஆனால் அது போதாது. அதிரடியாளர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஆழமாக, நீடித்து ஆட வேண்டும். ஹர்த்திக்கே அப்படி பொறுப்பெடுத்து ஆடிக் காட்டினார். ஒரு மாரத்தான் ஆட்டம் போல் சளைக்காமல் பொறுமையாக ஓடினார்கள், வென்றார்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...